உயர்தரத்தில் ஒவ்வொரு துறைக்கும் தேவையான ஆகக்குறைந்த தகைமைகள்:

September 25, 2021
 

உயர்தரத்தில் ஒவ்வொரு துறைக்கும் தேவையான ஆகக்குறைந்த தகைமைகளை இங்கு சுருக்கமாகத் தருகிறோம்.


Arts:

கலைத்துறையில் கற்பதாயின் மொழி, கணிதம் உட்பட 6 பாடங்களில் சித்தி. (குறைந்தது 3C,3S) . கணிதம் அல்லது தமிழ் சித்தி அடையவில்லையாயின் அதனை அடுத்த முறை பெற்றுத்தரும் நிபந்தனையின் கீழ் கலைத்துறையில்  இணையலாம். 2 C மாத்திரம் பெற்ற ஒருவர் கட்டாயப் பாடங்களில் உள்ள S சித்தியை பாடசாலை மட்ட கணிப்பீடு (SBA) மட்டத்தை அடிப்படையாகக் கொண்டு C யாக கணிக்கலாம். ஆனால் ஒரே நேரத்தில் இந்த இரண்டு நிபந்தனைகளையும் பாவிக்க  முடியாது. ஏதாவது ஒரு நிபந்தனையை அடிப்படையாகக் கொண்டே கலைத்துறையில் இணையலாம்.

 

Commerce:

3C, 3S என்ற நிபந்தனையில் வணிகக்கல்வி அல்லது முயற்சியாண்மை அல்லது வரலாறு அல்லது கணிதத்தில் C சித்தி அவசியம்.


Technology:

3C, 3S என்ற நிபந்தனையில் விஞ்ஞானத்தின் S அவசியம்.

 

Bio Science:

3C, 3S என்ற நிபந்தனையில் விஞ்ஞானத்தில் Cயும் கணிதத்தில் S உம் அவசியம். 


Physical Science (Maths):

3C, 3S என்ற நிபந்தனையில் கணிதத்தில் Cஉம் விஞ்ஞானத்தில் Sஉம் அவசியம்.

 

குறிப்பு:- கலைத்துறை மற்றும் தொழில்நுட்பத் துறை (Arts & Technology) என்பவற்றுக்கு மட்டுமே நிபந்தனையுடன் உயர் தரத்திற்கு சேரலாம்.

 

 

 

 
உயர்தரத்தில் ஒவ்வொரு துறைக்கும் தேவையான ஆகக்குறைந்த தகைமைகள்:  உயர்தரத்தில் ஒவ்வொரு துறைக்கும் தேவையான ஆகக்குறைந்த தகைமைகள்: Reviewed by Irumbu Thirai News on September 25, 2021 Rating: 5

வெளியிடப்பட்ட சாதாரணதர பெறுபேறு: திருத்தங்கள் செய்வது தொடர்பான அறிவித்தல்!

September 25, 2021
 

வெளியிடப்பட்ட 2020 சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தலில் திருத்தங்கள் தொடர்பாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
அது தொடர்பாக பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 

பெறுபேற்று அட்டவணையை கவனமாக பரீட்சித்துப் பார்த்து உரிய பரீட்சார்த்திகளின் பெயர்களில் அல்லது வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமாயின் அதுபற்றி 2020-10-29 ஆம் திகதிக்கு முன்னர் இத்திணைக்களத்திற்கு (பரீட்சைத் திணைக்களத்திற்கு) அறிவிக்கவும். மாற்றங்கள் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்படாவிடில் எதிர்காலத்தில் பரீட்சார்த்திகளுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் தொடர்பாக அதிபரே பொறுப்புக்கூற கட்டுப்பட்டுள்ளார் என்பதை கவனத்தில் கொள்க. மேற்குறித்த திகதிக்குப் பின்னர் செய்யப்படும் கோரிக்கைகள் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்படமாட்டாது. அவ்வாறான திருத்தங்கள் நீங்கள் முன்னர் அனுப்பி வைத்த விண்ணப்ப படிவத்தில் காணப்படுமாயின் தங்களின் எழுத்துமூல கோரிக்கையுடன் பரீட்சார்த்தியின் பெறுபேற்று அட்டவணையின் பிரதியை சமர்ப்பிக்க வேண்டும். இப்பெறுபேற்று அட்டவணையையோ அல்லது நிழற் பிரதியையோ பரீட்சார்த்திகள் தனிப்பட்ட முறையில் பார்வையிடுவதற்கு சந்தர்ப்பம் அளித்தல் மிகவும் நன்று. 
என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்ட சாதாரணதர பெறுபேறு: திருத்தங்கள் செய்வது தொடர்பான அறிவித்தல்! வெளியிடப்பட்ட சாதாரணதர பெறுபேறு: திருத்தங்கள் செய்வது தொடர்பான அறிவித்தல்! Reviewed by Irumbu Thirai News on September 25, 2021 Rating: 5

பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்ட ஊடக அறிக்கை (தமிழில்)

September 25, 2021
 

பாடசாலைகளை ஆரம்பித்தல் தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் நேற்றைய (24) தினம் வெளியிட்ட ஊடக அறிக்கையை இங்கே தருகிறோம்.

 


பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்ட ஊடக அறிக்கை (தமிழில்) பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்ட ஊடக அறிக்கை (தமிழில்) Reviewed by Irumbu Thirai News on September 25, 2021 Rating: 5

24-09-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette released on 24-09-2021

September 24, 2021
 

24-09-2021 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
 
Official Government Gazette released on 24-09-2021 
 
இதில், 
பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. கீழே உள்ள உரிய லிங்கை கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாக பார்வையிடுக. 
 
