தடுப்பூசியில் முன்னுரிமை வழங்கப்படும் மாணவர்கள் பற்றி கல்வி அமைச்சரின் அறிவிப்பு!

 

மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கிய பின்னர் பாடசாலைகளை ஆரம்பிக்கும் நோக்கில் கல்வி அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 
 
இதேவேளை 200க்கு குறைவான மாணவர்களைக் கொண்ட ஆரம்ப பிரிவு பாடசாலைகளை ஆரம்பிப்பது 
 
தொடர்பான சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய அறிக்கையை இன்றைய தினம்(21) கல்வியமைச்சின் செயலாளரிடம் ஒப்படைத்ததாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார். 
 
இந்நிலையில் தடுப்பூசி வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படும் மாணவர்கள் தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன வெளியிட்டுள்ளார். 
 
அந்தவகையில் இம்முறை உயர்தரப் 

பரீட்சைக்குத் தோற்றுவிருக்கும் மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கி பைஸர் தடுப்பூசி பெற்றுக் கொடுக்கப்படும் என அவர் தெரிவித்தார். 
 
இதேவேளை 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களில் நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட மற்றும் விசேட தேவையுடைய சிறுவர்களுக்கு எதிர்வரும் 24ஆம் திகதி முதல் பைசர் தடுப்பூசி வழங்கப்படும் என ராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
தடுப்பூசியில் முன்னுரிமை வழங்கப்படும் மாணவர்கள் பற்றி கல்வி அமைச்சரின் அறிவிப்பு! தடுப்பூசியில் முன்னுரிமை வழங்கப்படும் மாணவர்கள் பற்றி கல்வி அமைச்சரின் அறிவிப்பு! Reviewed by Irumbu Thirai News on September 21, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.