உயர்தரப் பரீட்சை விண்ணப்பம் தொடர்பில் அதிபர் சங்கம் எடுத்த தீர்மானம்!

 

இந்த வருடத்திற்கான உயர்தர பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை என்பவற்றுக்காக விண்ணப்பிப்பதற்கான திகதி கடந்த 15ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடைந்தது. 
 
அதிபர் ஆசிரியர் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக சில பாடசாலைகளில் இதுவரை விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்படவில்லை. 
 
இந்நிலையில் உயர்தரப்பரீட்சை விண்ணப்பங்களை மாத்திரம் எதிர்வரும் 
 
21 ஆம் திகதிக்கு முன் அனுப்பிவைக்க தமது சங்கம் தீர்மானித்துள்ளதாக தரப்படுத்தப்பட்ட அதிபர் சங்கத்தின் தலைவர் நிமல் முதுன்கொடுவ தெரிவித்துள்ளார். 
 
மாணவர்களின் நிலையை கருத்தில் கொண்டு உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை மாத்திரம் அனுப்பிவைக்க தீர்மானித்துள்ளோம். எவ்வாறாயினும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்படமாட்டாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
உயர்தரப் பரீட்சை விண்ணப்பம் தொடர்பில் அதிபர் சங்கம் எடுத்த தீர்மானம்! உயர்தரப் பரீட்சை விண்ணப்பம் தொடர்பில் அதிபர் சங்கம் எடுத்த தீர்மானம்! Reviewed by Irumbu Thirai News on September 19, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.