தமிழில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
 
சிங்களத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
 
முன்னைய வர்த்தமானி அறிவித்தலுக்கு செல்ல...
24-09-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette released on 24-09-2021 24-09-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette released on 24-09-2021 Reviewed by Irumbu Thirai News on September 24, 2021 Rating: 5

Marketing Management - Online Short Course - 2021 (Open University of Sri Lanka)

September 24, 2021
 

The Short Course in Marketing Management aims to introduce the key concepts and theories in marketing while comparing and contrasting them with the real marketing practices carried out by marketing professionals in organizations. 
 
 
Course Content 
 
Introduction to Management 
Introduction to Marketing 
Marketing Environment 
Segmenting, Targeting and Positioning 
Product 
Price 
Place (Distribution) 
Promotion (Marketing Communication) 
Consumers Behavior 
Service Marketing 
Corporate Social Responsibilities and marketing ethics 
Marketing Information System 
Report Writing & Summary Discussion 
Project Report 

Closing Date for Applications : Extended till 10th October 2021 (Limited to 20 students) 
 
Duration: 03 Months (Weekends) 
 
Medium : English 
 
Time Table (Online) : Saturday 1.00pm – 5.00pm 
 
Click the link below for download application: 
 
Click the link below for more details: 
 
Marketing Management - Online Short Course - 2021 (Open University of Sri Lanka) Marketing Management - Online Short Course - 2021 (Open University of Sri Lanka) Reviewed by Irumbu Thirai News on September 24, 2021 Rating: 5

Moratuwa University NDT Selection List - 2020/2021 (Round: 04)

September 24, 2021

University of Moratuwa 
Institute of Technology 
NDT Selection List - 2020/2021 (Round: 04) 
 
Click the link below for selected list:

For more details:
Moratuwa University NDT Selection List - 2020/2021 (Round: 04) Moratuwa University NDT Selection List - 2020/2021 (Round: 04) Reviewed by Irumbu Thirai News on September 24, 2021 Rating: 5

சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றிய சிறைக் கைதிகளுக்கு வந்த பெறுபேறு

September 24, 2021
 

2020 சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியிடப்பட்டிருந்தன. 
 
அந்த வகையில் இந்த பரீட்சைக்காக கொழும்பு மகசின் மற்றும் வட்டரக்க சிறைச்சாலைகளில் அமைக்கப்பட்டிருந்த விஷேட பரீட்சை நிலையங்களில் இருந்து மொத்தமாக 04 கைதிகள் பரீட்சைக்கு தோற்றியிருந்ததாக சிறைச்சாலைகள் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். 
 
இதில் மெகசின் சிறைச்சாலையில் இருந்து பரீட்சைக்கு தோற்றிய 

இருவரும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சித்தியடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதில் ஒருவர் விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதியாவார். 
 
சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு புனர்வாழ்வளித்து அவர்களை சமூகத்துக்கு விடுவிப்பது சிறைச்சாலையின் கடமைகளில் முக்கியமானதாகும். மேலும் ஒவ்வொருவரினதும் திறமைகளை இனங்கண்டு அவர்களின் திறமைகளை மேம்படுத்துவதற்கான பல ஏற்பாடுகள் சிறைச்சாலைகளில் காணப்படுகின்றன. 
 
மேலும் பொருத்தமானவர்களுக்கு உயர்கல்விக்கான வாய்ப்பும் வழங்கப்படுகிறது. அவ்வாறு உயர்கல்வியை பெற்று பட்டப் படிப்பை நிறைவுசெய்த கைதிகளும் காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றிய சிறைக் கைதிகளுக்கு வந்த பெறுபேறு சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றிய சிறைக் கைதிகளுக்கு வந்த பெறுபேறு Reviewed by Irumbu Thirai News on September 24, 2021 Rating: 5

பரீட்சை இலக்கத்தை மறந்த மாணவர்களுக்கான அறிவித்தல்!

September 24, 2021
 

2020 சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியிடப்பட்டன. இது தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்திய பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித இது தொடர்பான பல விடயங்களை தெளிவு படுத்தினார். 
 
அதாவது, 
அரச நிறுவனங்களை டிஜிட்டல் மயப்படுத்தும் அரசாங்கத்தின் கொள்கைக்கு அமைவாக பரீட்சை திணைக்களமும் கடந்த வருடத்திலிருந்து பெறுபேறுகளை பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கி வருகிறது. 

எந்த ஒரு மாணவருக்கும் பரீட்சை திணைக்களத்தின் இணையதளத்திற்கு சென்று அதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதை எந்த இடத்திலும் பாவிப்பதற்கான அதிகாரம் காணப்படுகிறது. மீண்டும் கட்டணம் செலுத்தி பெறுபேற்றை பெறவேண்டும் என்ற தேவை இல்லை. வேறு பாடசாலைகளுக்கு அனுமதி பெறுவதற்காகவும் பதிவிறக்கம் செய்யப்பட்ட இந்த பெறுபேற்றை பயன்படுத்தலாம். 
 
ஏதாவது பிரச்சினைகள் தொடர்பில் கேட்கப்பட்டால் அது தொடர்பில் பதில் அளிப்பதற்காக நானும் எனது அதிகாரிகளும் நேற்று நள்ளிரவு 12 மணி வரை திணைக்களத்தில் இருந்தோம். அதில் கேட்கப்பட்ட முக்கிய பிரச்சினைதான் தமது பரீட்சை சுட்டெண் மறந்தால் என்ன செய்வது என்பது. அப்படியானவர்கள் தமது 
 
தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளீடு செய்து பெறுபேறுகளை பார்வையிடலாம். அதுவும் முடியாதவர்கள் எமது துரித தொலைபேசி இலக்கமான 1911 என்ற இலக்கத்திற்கு அழைத்து தமது முழுப் பெயரை வழங்கினால் பெறுபேறை அறிவிக்கலாம். 
 
அதே போன்று அதிபர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், மாகாண கல்விப் பணிப்பாளருக்கு இந்த பெறுபேறுகளை Online முறையில் இன்று காலை முதல் பெற்றுக்கொள்ள முடியும். அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள Username, Password என்பவற்றை பயன்படுத்தி இந்த பெறுபேறுகளை பெற்றுக்கொள்ளலாம். 
 
அதேபோன்று இதற்கு மேலதிகமாக வெளிநாட்டு தேவைக்காக அல்லது வேறு தேவைகளுக்காக யாருக்காவது பெறுபேறுகளை பெறவேண்டியிருந்தால் அவர்களுக்கு திங்கட்கிழமை முதல் Online முறையில் பெறுபேறுகளை வழங்கும் நடவடிக்கை ஆரம்பமாகும் என தெரிவித்தார்.

பரீட்சை இலக்கத்தை மறந்த மாணவர்களுக்கான அறிவித்தல்! பரீட்சை இலக்கத்தை மறந்த மாணவர்களுக்கான அறிவித்தல்! Reviewed by Irumbu Thirai News on September 24, 2021 Rating: 5

செயன்முறை பரீட்சை பெறுபேறு இல்லாமல் 236,053 பேர் உயர் தரத்துக்கு தகுதி:

September 24, 2021
 

2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று(23) இரவு வெளியாகின. கொவிட்-19 பரவல் காரணமாக, இப்பரீட்சை இந்த வருடம் மார்ச் மாதம்தான் நடைபெற்றது. 
 
கொவிட்-19 காரணமாக, அழகியல் பாடநெறிக்கான செயன்முறைப் பரீட்சைகள் இடம்பெற்றிருக்கவில்லை. அதற்மைய, குறித்த செயன்முறைப் பரீட்சை பெறுபேறுகள் இன்றி 236,053 பேர் உயர் தரத்துக்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார். 
 
இதேவேளை பாடசாலைகள் திறக்கப்பட்டதன் பின்னர், செயன்முறைப் பரீட்சைகள் நடத்தப்பட்டு, அதன் பெறுபேறுகள் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

செயன்முறை பரீட்சை பெறுபேறு இல்லாமல் 236,053 பேர் உயர் தரத்துக்கு தகுதி: செயன்முறை பரீட்சை பெறுபேறு இல்லாமல் 236,053 பேர் உயர் தரத்துக்கு தகுதி: Reviewed by Irumbu Thirai News on September 24, 2021 Rating: 5

21.09.2021 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்

September 24, 2021
 

21.09.2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம். 
இதில், 
பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
முன்னைய அமைச்சரவை கூட்ட தீர்மானங்களைப் பார்வையிட...
21.09.2021 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் 21.09.2021 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் Reviewed by Irumbu Thirai News on September 24, 2021 Rating: 5

வெளியாகின சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள்: பார்வையிடும் முறைகள் இதோ!

September 23, 2021

 


2020 ம் ஆண்டுக்குரிய சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. 

கொரோனா நிலைமை காரணமாக இந்த வருடம் மார்ச் மாதம் அந்த பரீட்சை நடைபெற்றது.

பரீட்சை பெறுபேறுகளை பரீட்சைத் திணைக்கள இணையத்தள முகவரியில் பார்வையிடலாம்.

இணையதளத்திற்கு செல்ல கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.

https://www.doenets.lk/examresults

 

கையடக்க தொலைபேசியில் பார்வையிடும் முறை:

Mobitel

 EXAMS <index number> and send to 8884

 

Airtel

 EXAMS <index number> and send to 7545

 

Dialog

 EXAMS <index number> and send to 7777

 

Hutch

 EXAMS <index number> and send to 8888


 

 

 

வெளியாகின சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள்: பார்வையிடும் முறைகள் இதோ! வெளியாகின சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள்: பார்வையிடும் முறைகள் இதோ! Reviewed by Irumbu Thirai News on September 23, 2021 Rating: 5

தேசிய பாடசாலைகளுக்கு அதிபர்களை தெரிவு செய்தல் - 2021

September 22, 2021
 

நாட்டில் உள்ள தேசிய பாடசாலைகளுக்கு அதிபர்களை நியமிப்பதற்காக SLPS-1, SLEAS-1 மற்றும் SLEAS- 11/111 போன்ற தகுதியுடையவர்களிடமிருந்து கல்வி அமைச்சால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 
 
43 தேசிய பாடசாலைகள் SLPS-1 தகுதி உடையவர்களை கொண்டும் 31 தேசிய பாடசாலைகள் SLEAS-1 தகுதி உடையவர்களை கொண்டும் 20 தேசிய பாடசாலைகள் SLEAS- 11/111 தகுதியுடையவர்களைக் கொண்டும் நிரப்பப்பட உள்ளன. 
 
இம்முறை வெற்றிடம் நிரப்பப்படும் போது உரிய அதிபர் பதவிக்காக நியமனம் பெறும் அலுவலர் அந்த பதவியில் குறைந்தபட்சம் 03 வருடங்கள் சேவையாற்ற வேண்டும். 
 
