பாடசாலைகளை திறந்தாலும் கற்பித்தல் ஒரு போதும் நடக்காது - ஜோசப் ஸ்டாலின்

September 29, 2021
 

பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டாலும் ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினை தீரும் வரை அவர்கள் கற்பித்தல் செயற்பாட்டில் பங்கேற்கமாட்டார்கள் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
 
அதிபர், ஆசிரியர்களின் பிரச்சனையை தீர்க்காமல் கல்வி அமைச்சின் செயலாளர் ஊடக சந்திப்புகளில் முரண்பாடான அறிக்கைகளை கூறி வருவதாகவும் அவர் தெரிவித்தார். 
 
இது தொடர்பான செய்தி இன்றைய(29) தினகரன் பத்திரிகையில் வெளிவந்துள்ளதைக் கீழே காணலாம்.


 
பாடசாலைகளை திறந்தாலும் கற்பித்தல் ஒரு போதும் நடக்காது - ஜோசப் ஸ்டாலின் பாடசாலைகளை திறந்தாலும் கற்பித்தல் ஒரு போதும் நடக்காது - ஜோசப் ஸ்டாலின் Reviewed by Irumbu Thirai News on September 29, 2021 Rating: 5

பல்கலைக்கழகங்களை மீள ஆரம்பித்தல்: UGC யின் அறிவிப்பு!

September 29, 2021
 

பல்கலைக்கழகங்களை மீள ஆரம்பித்தல் தொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். 
 
அதாவது 20 - 30 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கான தடுப்பூசி வழங்கும் பணிகளை அரசாங்கம் அடுத்த மாத இறுதிக்குள் நிறைவு செய்யுமாயின் எதிர்வரும் 
 
நவம்பர் மாதம் தொடக்கம் பல்கலைக்கழகங்களை மீள ஆரம்பிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார். 
 
மேலும், பல வருடங்களுக்கு பிறகு இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 10,000 ஆல் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 42,000 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். எதிர்காலத்திலும் இதுபோன்ற அதிகரிப்பினை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
பல்கலைக்கழகங்களை மீள ஆரம்பித்தல்: UGC யின் அறிவிப்பு! பல்கலைக்கழகங்களை மீள ஆரம்பித்தல்: UGC யின் அறிவிப்பு! Reviewed by Irumbu Thirai News on September 29, 2021 Rating: 5

சமூக வலைத்தள பிரபலங்களுக்கு சம்மன் அனுப்பிய சவுதி அரேபியா!

September 28, 2021
 

தவறான விளம்பரங்களையும் பதிவுகளையும் வெளியிட்டதாக 5 சமூக வலைத்தள பிரபலங்களுக்கு சவுதி அரேபிய ஊடக ஒழுங்குமுறை அமைப்பு சம்மன் அனுப்பியுள்ளதாக சவுதி அரேபியாவின் அரச செய்தி நிறுவனமான SPA கூறியுள்ளது. 
 
இந்த வருடம் மட்டும் இதுவரை சமூக வலைத்தளங்களில் விதிமுறைகளை மீறியதாக 
 
65 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக சவுதி அரேபிய ஊடக ஒழுங்குமுறை அமைப்பு தெரிவித்துள்ளது. 
 
சமூக வலைத்தளங்களில் விதிமுறைகளை யாராவது மீறினால் அவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கும் வகையில் சட்டங்கள் சவுதியில் இருக்கின்றன.
சமூக வலைத்தள பிரபலங்களுக்கு சம்மன் அனுப்பிய சவுதி அரேபியா! சமூக வலைத்தள பிரபலங்களுக்கு சம்மன் அனுப்பிய சவுதி அரேபியா! Reviewed by Irumbu Thirai News on September 28, 2021 Rating: 5

செயற்பாட்டு பரீட்சைக்குரிய மாணவர்களை உயர் தரத்திற்கு அனுமதித்தல்: வெளியானது சுற்றறிக்கை!

September 28, 2021
 

செயற்பாட்டு பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்களை உயர் தரத்திற்கு அனுமதித்தல் தொடர்பாக கல்வி அமைச்சு இன்றைய தினம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அதனைக் கீழே காணலாம். 
 
சுற்றுநிறுப இலக்கம்: 18/2021 
 
மாகாண பிரதம செயலாளர்கள், 
மாகாண கல்வி செயலாளர்கள், 
மாகாண கல்விப் பணிப்பாளர்கள், 
வலயக் கல்விப் பணிப்பாளர்கள், 
கோட்ட பிரதி / உதவி கல்வி பணிப்பாளர்கள், 
பிரிவெனாதிபதிகள்,
சகல அரச பாடசாலை அதிபர்களுக்கு, 
 
2020 - க.பொ.த. (சாதாரண தர) பரீட்சையில் செயற்பாட்டுப் பரீட்சையுடன் கூடிய அழகியல் பாடத்திற்கு தோற்றிய மாணவர்களை கா. பொ. த.  (உயர்தர) வகுப்புகளுக்கு அனுமதித்தல். 
 
கபொ.த. (உயர்தர) வகுப்புகளுக்கு மாணவர்களை அனுமதித்தல் தொடர்பாக இதற்கு முன்னர் வெளியிடப்பட்டுள்ள 2008-4-30 ஆம் திகதி 2008/17 ஆம் இலக்கத்தை கொண்ட சுற்றுநிறுபம் மற்றும் இது தொடர்பாக வெளியிடப்பட்ட சுற்றுநிறுப திருத்தங்களுக்கு மேலதிகமானது. 
 
