கல்வி அமைச்சர், செயலாளர், பரீட்சைகள் ஆணையாளர் இணைந்து நடத்திய விசேட ஊடக சந்திப்பு: தெரிவிக்கப்பட்ட முக்கிய விடயங்கள்!


இன்று கல்வி அமைச்சர், கல்வியமைச்சின் செயலாளர், பரீட்சைகள் ஆணையாளர் ஆகியோர் இணைந்து அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடத்திய விசேட ஊடக சந்திப்பின்போது தெரிவிக்கப்பட்ட முக்கிய விடயங்களை இங்கு தருகிறோம். 

1) கொழும்பு வலயம் மற்றும் ஏனைய நகர்ப்புற பாடசாலைகள் ஜுன் 20 முதல் 24 வரை மூடப்படும். 

2) ஏனைய பிரதேச பாடசாலைகளின் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு போக்குவரத்து சிரமமின்றி வர முடியுமாக இருந்தால் பாடசாலையை நடத்தலாம். 

3) இது விடுமுறை காலம். எனவே ஆசிரியர்கள் பாடசாலைக்கு செல்வது கட்டாயம் அல்ல. அவர்களின் சுய விருப்பத்தின் பேரில் தொண்டர் அடிப்படையில் பாடசாலை சென்று பணி புரியலாம். 

4) இந்த வாரம் நடைபெறாத பாடசாலைகள் வாரத்தில் மேற்கொண்ட செயற்பாடுகள் தொடர்பாக பதிவுகளை வைத்திருக்க வேண்டும். 

5) Nenasa TV, E-Thakshalawa, LMS, NIE YouTube channel என்பவற்றிற்கு மாணவர்கள் வழி காட்டப்பட வேண்டும்.

6) ஆகஸ்ட் மாத தவணை விடுமுறை குறைக்கப்படும். 

7) இந்த வருடம் உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான தேசிய ரீதியான நிகழ்ச்சித்திட்டம் எதிர்வரும் ஜூலை மாதம் ஆரம்பமாகும்.

குறிப்பு:- இந்த ஊடக சந்திப்பு தொடர்பான முழுமையான விவரங்களை விரைவில் எமது இணையதளத்தில் பதிவேற்றுவோம்.
 
கல்வி அமைச்சர், செயலாளர், பரீட்சைகள் ஆணையாளர் இணைந்து நடத்திய விசேட ஊடக சந்திப்பு: தெரிவிக்கப்பட்ட முக்கிய விடயங்கள்! கல்வி அமைச்சர், செயலாளர், பரீட்சைகள் ஆணையாளர் இணைந்து நடத்திய விசேட ஊடக சந்திப்பு: தெரிவிக்கப்பட்ட முக்கிய விடயங்கள்! Reviewed by Irumbu Thirai News on June 19, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.