நேர்முகப் பரீட்சையில் புள்ளி வழங்கப்படும் முறை (ஒவ்வொரு விடயத்திற்குமான உச்ச புள்ளிகள் தரப்பட்டுள்ளன) 
 
சேவை அனுபவம் -30 
 
கல்வித்தகுதி -15 
 
ஆங்கில மொழித் தேர்ச்சி - 05 
 
தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப அறிவு - 05 
 
சேவை மதிப்பீடு - 05 

கல்வி தொடர்பான ஆய்வு மற்றும் வெளியீடு - 05 
 
முன்வைப்பு - 20 
 
விடய ஆய்வு -10 
 
நேர்முகப் பரீட்சையின் போது காட்டிய ஒட்டுமொத்த திறமை மற்றும் ஆளுமை - 05 
 
 
 
விண்ணப்ப முடிவு திகதி: 12-10-2021. 
 
 
ஒவ்வொரு விடயங்களுக்குமான முழுமையான விபரங்களை கீழே காணலாம்.

 
Notice:
 
Vacancy School List:

Marking Scheme:

 
Application:
தேசிய பாடசாலைகளுக்கு அதிபர்களை தெரிவு செய்தல் - 2021 தேசிய பாடசாலைகளுக்கு அதிபர்களை தெரிவு செய்தல் - 2021 Reviewed by Irumbu Thirai News on September 22, 2021 Rating: 5

பாடசாலைகள் மீள ஆரம்பிக்கும் முறை இதோ! (வழிகாட்டல் அறிக்கை இணைப்பு)

September 22, 2021
 

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பான சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய அறிக்கை கல்வி அமைச்சின் செயலாளரிடம் சுகாதார சேவைகள் பணிப்பாளரால் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 
 
அதில் குறிப்பிடப்பட்ட முக்கிய விடயங்கள் வருமாறு: 

பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் நான்கு கட்டங்களாக இடம்பெறும். 
 
1ம் கட்டம்: 
மொத்த மாணவர் எண்ணிக்கை 200 க்கு குறைவாக உள்ள பாடசாலைகளின் ஆரம்பப்பிரிவு (தரம்:1-5) ஆரம்பித்தல். 
 
2ம் கட்டம்: 
மொத்த மாணவர் எண்ணிக்கை 200 க்கும் அதிகமான பாடசாலைகளில் ஆரம்பப்பிரிவை ஆரம்பித்தல். மேலும் மொத்த மாணவர் எண்ணிக்கை 100க்கும் குறைவான பாடசாலைகளின் சகல தரங்களையும் ஆரம்பித்தல். 
 
3ம் கட்டம்: 
சகல பாடசாலைகளிலும் தரம் 10 தொடக்கம் 13 வரையான வகுப்புகள் ஆரம்பிக்கப்படும். மேலும் மொத்த மாணவர் எண்ணிக்கை 200 க்கு குறைவான பாடசாலைகளின் சகல தரங்களும் ஆரம்பிக்கப்படும். 
 
4ம் கட்டம்: 
சகல பாடசாலைகளிலும் சகல தரங்களும் ஆரம்பிக்கப்படும். 
 
 
ஒவ்வொரு கட்டத்தையும் நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் கொரோனா நோயின் பரவல் நிலை கருத்திற் கொள்ளப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
பாடசாலை வளாகத்திற்குள் கொவிட் பரவலை தடுப்பது தொடர்பாக 2020-04-29 ம் திகதி வெளியிடப்பட்ட FHB/SHU/Let/2020 என்ற இலக்கம் கொண்ட சுகாதார வழிகாட்டல் முறைகளை பின்பற்ற வேண்டும். 
 
மாகாண, வலய, கோட்ட பாடசாலை சுகாதார குழுக்களை அழைத்து அந்தந்த பாடசாலைகளில் முன் ஆயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 
 
சுகாதார அமைச்சின் வழிகாட்டலில் கல்வி அமைச்சால் சகல பாடசாலைகளுக்கும் வழங்கப்பட்டிருக்கும் 

2021/01/04 திகதி ED/01/21/07/03/2020-111 இலக்கம் கொண்ட "சுகாதார அடிப்படையில் பாடசாலைகளை திறத்தல்" என்ற வழிகாட்டலை பின்பற்ற வேண்டும். 
 
பாடசாலைக்குள் எந்நேரமும் சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். 
 
சிற்றுண்டிச்சாலைகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும். 
 
ஒரு வகுப்பு இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு இடைவேளை இரு தடவை வழங்கப்படுவது சிறந்தது. 
 
சாப்பிடுவதற்காக முக கவசத்தை அகற்றும்போது இடைவெளி பேணப்படுவதில் கண்டிப்பாக இருக்க வேண்டும். 
 
மாணவர்களோடு சம்பந்தப்படும் ஆசிரியர்கள் உட்பட சகல தரப்பினரும் தடுப்பூசி போட்டிருத்தல் வேண்டும். 

தடுப்பூசி செலுத்தாதவர்கள் அது தொடர்பில் சிரமங்கள் இருந்தால் பிரதேசத்திற்கு பொறுப்பான சுகாதார தரப்பினருக்கு அறியப்படுத்த வேண்டும். 
 
கொவிட் அறிகுறிகளோடு மாணவர் இனங்காணப்பட்டால் உடனே மேலதிக வழிகாட்டல் மற்றும் சிகிச்சை தொடர்பாக சுகாதார வைத்திய அதிகாரி ஊடாக பிரதேசத்திற்கு பொறுப்பான வைத்தியருக்கு அறிவிக்க வேண்டும். (இதற்காக ஒவ்வொரு பிரதேசத்திற்கும் விசேட வைத்திய நிபுணர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்) 
 
பிள்ளைக்கு அவசர சிகிச்சை தேவைப்படும் என கருதினால் முதலில் வைத்தியசாலையில் அனுமதித்து விட்டு பின்னர் உரிய தரப்பினருக்கு அறிவிக்கவேண்டும். 
 
