எரிபொருள் விலை நள்ளிரவு முதல் அதிகரிப்பு



இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (9) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை திருத்தியுள்ளது. 

அதன்படி, ஒக்டேன் 92 பெட்ரோல் லிட்டரின் விலை ரூ.24 அதிகரித்து ரூ.317 ஆகவும், ஒக்டேன் 95 பெட்ரோல் ரூ.25 அதிகரித்து ரூ.365 ஆகவும் உள்ளது. 

ஒட்டோ டீசலின் விலை ரூ.22 அதிகரித்து ரூ.303 ஆகவும், சூப்பர் டீசல் ரூ.24 அதிகரித்து ரூ.353 ஆகவும் உள்ளது. 

இதற்கிடையில், மண்ணெண்ணெய் லிட்டருக்கு ரூ.13 அதிகரித்து ரூ.195 ஆக உள்ளது.

மத்திய கிழக்கில் காணப்படும் பதற்ற நிலைமை மற்றும் போர் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் எண்ணெய் விலை 100 டொலரை இன்றைய தினம் தாண்டியமை குறிப்பிடத்தக்கது
எரிபொருள் விலை நள்ளிரவு முதல் அதிகரிப்பு எரிபொருள் விலை நள்ளிரவு முதல் அதிகரிப்பு Reviewed by Irumbu Thirai News on March 09, 2026 Rating: 5

No comments:

Powered by Blogger.