"மெனிக்கே மகே ஹிதே" யொஹானிக்கு கிடைத்த பதவி

 

மெனிக்கே மகே ஹிதே.. என்ற பாடல் மூலம் குறுகிய காலத்திற்குள் உலகம் பூராவும் புகழ்பெற்றவர் இலங்கையைச் சேர்ந்த யொஹானி சில்வா (Yohani Silva). 
 
குறித்த பாடலை கடந்த மே மாதம் தனது யூடியூப் தளத்தில் பதிவிட்டார். இதுவரை அந்தப் பாடல் 118 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை (views) பெற்றுள்ளதோடு 
 
அவரது யூடியுப் தளம் 2.39 மில்லியன் Subscribers ஐயும் பெற்றுள்ளது விஷேட அம்சமாகும். 
 
இவரின் இந்த பாடல் இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் தற்பொழுது பலராலும் பாடப்பட்டு வருகிறது. 
 
விசேடமாக திரை நட்சத்திரங்கள் பலரும் தமது சமூக வலைத்தளத்தில் இந்த பாடலை பகிர்ந்துள்ளனர். 
 
இந்நிலையில் இந்த யோஹானியை கௌரவிக்கும் முகமாக அவருக்கு புதிய பதவி ஒன்று கிடைத்துள்ளது. அதாவது இந்தியா மற்றும் 
 
இலங்கைக்கு இடையிலான கலாசாரா தூதுவராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். 
 
இதற்காக இலங்கை அரசு, இந்திய தூதரகம் உட்பட பல தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். 
 
இந்நிலையில் இந்தியா செல்லவிருக்கும் யோஹானி ஹைதராபாத் மற்றும் குருகிராம் ஆகிய இடங்களில் நடைபெறவிருக்கும் 
 
நிகழ்ச்சிகளில் பாட இருக்கிறார். மேலும் இந்திய தேசிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள இருக்கிறார்.
 
மேலும் அவரது இந்திய விஜயத்திற்கு  இந்திய ரசிகர்களிடையே எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
"மெனிக்கே மகே ஹிதே" யொஹானிக்கு கிடைத்த பதவி "மெனிக்கே மகே ஹிதே" யொஹானிக்கு கிடைத்த பதவி Reviewed by Irumbu Thirai News on September 21, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.