இது தொடர்பான முழுமையான வழிகாட்டலை கீழே காணலாம். 
 



பாடசாலைகள் மீள ஆரம்பிக்கும் முறை இதோ! (வழிகாட்டல் அறிக்கை இணைப்பு) பாடசாலைகள் மீள ஆரம்பிக்கும் முறை இதோ!  (வழிகாட்டல் அறிக்கை இணைப்பு) Reviewed by Irumbu Thirai News on September 22, 2021 Rating: 5

அமெரிக்கா சென்ற பிரேசில் ஜனாதிபதி சந்தித்த அவமானம்!

September 22, 2021


அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 76-வது கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்றுள்ள பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனேரோ, ஏனைய நாட்டு பிரதிநிதிகள் சிலருடன் இரவு நேர உணவுக்காக விடுதி ஒன்றுக்கு சென்றுள்ளார். 
 
இதன் போது அங்குள்ள ஊழியர்கள் அவரிடம், கொரோனா தடுப்பூசி செலுத்தியமைக்கான சான்றிதழை கேட்டுள்ளனர். தான் இன்னும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை 

என்று அவர் கூற அவருக்கு உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 
 
வேறுவழியில்லாமல் பிரேசில் ஜனாதிபதியும் உடன் சென்றவர்களும் வீதியோர உணவகம் ஒன்றில் இரவு நேர சாப்பாட்டை எடுத்துள்ளனர். இது தொடர்பில் கருத்து தெரிவித்த நிதியூயோக் மேயர் பில் டே பலசியோ, பிரேசில் ஜனாதிபதியும் ஏனைய நாட்டு பிரதிநிதிகளும் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.
 
ஒரு நாட்டின் ஜனாதிபதி என்றும் பாராமல் அங்குள்ள விதிமுறையையே அவர்கள் பின்பற்றியுள்ளமை பலரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
அமெரிக்கா சென்ற பிரேசில் ஜனாதிபதி சந்தித்த அவமானம்! அமெரிக்கா சென்ற பிரேசில் ஜனாதிபதி சந்தித்த அவமானம்! Reviewed by Irumbu Thirai News on September 22, 2021 Rating: 5

தடுப்பூசியில் முன்னுரிமை வழங்கப்படும் மாணவர்கள் பற்றி கல்வி அமைச்சரின் அறிவிப்பு!

September 21, 2021
 

மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கிய பின்னர் பாடசாலைகளை ஆரம்பிக்கும் நோக்கில் கல்வி அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 
 
இதேவேளை 200க்கு குறைவான மாணவர்களைக் கொண்ட ஆரம்ப பிரிவு பாடசாலைகளை ஆரம்பிப்பது 
 
தொடர்பான சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய அறிக்கையை இன்றைய தினம்(21) கல்வியமைச்சின் செயலாளரிடம் ஒப்படைத்ததாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார். 
 
இந்நிலையில் தடுப்பூசி வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படும் மாணவர்கள் தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன வெளியிட்டுள்ளார். 
 
அந்தவகையில் இம்முறை உயர்தரப் 

பரீட்சைக்குத் தோற்றுவிருக்கும் மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கி பைஸர் தடுப்பூசி பெற்றுக் கொடுக்கப்படும் என அவர் தெரிவித்தார். 
 
இதேவேளை 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களில் நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட மற்றும் விசேட தேவையுடைய சிறுவர்களுக்கு எதிர்வரும் 24ஆம் திகதி முதல் பைசர் தடுப்பூசி வழங்கப்படும் என ராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
தடுப்பூசியில் முன்னுரிமை வழங்கப்படும் மாணவர்கள் பற்றி கல்வி அமைச்சரின் அறிவிப்பு! தடுப்பூசியில் முன்னுரிமை வழங்கப்படும் மாணவர்கள் பற்றி கல்வி அமைச்சரின் அறிவிப்பு! Reviewed by Irumbu Thirai News on September 21, 2021 Rating: 5

"மெனிக்கே மகே ஹிதே" யொஹானிக்கு கிடைத்த பதவி

September 21, 2021
 

மெனிக்கே மகே ஹிதே.. என்ற பாடல் மூலம் குறுகிய காலத்திற்குள் உலகம் பூராவும் புகழ்பெற்றவர் இலங்கையைச் சேர்ந்த யொஹானி சில்வா (Yohani Silva). 
 
குறித்த பாடலை கடந்த மே மாதம் தனது யூடியூப் தளத்தில் பதிவிட்டார். இதுவரை அந்தப் பாடல் 118 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை (views) பெற்றுள்ளதோடு 
 
அவரது யூடியுப் தளம் 2.39 மில்லியன் Subscribers ஐயும் பெற்றுள்ளது விஷேட அம்சமாகும். 
 
இவரின் இந்த பாடல் இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் தற்பொழுது பலராலும் பாடப்பட்டு வருகிறது. 
 
விசேடமாக திரை நட்சத்திரங்கள் பலரும் தமது சமூக வலைத்தளத்தில் இந்த பாடலை பகிர்ந்துள்ளனர். 
 
இந்நிலையில் இந்த யோஹானியை கௌரவிக்கும் முகமாக அவருக்கு புதிய பதவி ஒன்று கிடைத்துள்ளது. அதாவது இந்தியா மற்றும் 
 
இலங்கைக்கு இடையிலான கலாசாரா தூதுவராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். 
 
இதற்காக இலங்கை அரசு, இந்திய தூதரகம் உட்பட பல தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். 
 
இந்நிலையில் இந்தியா செல்லவிருக்கும் யோஹானி ஹைதராபாத் மற்றும் குருகிராம் ஆகிய இடங்களில் நடைபெறவிருக்கும் 
 
நிகழ்ச்சிகளில் பாட இருக்கிறார். மேலும் இந்திய தேசிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள இருக்கிறார்.
 