2.0 இச்சுற்றுநிறுப அறிவுறுத்தல்கள் 2020 க. பொ. த. (சாதாரண தரப்) பரீட்சையில் செயற்பாட்டு பரீட்சையுடன் கூடிய அழகியல் பாடத்திற்கு தோற்றிய மாணவர்களை க.பொ.த. (உயர்தர) வகுப்புகளுக்கு அனுமதித்து கொள்வதற்கு மட்டுமே பொருந்தும். 
 
3.0 க.பொ.த (சாதாரண தர) பரீட்சை - 2020 பெறுபேறுகளின் படி செயற்பாட்டு பரீட்சையுடன் கூடிய அழகியல் பாடத்திற்கு தோற்றிய மாணவர்களை 12 ஆம் தரத்திற்கு அனுமதித்துக்  கொள்வதற்காக குறைந்தபட்ச தகைமைகளைப் பொருத்திக் கொள்ள வேண்டிய முறை: 

 
3.1 மேற்படி 3.0(அ) இல் குறிப்பிடப்பட்டுள்ள தகைமைகளின் அடிப்படையில் தேவைப்படும் இரண்டு திறமை சித்திகளில் ஒன்று இல்லாத சந்தர்ப்பத்தில் மாத்திரம் 2020 - க. பொ. த. (சாதாரண தரப்) பரீட்சையில் எழுத்துப் பரீட்சையில் சாதாரண சித்தியைப் பெற்று அப்பாடத்திற்கு பாடசாலையை அடிப்படையாகக் கொண்ட கணிப்பீட்டு வேலைத்திட்டத்தின் கீழ் சாதாரணம் அல்லது அதற்கு மேற்பட்ட தேர்ச்சியினைப் பெற்றிருப்பின் அது ஒரு திறமை சித்தியாக கொள்ளப்படும். இது தாய் மொழி மற்றும் கணித பாடத்திற்கு பொருந்தாது. 
 
3.2 பாடசாலை பரீட்சார்த்தியாக முதற் தடவை தோற்றிய பின்னர் இரண்டாம் தடவையாக க.பொ.த. (சாதாரண தர) பரீட்சையில் செயற்பாட்டு பரீட்சையுடன் கூடிய அழகியல் பாடத்திற்கு தோற்றிய மாணவர் ஒருவருக்கு மேலே 3.1இல் குறிப்பிடப்பட்டுள்ளதன் படி, தகைமைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக முதற் தடவையில் பெற்றுக்கொண்ட பாடசாலையை அடிப்படையாகக் கொண்ட கணிப்பீட்டு வேலைத்திட்டத்தின் பெறுபேற்றினை பயன்படுத்திக் கொள்ள முடியும். 
 
3.3 க.பொ.த. (சாதாரண தர) பரீட்சையில் செயற்பாட்டு பரீட்சையுடன் கூடிய அழகியல் பாடத்திற்கு தோற்றிய மாணவர்களை க.பொ.த. (உயர்தர) வகுப்புகளுக்கு அனுமதிக்கும் போது அதி திறமை சித்தி அல்லது விசேட திறமைச் சித்தி தேவைகளுக்கும் செயற்பாட்டு பரீட்சையுடன் கூடிய அழகியல் பாடங்களில் பெற்றுக் கொண்டுள்ள, பாடசாலையை அடிப்படையாகக் கொண்ட கணிப்பீட்டு வேலைத்திட்டத்தின் தேர்ச்சி மட்டத்தினை உரியதாக்கிக் கொள்ள வேண்டும். 
 
3.4 க.பொ.த. (சாதாரண தர) - 2020 பரீட்சையில் செயற்பாட்டு பரீட்சையுடன்  கூடிய அழகியல் பாடத்திற்கு தோற்றி, அப்பாடங்கள்  உள்ளடங்கலாக க.பொ.த. (உயர் தர) த்தினைக் கற்பதற்கு எதிர்பார்த்திருப்பின் அப் பாடத்திற்காக பாடசாலையை அடிப்படையாகக் கொண்ட கணிப்பீட்டு வேலைத்திட்டத்தின் கீழ் திறமை தேர்ச்சி அல்லது அதற்கு மேற்பட்ட தேர்ச்சி மட்டத்தினை பெற்றிருத்தல் வேண்டும். எனினும், பாடசாலையை அடிப்படையாகக் கொண்ட கணிப்பீட்டு வேலைத்திட்டத்தின் கீழ் தேர்ச்சி மட்டம்  குறிப்பிடப்பட்டிருக்காத சந்தர்ப்பத்தில் மாத்திரம் அதற்கான அனுமதியை கல்வி அமைச்சிடம் (பாடசாலை செயற்பாட்டு கிளை) பெற்றுக்கொள்ளல் வேண்டும். 

3.5 க.பொ.த. (சாதாரண தர) - 2020 பரீட்சையில் செயற்பாட்டு பரீட்சையுடன் கூடிய அழகியல் பாடத்திற்கு தோற்றிய மாணவர்கள் 2021 ஆம் வருடத்தில் க.பொ.த. (உயர் தரம்) 12ஆம் தரத்தில் அனுமதிக்கும் போது மேற்படி அறிவுறுத்தல்களின்படி நடவடிக்கை எடுத்தல் வேண்டும். 
 
