சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றிய சிறைக் கைதிகளுக்கு வந்த பெறுபேறு

 

2020 சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியிடப்பட்டிருந்தன. 
 
அந்த வகையில் இந்த பரீட்சைக்காக கொழும்பு மகசின் மற்றும் வட்டரக்க சிறைச்சாலைகளில் அமைக்கப்பட்டிருந்த விஷேட பரீட்சை நிலையங்களில் இருந்து மொத்தமாக 04 கைதிகள் பரீட்சைக்கு தோற்றியிருந்ததாக சிறைச்சாலைகள் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். 
 
இதில் மெகசின் சிறைச்சாலையில் இருந்து பரீட்சைக்கு தோற்றிய 

இருவரும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சித்தியடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதில் ஒருவர் விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதியாவார். 
 
சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு புனர்வாழ்வளித்து அவர்களை சமூகத்துக்கு விடுவிப்பது சிறைச்சாலையின் கடமைகளில் முக்கியமானதாகும். மேலும் ஒவ்வொருவரினதும் திறமைகளை இனங்கண்டு அவர்களின் திறமைகளை மேம்படுத்துவதற்கான பல ஏற்பாடுகள் சிறைச்சாலைகளில் காணப்படுகின்றன. 
 
மேலும் பொருத்தமானவர்களுக்கு உயர்கல்விக்கான வாய்ப்பும் வழங்கப்படுகிறது. அவ்வாறு உயர்கல்வியை பெற்று பட்டப் படிப்பை நிறைவுசெய்த கைதிகளும் காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றிய சிறைக் கைதிகளுக்கு வந்த பெறுபேறு சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றிய சிறைக் கைதிகளுக்கு வந்த பெறுபேறு Reviewed by Irumbu Thirai News on September 24, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.