மேலும் அவரது இந்திய விஜயத்திற்கு  இந்திய ரசிகர்களிடையே எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
"மெனிக்கே மகே ஹிதே" யொஹானிக்கு கிடைத்த பதவி "மெனிக்கே மகே ஹிதே" யொஹானிக்கு கிடைத்த பதவி Reviewed by Irumbu Thirai News on September 21, 2021 Rating: 5

சி.ஐ.டி. க்கு அழைக்கப்பட்ட அதிபரும் ஆசிரியையும்

September 21, 2021
 

தேசிய அதிபர் சங்கத்தின் தலைவர் மொஹான் வீரசிங்க அவர்களும், மினுவாங்கொடை வலயத்தைச் சேர்ந்த ஆசிரியை ஒருவரும் இன்று சிஐடி க்கு அழைக்கப்பட்டு ஐந்தரை மணித்தியாலத்திற்கும் மேலதிகமாக விசாரணை நடத்தி வருவதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் தலைவர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். 
 
குற்றப்புலனாய்வு திணைக்கள சுற்றுவட்டாரத்தில் இருந்து காணொளி ஒன்றை வெளியிட்டு இந்தத் தகவலை தெரிவித்தார். 
 
இதன்போது இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உட்பட இன்னும் வேறு சங்கங்களின் பிரதிநிதிகளும் அங்கு காணப்பட்டனர். 
 
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த மஹிந்த ஜயசிங்க, 
 
இந்த இருவரும் காலை 10 மணிக்கு இன்று அழைக்கப்பட்டிருந்தனர். ஐந்தரை மணித்தியாலமாகியும் (காணொளி வெளியிடும்போது பிற்பகல் சுமார் 03:30 மணி) இன்னும் வெளியே விடவில்லை. 
 
விசாகா பாடசாலையை சேர்ந்த ஆசிரியை ஒருவருக்கு தொலைபேசி அழைப்பு எடுத்ததே இவர்கள் 
 
மீதுள்ள குற்றச்சாட்டாகும். தொலைபேசி அழைப்பு எடுத்து Online வகுப்புகள் நடத்துவதைப் பற்றி விசாரித்துள்ளனர். மற்றபடி அச்சுறுத்தல் விடுக்கவில்லை. இதற்காகவே இவர்கள் இருவரும் சுமார் ஐந்தரை மணித்தியாலத்திற்கு மேலதிகமாக விசாரிக்கப்படுகின்றனர். 
 
இதைவிட பாரிய குற்றச்சாட்டுக்கள் உள்ளவர்கள் சுதந்திரமாக இருக்கிறார்கள். நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டும் இருக்கிறார்கள். இது இந்த அரசாங்கத்தின் புதிய அடாவடித்தனம். என்ன செய்தாலும் நாம் எமது போராட்டத்தை கைவிடப் போவதில்லை என தெரிவித்தார். 
 
இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஜோசப் ஸ்டாலின், 

எந்தவித அடிப்படையும் அற்ற குற்றச்சாட்டுக்காக இவர்கள் இருவரும் இவ்வளவு நேரம் விசாரிக்கப்படுகிறார்கள். பொது ஜன பெரமுன குழு ஒன்று தான் முறைப்பாடு செய்துள்ளது. சரத் வீரசேகர அமைச்சரின் ஏற்பாட்டில்தான் அனைத்தும் நடக்கிறது. 
 
அதிபர் ஆசிரியர்கள் இதுதொடர்பில் பயப்படத் தேவையில்லை. சகலவற்றிற்கும் முகங்கொடுக்க நாம் தயாராக இருக்கிறோம் என தெரிவித்தார். 
 
பிந்திக் கிடைத்த செய்தி: விசாரணையின் பின் குறித்த இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சி.ஐ.டி. க்கு அழைக்கப்பட்ட அதிபரும் ஆசிரியையும் சி.ஐ.டி. க்கு அழைக்கப்பட்ட அதிபரும் ஆசிரியையும் Reviewed by Irumbu Thirai News on September 21, 2021 Rating: 5

பல்கலைக்கழக அனுமதிக்கான மாவட்டரீதியான வெட்டுப்புள்ளிகள் வெளியானது!

September 21, 2021
 

2020 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை அடிப்படையாகக்கொண்டு பல்கலைக்கழக அனுமதிக்கான மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன. 
 
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட இந்த வெட்டுப்புள்ளிகள் புதிய மற்றும் பழைய பாடத்திட்டம் இரண்டிற்கும் வெளியிடப்பட்டுள்ளன. 
 
இதேவேளை பல்கலைக்கழக அனுமதிக்கான Z-Score  அடுத்த மாதம் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் இணைய தளத்திற்கு சென்று குறித்த வெட்டுப்புள்ளிகளைப் பார்வையிடலாம். 
 
இணையதளத்திற்கு செல்ல கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
 
பல்கலைக்கழக அனுமதிக்கான மாவட்டரீதியான வெட்டுப்புள்ளிகள் வெளியானது! பல்கலைக்கழக அனுமதிக்கான மாவட்டரீதியான வெட்டுப்புள்ளிகள் வெளியானது! Reviewed by Irumbu Thirai News on September 21, 2021 Rating: 5

தலிபான்களின் புதிய அறிவிப்பு: கேள்விக்குறியாகும் பெண்களின் கல்வி!

September 20, 2021
 

ஆப்கானில் உயர்நிலைப் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் ஆண் ஆசிரியர்களும் மாணவர்களும் மாத்திரமே பள்ளிக்கு வரலாம் என தலிபான்கள் தெரிவித்துள்ளனர். 
 