மேலே குறிப்பிடப்பட்டுள்ள மேலதிக விதிமுறைகளுக்கு மேலதிகமாக உரிய சுற்றுநிருபங்களில் உள்ளடக்கப்பட்டுள்ள ஏனைய சகல விடயங்களும் அவ்வாறே நடைமுறையிலிருக்கும். இச் சுற்றறிக்கையில் எழும்  எந்தவொரு பிரச்சினை தொடர்பாகவும் கல்வி செயலாளரின் முடிவே இறுதியானதாக இருக்கும். 
 
பேராசிரியர் கே. கபில சி. கே. பெரேரா. 
செயலாளர். 
கல்வி அமைச்சு.
செயற்பாட்டு பரீட்சைக்குரிய மாணவர்களை உயர் தரத்திற்கு அனுமதித்தல்: வெளியானது சுற்றறிக்கை! செயற்பாட்டு பரீட்சைக்குரிய மாணவர்களை உயர் தரத்திற்கு அனுமதித்தல்: வெளியானது சுற்றறிக்கை! Reviewed by Irumbu Thirai News on September 28, 2021 Rating: 5

வரலாற்றில் முதற் தடவையாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பதவிக்கு விண்ணப்பம் கோர தீர்மானம்

September 28, 2021
 

இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் ஆணையாளர் பதவிக்கு இதுவரை காலமும் சேவை அனுபவம் மற்றும் நிர்வாக சேவையின் சிரேஷ்டத்துவம் அடிப்படையில்தான் நியமனம் இடம்பெற்றது. 
 
ஆனால் பரீட்சை திணைக்கள வரலாற்றிலேயே முதல் தடவையாக 
 
விண்ணப்பம் கோரல் மூலம் குறித்த பதவிக்கு நியமனம் வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. 
 
தற்போதைய நிலையில் குறித்த பதவிக்காக பொருத்தமான தேர்ச்சி மட்டத்தை கொண்டிருப்பவர்கள் கல்வி அமைச்சின் நிர்வாக சேவையில் இல்லை என்பதனால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அறியமுடிகிறது. 
 
இதற்கான விண்ணப்பங்கள் விரைவில் கோரப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். 
 
முன்னாள் கல்வி அமைச்சர் ரிச்சர்ட் பத்திரனவின் காலத்தில் மாத்திரமே குறித்த பதவிக்கு வெளி நபர் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
 
இது தொடர்பாக வெளிவந்த பத்திரிகை செய்தியையும் கீழே காணலாம்.

 
வரலாற்றில் முதற் தடவையாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பதவிக்கு விண்ணப்பம் கோர தீர்மானம் வரலாற்றில் முதற் தடவையாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பதவிக்கு விண்ணப்பம் கோர தீர்மானம் Reviewed by Irumbu Thirai News on September 28, 2021 Rating: 5

பாடசாலைகள் ஆரம்பித்தால் விடுமுறை இல்லை: - கல்வி அமைச்சு

September 28, 2021
 

அக்டோபர் மாதத்திலிருந்து கட்டங்கட்டமாக பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும். அவ்வாறு பாடசாலைகள் ஆரம்பித்தால் தவணை விடுமுறை வழங்கப்படமாட்டாது என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். 
 
இதுதொடர்பாக இன்றைய(28) காலை கதிர் பத்திரிகையில் வெளியான செய்தியைக் கீழே காணலாம்.

 
பாடசாலைகள் ஆரம்பித்தால் விடுமுறை இல்லை: - கல்வி அமைச்சு பாடசாலைகள் ஆரம்பித்தால் விடுமுறை இல்லை: - கல்வி அமைச்சு Reviewed by Irumbu Thirai News on September 28, 2021 Rating: 5

பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் தொடர்பான அறிவித்தல்!

September 28, 2021
 

நாட்டிலுள்ள பல்கலைக் கழகங்களுக்கு மாணவர்களை அனுமதிக்கும் நோக்கில் அதற்கான வெட்டுப்புள்ளிகள் அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார. 
 
கடந்த வருடம் (2020) நடைபெற்ற உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 

பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்த மாணவர்களை இணைத்துக் கொள்ளும் வகையில் இந்த வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்படுவதாக என அவர் மேலும் தெரிவித்தார்.
பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் தொடர்பான அறிவித்தல்! பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் தொடர்பான அறிவித்தல்! Reviewed by Irumbu Thirai News on September 28, 2021 Rating: 5

Diploma in Management - 2021 (Uva Wellassa University)

September 27, 2021
 

Uva Wellassa University 
Diploma in Management 2021/2022 
Offered by the Faculty of Management with the collaboration of the Center for Open and Distance Learning (CODL) 
 
Duration: One Year (2 Semesters) 
 
Medium: English 
 
Lectures: On Saturday 
 
Course Fee: 45,000 LKR (Can be paid in two installments) 
 
Registration Fee : Rs. 1,000.00 
 
Selection Procedure : Through an Interview 
 
Closing Date: 2021-10-22
 
Click the link below for full details and application:
 
Diploma in Management - 2021 (Uva Wellassa University) Diploma in Management - 2021 (Uva Wellassa University) Reviewed by Irumbu Thirai News on September 27, 2021 Rating: 5

பாகிஸ்தானை உருவாக்கிய முகமது அலி ஜின்னாவின் சிலை குண்டு வைத்து தகர்ப்பு!

