வெளியிடப்பட்ட 2020 சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தலில் திருத்தங்கள் தொடர்பாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அது தொடர்பாக பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
பெறுபேற்று அட்டவணையை கவனமாக பரீட்சித்துப் பார்த்து உரிய பரீட்சார்த்திகளின் பெயர்களில் அல்லது வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமாயின் அதுபற்றி 2020-10-29 ஆம் திகதிக்கு முன்னர் இத்திணைக்களத்திற்கு (பரீட்சைத் திணைக்களத்திற்கு) அறிவிக்கவும். மாற்றங்கள் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்படாவிடில் எதிர்காலத்தில் பரீட்சார்த்திகளுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் தொடர்பாக அதிபரே பொறுப்புக்கூற கட்டுப்பட்டுள்ளார் என்பதை கவனத்தில் கொள்க. மேற்குறித்த திகதிக்குப் பின்னர் செய்யப்படும் கோரிக்கைகள் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்படமாட்டாது. அவ்வாறான திருத்தங்கள் நீங்கள் முன்னர் அனுப்பி வைத்த விண்ணப்ப படிவத்தில் காணப்படுமாயின் தங்களின் எழுத்துமூல கோரிக்கையுடன் பரீட்சார்த்தியின் பெறுபேற்று அட்டவணையின் பிரதியை சமர்ப்பிக்க வேண்டும். இப்பெறுபேற்று அட்டவணையையோ அல்லது நிழற் பிரதியையோ பரீட்சார்த்திகள் தனிப்பட்ட முறையில் பார்வையிடுவதற்கு சந்தர்ப்பம் அளித்தல் மிகவும் நன்று.
என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்ட சாதாரணதர பெறுபேறு: திருத்தங்கள் செய்வது தொடர்பான அறிவித்தல்!
Reviewed by Irumbu Thirai News
on
September 25, 2021
Rating:
Reviewed by Irumbu Thirai News
on
September 25, 2021
Rating:

No comments: