வரலாற்றில் முதற் தடவையாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பதவிக்கு விண்ணப்பம் கோர தீர்மானம்

 

இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் ஆணையாளர் பதவிக்கு இதுவரை காலமும் சேவை அனுபவம் மற்றும் நிர்வாக சேவையின் சிரேஷ்டத்துவம் அடிப்படையில்தான் நியமனம் இடம்பெற்றது. 
 
ஆனால் பரீட்சை திணைக்கள வரலாற்றிலேயே முதல் தடவையாக 
 
விண்ணப்பம் கோரல் மூலம் குறித்த பதவிக்கு நியமனம் வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. 
 
தற்போதைய நிலையில் குறித்த பதவிக்காக பொருத்தமான தேர்ச்சி மட்டத்தை கொண்டிருப்பவர்கள் கல்வி அமைச்சின் நிர்வாக சேவையில் இல்லை என்பதனால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அறியமுடிகிறது. 
 
இதற்கான விண்ணப்பங்கள் விரைவில் கோரப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். 
 
முன்னாள் கல்வி அமைச்சர் ரிச்சர்ட் பத்திரனவின் காலத்தில் மாத்திரமே குறித்த பதவிக்கு வெளி நபர் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
 
இது தொடர்பாக வெளிவந்த பத்திரிகை செய்தியையும் கீழே காணலாம்.

 
வரலாற்றில் முதற் தடவையாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பதவிக்கு விண்ணப்பம் கோர தீர்மானம் வரலாற்றில் முதற் தடவையாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பதவிக்கு விண்ணப்பம் கோர தீர்மானம் Reviewed by Irumbu Thirai News on September 28, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.