September 27, 2021
 

பாகிஸ்தான் நாட்டை உருவாக்கிய முகமது அலி ஜின்னாவின் சிலை குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. பாகிஸ்தான், பலூசிஸ்தான் மாகாணத்தின் குவாடர் பகுதியில் உள்ள முகமது அலி ஜின்னாவின் சிலை வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது. 
 
இதற்கு பலூச் விடுதலை முன்னணி என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. பாகிஸ்தானில் அண்மைக்காலமாக வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. ஆனால் இந்த சிலை தகர்ப்பு சம்பவத்திற்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை. 

பாகிஸ்தானை உருவாக்கிய முகமது அலி ஜின்னாவின் சிலை குண்டு வைத்து தகர்ப்பு!  பாகிஸ்தானை உருவாக்கிய முகமது அலி ஜின்னாவின் சிலை குண்டு வைத்து தகர்ப்பு! Reviewed by Irumbu Thirai News on September 27, 2021 Rating: 5

இன்றுடன் Google ற்கு 23 வயது: Google பற்றி 23 சுவாரஸ்ய தகவல்கள்...

September 27, 2021
 

கூகுள் தொடங்கி இன்றுடன்(27/9/2021) 23 வருடங்களாகின்றன. எனவே இதை முன்னிட்டு கூகுள் தொடர்பாக 23 சுவாரஸ்ய தகவல்களை இங்கே பகிர்ந்து கொள்கிறோம். 

(1) அதிகம் தேடப்படும் மற்றும் பார்க்கப்படும் இணையதளம் இதுவாகும். 
 
(2) கல்லூரி மாணவர்கள் இருவரால் உருவாக்கப்பட்டதே Google. லேரி பேஜ் மற்றும் செர்கே ப்ரின் என்பவர்களாலேயே உருவாக்கப்பட்டது. இணையதளங்களை தரவரிசைப்படுத்தும் ஓர் தளமாகவே இதை உருவாக்க விரும்பினர். அதாவது ஒரு குறிப்பிட்ட இணையதளத்தின் இணைப்பை எத்தனை இணைய தளங்கள் பகிர்கின்றன என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்த தரவரிசை உருவாக்கப்பட்டது. 
 
(3) Google என்ற சொல் கூகொல் (Googol) என்ற சொல்லிலிருந்து வந்தது. அதாவது ஒன்றுக்கு பக்கத்தில் 100 பூச்சியங்களைப் போடுவதால் வரும் எண்ணைக் குறிக்கவே இந்த கூகொல் என்ற சொல் பயன்படுகிறது. எவ்வளவு தகவல்களை இதில் தேட விரும்புகிறோம் என்பதை குறிக்கவே இந்த வார்த்தையைப் பயன்படுத்தினர். 
 
(4) 1998 இல் முதல் கூகுள் டூடுல் உருவாக்கப்பட்டது.'burning man' என்ற நிகழ்வுக்காக இது உருவாக்கப்பட்டது. 
 
(5) முதல் வீடியோ டூடுல் ஜோன் லெனனின் 70 வது பிறந்த நாளுக்காக உருவாக்கப்பட்டது. 
 
(6) கூகுளின் தலைமை அலுவலகம் கலிபோர்னியாவில் உள்ள சிலிகான் வேலியில் அமைந்துள்ளது. இந்த தலைமை அலுவலகம் கூகுள் ப்ளக்ஸ் என அழைக்கப்படுகிறது. 

(7) தலைமை அலுவலகத்தில் டி-ரெக்ஸ் டைனோசரின் பெரிய சிலை காணப்படுகிறது. இந்த சிலை அடிக்கடி பிளமிங்கோ பறவையால் முழுமையாக மறைக்கப்படும். கூகுள் எப்போதுமே அழிந்து விடக்கூடாது என்பதை ஊழியர்களுக்கு உணர்த்துவதற்காகவே இவ்வாறு செய்யப்படுவதாக ஒரு வதந்தி இருக்கிறது. 
 
(8) கூகுளின் முதல் சேர்வர் (Server) லெகோ என்ற பிளாஸ்டிக் பொம்மை பாகங்களால் தயாரிக்கப்பட்ட பெட்டியில் தான் அமைந்திருந்தது. 

(9) கூகுளின் தலைமை அலுவலகம் மிகவும் பசுமையாக இருக்கும். அங்குள்ள புற்களை சீர் செய்வதற்கு ஊழியர்களுக்கு பதிலாக ஆடுகளே இருக்கும். 
 
(10) தமது செல்லப் பிராணியான நாய்களை கொண்டு வருவதற்கு Google இன் ஊழியர்களுக்கு அனுமதி உண்டு. 
 
(11) கூகுளில் இமேஜ் தேடுதல் முறை 2001 இல் ஆரம்பிக்கப்பட்டது. 
 
(12) Google தனது இமெயில் சேவையை Gmail என்ற பெயரில் 1-4-2004 இல் ஆரம்பித்தது. 
(13) கூகுள் என்ற வார்த்தை 2006 இல் முதன்முதல் அகராதியில் சேர்க்கப்பட்டது. அதன் பொருளாக "கூகுளை பயன்படுத்தி தகவலைத் தேடிப் பெறுதல்" என குறிப்பிடப்பட்டிருந்தது. 
 
(14) 2006இல் 1.5 பில்லியன் டொலருக்கு யூடியூப் ஐ கூகுள் வாங்கியது. தற்போது இதில் ஒவ்வொரு நிமிடத்திற்கும் 400 மணித்தியால அளவிற்கு வீடியோக்கள் பதிவேற்றப்படுகின்றன. 
 
(15) ஒவ்வொரு நாளும் வேறு எதிலும் தேவைப்படாத 15%மான தேடல்கள் கூகுளில் மாத்திரமே தேடப்படுகின்றன. 
 
(16) 2018 ஏப்ரல் தொடக்கம் 100 சதவீத புதுப்பிக்கத்தக்க ஆற்றலை மட்டும் பயன்படுத்தும் நிறுவனமாக கூகுள் மாறியது. அதாவது 1KW மின்சாரத்தை பயன்படுத்தினால் அது முழுமையாக புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் உற்பத்தி செய்யப்பட்டதாக இருக்கும். 
 
(17) கூகுளிற்கு 6 பிறந்த நாட்கள். ஆனால் செப்டம்பர் 27 ஐயே இது தேர்ந்தெடுத்தது. 
 
(18) கூகுள் ஹோம் பேஜ் (Home Page) குறைந்தபட்சம் 80 மொழிகளில் வழங்கப்படுகின்றது. 

(19) நமது தேடலின் முடிவை தருவதற்கான Google இன் கணிப்பு ஆற்றலின் அளவு அப்பலோ 11 விண்கலம் மூலம் விண்வெளி வீரர்களை நிலவிற்கு அனுப்புவதற்கு தேவைப்பட்ட கணிப்பு ஆற்றலின் அளவுக்கு சமம் என்பது குறிப்பிடத்தக்கது.  
 
(20) கூகுளை உருவாக்கியவர்களில் ஒருவரான லாரி, 1995இல் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தபோது, அவருக்கு அந்த பல்கலைக்கழகத்தை சுற்றி காட்டுவதற்காக செர்கே கேட்டுக் கொள்ளப்பட்டார். பின்னர் இருவரும் நண்பர்களாகி "Backrub" என்ற தேடுபொறியை உருவாக்கினர். பின்னர் Backrub - Googol என மாற்றினர். (Googol என்பது 1 ஐ தொடர்ந்து 100 பூச்சியங்கள் இருப்பதற்கு கணிதத்தில் பயன்படுத்தப்படும் சொல்). ஆனால் நடந்தது என்னவென்றால் லாரி பேஜ் அதன் எழுத்தை தவறாக எழுதியதால் உருவானதே கூகுள் (Google). பின்நாளில் அதையே பெயராக வைத்துவிட்டனர். 
 
(21) கூகுள் நிவ்ஸ் செப்டம்பர் 2002 இல் ஆரம்பிக்கப்பட்டது. 

(22) கூகுள் அனலிட்டிக்ஸ் நவம்பர் 2005 இல் தொடங்கப்பட்டது, இது வலைத்தள ட்ராஃபிக்கை (Website Traffic)  கண்காணித்து அறிக்கை செய்கிறது.
 
(23) Google தற்போது வெறுமனே ஒரு தேடுபொறியாக மட்டும் கருதப்படுவதில்லை. செயற்கை நுண்ணறிவு, ஓட்டுனர்கள் இல்லாத கார்கள், புதிய விளையாட்டு தளம் போன்ற பல்வேறு தொழில்நுட்ப அம்சங்களை உள்ளடக்கிய எதிர்கால வளர்ச்சியின் உதாரணமாகவே கருதப்படுகிறது. 

இன்றுடன் Google ற்கு 23 வயது: Google பற்றி 23 சுவாரஸ்ய தகவல்கள்... இன்றுடன் Google ற்கு 23 வயது: Google பற்றி 23 சுவாரஸ்ய தகவல்கள்... Reviewed by Irumbu Thirai News on September 27, 2021 Rating: 5

பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுத்த இஸ்லாமிய நாடுகள்!

September 27, 2021
 

இந்திய நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரில் மக்கள் ஒடுக்கப்படுவதாகவும், ஓஐசி (இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு) இஸ்லாமிய உலகத்தின் மீதே அவர்கள் நம்பிக்கை வைத்திருப்பதாகவும், நியூயார்க்கில் OIC யின் தொடர்பு குழுவில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி தெரிவித்தார். 
 
இது மாத்திரமன்றி ஐக்கிய நாடுகள் பொதுச் சபை மற்றும் மனித உரிமைகள் கவுன்சில் உள்ளிட்ட சகல முக்கிய மன்றங்களிலும் இந்தப் பிரச்சினையை OIC உறுப்பு நாடுகள் எழுப்ப வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். 
 
ஆனால் பாகிஸ்தான் எதிர்பார்த்ததற்கு மாற்றமாகவே நடைபெற்றது. 
 
ஐநா பொதுச் சபையில் உரையாற்றிய சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான், ஹூதி பயங்கரவாதத்தைப் பற்றி பேசினார். சூடான் மற்றும் எகிப்துக்கு இடையிலான தண்ணீர் பிரச்சினை பற்றியும் பேசினார். லிபியா மற்றும் சிரியா பற்றிப் பேசினார். சவுதிக்கு தற்காப்பு உரிமை உள்ளது என்றும் கூறினார். ஆப்கானிஸ்தான் தொடர்பாகவும் பேசினார். ஈரான் பற்றியும் பேசினார். அணு ஆயுதங்கள் பற்றி கவலை வெளியிட்டார். ஆனால் 

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இந்தியாவுடனான அதன் வளர்ந்து வரும் உறவுக்கு முக்கியத்துவம் .கொடுத்து இந்த விவகாரத்தை  தவிர்த்திருக்கலாம் என அவதானிகள் தெரிவிக்கின்றனர். 
 
ஈரானின் புதிய ஜனாதிபதி இப்ராஹிம் ரயீசி ஐநா பொதுச்சபையில் உரையாற்றுகையில் காஷ்மீர் தொடர்பாக ஒரு வார்த்தை கூட பேசவில்லை. 
 
ஐநா பொதுச் சபையில் உரையாற்றிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உலகெங்கிலும் உள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பேசினார். ஆனால் காஷ்மீர் தொடர்பாக ஒரு வார்த்தை கூட பேசவில்லை. 
 
ஆனால் துருக்கி ஜனாதிபதி எர்தூகான் மாத்திரம் தனது உரையில், 

காஷ்மீர் பற்றி பேசினார். ஆனால் அவரது தொணியும் முன்னரைப் போலல்லாமல் மென்மையாக மாறி இருந்தது. பேச்சுவார்த்தை மூலம் இந்தப் பிரச்சினையை தீர்க்கப்பட வேண்டும் என்று பொதுவாக கூறிவிட்டார். 
 
காஷ்மீர் பற்றி இதற்கு முன்னர் துருக்கி ஜனாதிபதியும் மலேசியாவின் மகாதிர் முஹம்மதும் சர்வதேச மன்றங்களில் பேசி வந்தனர். ஆனால் மஹாதீர் முஹம்மத் தற்போது பதவியில் இல்லை. 
 
பாகிஸ்தானுடனான சவுதி அரேபியாவின் உறவும் பிரச்சினையில்லை. 2018 இல் இம்ரான்கான் பதவிக்கு வந்தபோது 3 பில்லியன் டொலர் கடனாகவும் அதே பெறுமதியுடைய எண்ணையையும் கடனாக பாகிஸ்தானுக்கு சவுதி வழங்கியது. ஆனால் காஷ்மீருக்கான சிறப்பு அரசியலமைப்பு அந்தஸ்தை இந்தியா நீக்கியபோது பாகிஸ்தானுக்கு சவுதியின் ஆதரவு கிடைக்கவில்லை. இதற்காக சவுதி அரேபியா OIC கூட்டத்தை கூட்டவில்லை என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குற்றம் சுமத்தி இருந்தார். இதன் காரணமாக கோபமடைந்த சவுதி அரேபியா தான் வழங்கிய கடனை முன்கூட்டியே திருப்பி செலுத்துமாறு பாகிஸ்தானிடம் கூறியது குறிப்பிடத்தக்கது. 
 
எவ்வாறாயினும் OIC என்ற இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளிலிருந்து பாகிஸ்தான் ஏமாற்றத்தையே சந்தித்துள்ளது.
பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுத்த இஸ்லாமிய நாடுகள்! பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுத்த இஸ்லாமிய நாடுகள்! Reviewed by Irumbu Thirai News on September 27, 2021 Rating: 5

அரச ஊழியர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களும் அதற்கான தீர்வுகளும் - பாகம் 05

September 26, 2021
 

தாபன விதிக்கோவை மற்றும் அரசாங்க நிர்வாக சுற்றறிக்கைகளில் நேரடியாக உள்ளடக்கப்படாத விடயங்கள் தொடர்பில் அரசாங்க ஊழியர்களுக்கு ஏற்படும் சந்தேகத்திற்கான தீர்வுகள் இங்கே வழங்கப்படுகின்றன. இவை தாபனப் பணிப்பாளரினால் வழங்கப்பட்ட பதில்களாகும். 
 
இவ்வாறு அரச நிறுவன தலைவர்களால் அடிக்கடி வினவப்பட்ட விடயங்களுக்கான பதில்களை கட்டங்கட்டமாக இங்கே தருகிறோம். 

குறிப்பு: தொடர்புடைய சுற்றறிக்கைகள் வர்த்தமானி என்பன இணைக்கப்பட்டுள்ளன.

பாகம் - 05

 
(21) மத்திய அரசின் உத்தியோகத்தர்களின் பதவி உயர்வுகள் மற்றும் நியமனங்களை முற்தேதியிடல் தொடர்பாக எழும் பிரச்சினைகள் தொடர்பாக செயற்பட வேண்டியது எவ்வாறு? 
 
20.02.2009 ஆந் திகதிய 1589/30 என்னும் இலக்கமுடைய வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயற்பாட்டு நடைமுறை விதிகளுக்கு அவதானத்தைச் செலுத்தி குறித்த அறிவுரைகளை பொதுச் சேவைகள் ஆணைக்குழுவிடமிருந்து பெற்றுக் கொள்ளல் வேண்டும். 
 
குறித்த வர்த்தமானிகளைப் பார்வையிட... 
 
 
(22) 2005.07.15 ஆந் திகதிய அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 20/94 (II) இன் ஏற்பாடுகளை, 31.12.1980 ஆந் திகதியின் பின்னர் அரச சேவையின் பொருட்டு சேர்த்துக் கொள்ளப்பட்ட உத்தியோகத்தர்களின் பொருட்டு ஏற்புடையதாக்கிக் கொள்ள முடியுமா? 
 
முடியாது. 
 
குறித்த சுற்றறிக்கையைப் பார்வையிட..
 
 
(23) அரச சேவையில் சகல பட்டதாரிகளையும் ஒரே சம்பளப் புள்ளியில் வைக்க முடியமா? 
 
ஒரே சம்பளப் புள்ளியில் அமைக்க முடியாது. சம்பளத்தினை தீர்மானிப்பது பதவியின் பொருட்டு என்பதுடன்; அப்பதவிகளின் உள்ள நபர்களின் தகைமைகளுக்கமைய மேற்கொள்ளப்படுவது இல்லை. 

 
(24) அரச சேவையில் ஓர் பதவியிலிருந்து அரச சேவையில் வேறொரு பதவியின் பொருட்டு நிரந்தரமாக விடுவிக்கப்பட்டுள்ள மத்திய அரசின் உத்தியோகத்தர் ஒருவருக்கு மீண்டும் முன்னைய பதவிக்கு வருதல் தொடர்பாக தற்போது நடைமுறையிலுள்ள ஏற்பாடுகள் என்ன? 
 
2009.02.20 ஆந் திகதிய 1589/30 என்னும் இலக்கமுடைய வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயற்பாட்டு நடைமுறைக் கோவையில் இதற்குரிய ஏற்பாடுகள் குறிப்பிடப்படவில்லை என்பதால் இது தொடர்பாக பொதுச் சேவைகள் ஆணைக் குழுவிடமிருந்து அறிவுரையினைப் பெற்றுக் கொள்ளல் வேண்டும். 
(குறிப்பு:- குறித்த வர்த்தமானி 21ஆவது வினாவுக்கான விடையில் இணைக்கப்பட்டுள்ளது. )
 
 
(25) தேர்தல் ஒன்றிற்காகப் போட்டியிடும் அரசியல் உரிமைகள் உடைத்தான உத்தியோகத்தரொருவர், அதன் பொருட்டு விடுமுறைக்காக விண்ணப்பிக்கும் போது, அவ்வருடத்தில் அவருக்குரிய அது வரையில் பெற்றுக் கொள்ளப்படாதுள்ள சாதாரண விடுமுறைகள் இருப்பின் அவற்றைப் பெற்றுக் கொள்வதற்கு வாய்ப்புக்கள் உள்ளதா? 
 
ஆம். அவ்வருடத்திற்குரிய அமைய விடுமுறைகளையும் உழைத்துக் கொண்டுள்ள ஓய்வு விடுமுறைகளையும் பெற்றுக் கொள்ள முடியும். 
 
 
(26) அரசியல் உரிமை உடைத்தான உத்தியோகத்தர் ஒருவர் உள்ளுராட்சி தேர்தலின் பொருட்டு போட்டியிட்டு வெற்றியீட்டி உறுப்பினர் பதவியின் பொருட்டு நியமிக்கப்பட்டவுடன் அவர் வகித்த பதவியிலிருந்து விலகுதல் வேண்டுமா? 
 
இல்லை. அவர் வகித்த பதவியில் இருந்தவாறே ஆகக் குறைந்தது மாதம் ஒன்றிற்கு 05 நாட்கள் குறித்த கூட்டங்களின் பொருட்டு கலந்து கொள்ள முடியும். (22.05.2007 ஆந் திகதிய அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 13/2007). 
 
குறித்த சுற்றறிக்கையைப் பார்வையிட..
 
 
(27) அரசியல் உரிமையுடைத்தான உத்தியோகத்தர் ஒருவருக்கு உள்ளுராட்சி தேர்தலின் பொருட்டு போட்டியிட்டு வெற்றியீட்டி தலைவர் பதவியின் பொருட்டு நியமிக்கப்பட்டவுடன் அவர் வகித்த பதவியிலிருந்து விலகுதல் வேண்டுமா? 
 
இல்லை. 
அவருக்கு கீழ் குறிப்பிடப்பட்டுள்ள 02 அணுசரணைகளைப் பெற்றுக் கொள்ளலாம். 
 
(1) உள்ளுராட்சி நிறுவனத்தில் பதவி வகிக்கும் முழுமையான காலத்திற்கும் சம்பளமற்ற விடுமுறையினைப் பெற்றுக் கொள்ளல். 
 
(11) நிரந்தர பதவியில் உள்ள போதே மாதத்திற்கு ஆகக் குறைந்தது 07 நாட்கள் சம்பளத்துடனான விடுமுறைகளைப் பெற்றுக் கொண்டு கூட்டங்களின் பொருட்டு கலந்து கொள்ளலாம். 
 
 
 
(28) அரசியல் உரிமை உரித்துடைய உத்தியோகத்தரொருவர் மாகாண சபைத் தேர்தலின் பொருட்டு போட்டியிட்டு வெற்றியீட்டி உறுப்பினர் ஒருவராக நியமிக்கப்பட்டவுடன் அவர் வகித்த பதவியிலிருந்து விலகுதல் வேண்டுமா? 
 
இல்லை. 
கீழ் குறிப்பிடப்பட்டுள்ள 02 விருப்புக்களில் ஏதாவது ஒரு விருப்பினை அனுபவிக்கலாம். 
 
(1) மாகாண சபை உறுப்பினராக இருக்கும் வரை சம்பளமற்ற விடுமுறையில் முழு நேர அடிப்படையின் பேரில் விடுவித்தல். 
 
(11) 22.04.1991 ஆந் திகதிய அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 1/89( I) இன் 02 வது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளின் பேரில் ஓய்வு பெறல். 
 
 
(29) அரசியல் உரிமைகள் உரித்துடைய உத்தியோகத்தர் ஒருவர் பாராளுமன்றத் தேர்தலின் பொருட்டு போட்டியிட்டு வெற்றியீட்டி பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டால் அவர் வகித்த பதவியில் இருந்து விலகுதல் வேண்டுமா? 

ஆம். 
 
 
(30) அரசியல் உரிமையற்ற உத்தியோகத்தர் ஒருவர் தேர்தலின் பொருட்டு போட்டியிடுவதற்கு சேவையிலிருந்து விலகுதல் வேண்டுமா? 
 
ஆம். 
15.12.2004 ஆந் திகதிய அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 07/2004 னால் திருத்தம் செய்யப்பட்ட தாபன விதிக்கோவையின் XXXII அத்தியாயத்தின் 1:3 பிரிவின் ஏற்பாடுகளுக்கமைய செயற்படல் வேண்டும்.
 
இது தொடர்பான சுற்றறிக்கைகளைப் பார்வையிட..
 
தொடரும்...
 
ஏனைய பாகங்களுக்கு செல்ல... 
 
 
 
 
அரச ஊழியர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களும் அதற்கான தீர்வுகளும் - பாகம் 05 அரச ஊழியர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களும் அதற்கான தீர்வுகளும் - பாகம் 05 Reviewed by Irumbu Thirai News on September 26, 2021 Rating: 5

21 செக்கன்களில் ஒருவரை அச்சுறுத்தலாமா? CID க்கு அழைக்கப்பட்ட ஆசிரியையின் விளக்கம்!

September 26, 2021
 

Online இல் கற்பிக்கும் ஆசிரியைகளுக்கு அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டின் பேரில் அதிபர் ஒருவரும் மினுவாங்கொடை வலயத்தை சேர்ந்த ஆசிரியை ஒருவரும் அண்மையில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர். 
 
குறித்த விசாரணை முடிவில் ஆசிரியை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது, 

முறையான எழுத்துமூல அழைப்பு இன்றி தொலைபேசி மூலமே விசாரணைக்கு அழைத்தனர். இந்த இடத்தைப் பற்றிய மதிப்பு மரியாதை என்னிடம் இருந்தது. ஆனால் இந்த விடயங்களுக்கெல்லாம் இங்கே அழைத்திருக்கிறார்கள். இந்த இடத்திற்கு அழைக்கும் அளவிற்கு இது குற்றமா என்ற பிரச்சினை எனக்கு இருக்கிறது. 
 
இந்தக் குற்றச்சாட்டை நான் கடைசி வரை ஏற்றுக் கொள்ளவே இல்லை. நான் யாரையும் அச்சுறுத்துபவள் அல்ல. நான் ஏற்றுக் கொள்ளவே இல்லை. நான் அவ்வாறு யாரையும் அச்சுறுத்தியிருந்தால், தொலைபேசியில் கதைத்த நேர அளவை கூறுங்கள் என்று கேட்டேன். அவர்கள் சொல்லவில்லை. 
 
மூன்றாவது முறையும் கேட்டவுடன்தான் சொன்னார்கள் 21 செக்கன்கள் கதைத்திருப்பதாக. நான் உடனே கேட்டேன் 

ஒருவரை அச்சுறுத்துவது என்றால் 21 செக்கன்கள் போதுமா என்று. நான் கடைசிவரை குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ளவே இல்லை என்று அவர் கூறினார். 
 
மேலும் அங்கிருந்த அதிகாரிகள் எம்முடன் நல்ல முறையில் நடந்து கொண்டார்கள். எவ்வாறாயினும் நான் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபாட்டுடன் செயற்படக்கூடிய ஒரு உறுப்பினர். நாங்கள் மேலதிக சம்பளத்தை கேட்கவில்லை. இல்லாமல் போனதை தான் கேட்கிறோம். எதிர்காலத்திலும் செயற்பாட்டு ரீதியாக பங்களிப்பு செய்யக்கூடிய ஒரு தொழிற் சங்க உறுப்பினராக நான் இருப்பேன் என்று தெரிவித்தார்.
21 செக்கன்களில் ஒருவரை அச்சுறுத்தலாமா? CID க்கு அழைக்கப்பட்ட ஆசிரியையின் விளக்கம்! 21 செக்கன்களில் ஒருவரை அச்சுறுத்தலாமா? CID க்கு அழைக்கப்பட்ட ஆசிரியையின் விளக்கம்! Reviewed by Irumbu Thirai News on September 26, 2021 Rating: 5
Powered by Blogger.