அமெரிக்கா சென்ற பிரேசில் ஜனாதிபதி சந்தித்த அவமானம்!



அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 76-வது கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்றுள்ள பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனேரோ, ஏனைய நாட்டு பிரதிநிதிகள் சிலருடன் இரவு நேர உணவுக்காக விடுதி ஒன்றுக்கு சென்றுள்ளார். 
 
இதன் போது அங்குள்ள ஊழியர்கள் அவரிடம், கொரோனா தடுப்பூசி செலுத்தியமைக்கான சான்றிதழை கேட்டுள்ளனர். தான் இன்னும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை 

என்று அவர் கூற அவருக்கு உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 
 
வேறுவழியில்லாமல் பிரேசில் ஜனாதிபதியும் உடன் சென்றவர்களும் வீதியோர உணவகம் ஒன்றில் இரவு நேர சாப்பாட்டை எடுத்துள்ளனர். இது தொடர்பில் கருத்து தெரிவித்த நிதியூயோக் மேயர் பில் டே பலசியோ, பிரேசில் ஜனாதிபதியும் ஏனைய நாட்டு பிரதிநிதிகளும் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.
 
ஒரு நாட்டின் ஜனாதிபதி என்றும் பாராமல் அங்குள்ள விதிமுறையையே அவர்கள் பின்பற்றியுள்ளமை பலரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
அமெரிக்கா சென்ற பிரேசில் ஜனாதிபதி சந்தித்த அவமானம்! அமெரிக்கா சென்ற பிரேசில் ஜனாதிபதி சந்தித்த அவமானம்! Reviewed by Irumbu Thirai News on September 22, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.