எவ்வாறாயினும் பெண்கள் பள்ளிகள் விரைவில் திறக்கப்படும். இதற்கான நடைமுறைகள் 
 
குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள். ஆசிரியர்களை எப்படிப் பிரிப்பது என்பது உள்ளிட்ட விவரங்களும் ஆலோசிக்கப்படுகின்றன என்று தாலிபன் செய்தித் தொடர்பாளர் சபியுல்லா முஜாஹித் கூறியதாக ஆப்கானிஸ்தான் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் மாணவிகள் பள்ளி செல்வதற்கான போக்குவரத்து ஏற்பாடுகளை முடிவு செய்வது குறித்தும் அதிகாரிகள் ஆலோசித்துவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 
 
பல்கலைக்கழகங்களில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி வகுப்புகள் நடத்த போதிய வசதிகள் இல்லை. எனவே புதிய விதிகளின்படி பெண்களுக்கு கல்வி கற்க வாய்ப்பு ஏற்படாது என்று சிலர் தெரிவிக்கின்றனர். 
 
மாணவிகள் பள்ளி செல்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாக இருப்பதாகவே பெற்றோர்களும் கருதுகின்றனர். 
 
2001ல் தாலிபன்கள் ஆட்சி அகற்றப்பட்ட பிறகு, ஆப்கானிஸ்தானில் கல்வி கற்போர் எண்ணிக்கை, எழுத்தறிவு பெற்றோர் எண்ணிக்கை 
 
போன்றவற்றில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டது. பெண்கள் எழுத்தறிவு விகிதம் 30 சதவீதம் வரை அதிகரித்தது. 
 
ஆனால் தலிபான்களின் தற்போதைய இந்த அறிவிப்பால் பெண்களின் உயர்கல்வி தொடர்பில் நிச்சயமற்ற நிலை தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
 
இஸ்லாமிய மதச் சட்டம் குறித்த தங்களின் புரிதலுக்கு ஏற்ப பெண்கள் படிக்கவும் வேலை செய்யவும் அனுமதிக்கப்படுவார்கள் என்று கடந்த மாதம் ஆட்சியைப் பிடித்தபோது தாலிபன்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தலிபான்களின் புதிய அறிவிப்பு: கேள்விக்குறியாகும் பெண்களின் கல்வி! தலிபான்களின் புதிய அறிவிப்பு: கேள்விக்குறியாகும் பெண்களின் கல்வி! Reviewed by Irumbu Thirai News on September 20, 2021 Rating: 5

தொழிற்சங்க நடவடிக்கையில் இருக்கும் போது ஆசிரியர்கள் ஏன் 'மொடியுல்' செய்யக்கூடாது?

September 20, 2021
 

ஆசிரியர்களுக்கான மொடியுலில் பங்குபற்றுவது தொடர்பாக தனக்கு ஆசிரியர்களிடமிருந்து அடிக்கடி அழைப்புகள் வருவதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். 
 
தற்போதைய தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடர்பாக இன்று முகநூல் காணொளி ஒன்றை வழங்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 
 
இது தொடர்பில் அவர் தெரிவித்ததாவது, 
என்னிடம் இது தொடர்பாக அடிக்கடி கேட்கின்றனர். இதைப்பற்றி அவரவர் முடிவெடுக்க வேண்டும். மொடியுலை செய்தால் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு என்ன விளைவு வரும்? செய்யாவிட்டால் என்ன விளைவு வரும்? என அவரவர் புரிந்து கொள்ள வேண்டும். 
 
இந்த விடயத்தில் மனசாட்சிப்படி ஒவ்வொருவரும் தீர்மானம் எடுக்க வேண்டும். நாம் மாணவர்களுக்கு கற்பிப்பதை நிறுத்திவிட்டு எமது பதவி உயர்வுக்கான வேலைகளை செய்வது பொருத்தமா? அவ்வாறு செய்தால் அது மனச்சாட்சிக்கு விரோதமான செயல். 
 
இதுமட்டுமல்லாமல் எமது தொழிற்சங்க நடவடிக்கைகளை 

தோல்வியடையச் செய்ய எதிர்பார்த்திருக்கும் தரப்பினருக்கு அது வாய்ப்பாகவும் அமையும். அதை வைத்து பிரச்சாரமும் செய்வார்கள். 
 
இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டுதான் நாம் மொடியுல் நடவடிக்கையில் இருந்தும் விலகுவதாக ஏற்கனவே அறிவித்துள்ளோம் என தெரிவித்தார்.
தொழிற்சங்க நடவடிக்கையில் இருக்கும் போது ஆசிரியர்கள் ஏன் 'மொடியுல்' செய்யக்கூடாது? தொழிற்சங்க நடவடிக்கையில் இருக்கும் போது ஆசிரியர்கள் ஏன் 'மொடியுல்' செய்யக்கூடாது? Reviewed by Irumbu Thirai News on September 20, 2021 Rating: 5

உங்கள் தனிப்பட்ட தரவுகள் இணையத்தில் திருடப்படாமலிருக்க என்ன செய்ய வேண்டும்?

September 20, 2021
 

தற்போதைய டிஜிட்டல் பொருளாதார உலகில் தரவுகள் என்பது முக்கியமான ஒரு விடயமாக காணப்படுகிறது. ஒவ்வொருவரினதும் இப்படிப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டு ஒரு பெரிய சந்தையே இயங்கிக்கொண்டிருக்கிறது. 
 
எனவே பொருளாதார கருமங்களுக்கு இப்படிப்பட்ட சகல தரவுகள், தகவல்கள் முக்கியமாக தேவைப்படுவதால் தற்போது இது தகவல் பொருளாதாரம் என்ற அடிப்படையில் செயல்படுகிறது. 
 
 
எது தனிப்பட்ட தரவுகள்? 

நாம் எந்த இணையத்தளத்திற்கு சென்றாலும் எம்மைப் பற்றி ஏதோ ஒரு சில தரவுகளை அவை பெற்றுக் கொள்கின்றன. சில தளங்கள் நாம் எவ்வளவு நேரம் இணையத்தில் செலவழிக்கிறோம்? எந்த நேரத்தில் இணையத்தை பயன்படுத்துகிறோம்? எப்படிப்பட்ட தகவல்களைத் தேடுகிறோம்? என்ற பொதுவான விடயங்களை பெற்றுக் கொள்கின்றன. 
 
இன்னும் சில இணையதளங்கள் இதற்கு மேலதிகமாக எமது பெயர், முகவரி, வயது, இமெயில், தொலைபேசி இலக்கம் போன்ற விடயங்களையும் பெற்றுக் கொள்கின்றன. 
 
பொதுவான தரவுகளை பெற்றுக்கொள்வது பிரச்சினை அல்ல. ஆனால் குறித்த தரவுகளை வைத்து நபர் யார் என்பதை அடையாளம் காண முடியும் என்றால் அவை தனிப்பட்ட தரவுகளாக கருதப்படும். இவ்வாறான தகவல்களை பெறுவது தனிநபர் உரிமை மீறலாகும். 
 
 
கவனமாக இருப்பது எப்படி? 
மிக முக்கியமான விடயம் என்னவென்றால் தேவைக்கு அதிகமான தகவல்களை வழங்க கூடாது. இதனால் இரு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. ஒன்று, எம்மைப் பற்றிய அதிக தகவல்கள் மூன்றாம் நபருக்கு செல்கின்றன. மற்றையது, எம்மை அவர்களது தளத்தில் அதிக நேரம் செலவழிக்க வைப்பதற்கான வாய்ப்பை நாமே அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கிறோம். உதாரணமாக, குறித்த தளம் ஒன்றில் மின்னஞ்சல் முகவரி கேட்கப்படாவிட்டால் நாம் அதை வழங்கக்கூடாது. ஆனால் கட்டாயம் மின்னஞ்சல் வழங்க வேண்டுமென்றால் 

இப்படிப்பட்ட பொதுவான விடயங்களுக்காக வேறு ஒரு மின்னஞ்சல் முகவரியை நாம் வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு தனிப்பட்ட எமது மின்னஞ்சல் முகவரியை வழங்கக்கூடாது. எனவே பொதுவான விடையங்களுக்கு ஒன்றும் தனிப்பட்ட விடயங்களுக்கு ஒன்றும் என குறைந்தது இரு மின்னஞ்சல் முகவரிகளை பேணுவது சிறந்தது. 
 
 
VPN பாவிப்பவர்கள் நினைப்பதுண்டு எம்மைப் பற்றிய தரவுகளை வலைத்தளங்களுக்கு பெறமுடியாது என்று. ஆனால் உண்மை அதுவல்ல. நாம் விபிஎன் பாவிக்கும் போது எமக்கு இணைய சேவை வசதி வழங்கும் நிறுவனங்களுக்குதான் அது தெரியாமல் போகும். ஆனால் நாம் செல்லும் வலைத்தளங்கள் எமது தரவுகளை பெற்றுக் கொள்கின்றன. எனவே விபிஎன் பயன்படுத்தும் போதும் கவனமாக செயல்பட வேண்டும். 
 
 
சில மென்பொருள்கள் அல்லது செயலிகளை நாம் குறிப்பிட்ட காலம் வரை தான் பயன்படுத்துகிறோம் என்றால் அதற்கென தற்காலிகமான தரவுகளை மட்டும் நாம் வழங்குவது போதுமாகும். 
 
சமூக ஊடக மென்பொருள் அல்லது செயலிகளை பதிவிறக்கம்(Download) செய்யும் போது நம்பகமான தளத்திலிருந்து மட்டுமே அதை பதிவிறக்கம் செய்ய வேண்டும். 
 
 
சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும்போது மிகக்கவனமாக இருக்கவேண்டும். தேவையில்லாமல் புகைப்படங்கள் மற்றும் எமது தனிப்பட்ட தரவுகளை அதில் பகிர்வதை தவிர்க்க வேண்டும். 
 
 
ஒரு மென்பொருள் அல்லது செயலியை நாம் பயன்படுத்த விரும்பினால் அது தொடர்பான தனிநபர் கொள்கை (Privacy Policy) விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் (Terms and Conditions) மூன்றாம் தரப்பு மதிப்பாய்வு (Review) போன்றவற்றை அவசியம் பரிசோதித்தே முடிவெடுக்க வேண்டும். 
 
 
எமது தரவுகளை வழங்குவதால் என்ன நேர்ந்து விடப்போகிறது என்ற அலட்சியத்தை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அது வணிகர்களால் தகவலாகவும் பயன்படுத்தப்படலாம். தவறாகவும் பயன்படுத்தப்படலாம். எமது தனிநபர் உரிமை குறித்து முதலில் நாமே கவனம் செலுத்த வேண்டும்.
உங்கள் தனிப்பட்ட தரவுகள் இணையத்தில் திருடப்படாமலிருக்க என்ன செய்ய வேண்டும்? உங்கள் தனிப்பட்ட தரவுகள் இணையத்தில் திருடப்படாமலிருக்க என்ன செய்ய வேண்டும்? Reviewed by Irumbu Thirai News on September 20, 2021 Rating: 5
Powered by Blogger.