வீட்டில் படிக்கச் சொல்லி தும்புத்தடியால் தாக்கப்பட்ட மாணவன் மரணம்!

 

வீட்டில் படிக்கச் சொல்லி தும்புத்தடியால் தாக்கப்பட்ட மாணவன் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மரணமான சம்பவம் காலி, மஹமோதர என்ற பகுதியில் இடம்பெற்றுள்ளது. 
 
16 வயதுடைய குறித்த மாணவன் இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளார். இந்நிலையில் வீட்டில் கற்றல் செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கூறி குறித்த மாணவனின் 

தந்தையால் நேற்று பிற்பகல் வேளை தாக்கப்பட்டுள்ளார். 
 
தும்புத்தடியால் தாக்கப்பட்ட குறித்த மாணவன் மயக்கமடைந்த நிலையில் கராப்பிட்டிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மரணமடைந்துள்ளார். இதேவேளை குறித்த மாணவனின் தந்தை காலி பிரதான நீதவான் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
வீட்டில் படிக்கச் சொல்லி தும்புத்தடியால் தாக்கப்பட்ட மாணவன் மரணம்! வீட்டில் படிக்கச் சொல்லி தும்புத்தடியால் தாக்கப்பட்ட மாணவன் மரணம்! Reviewed by Irumbu Thirai News on September 30, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.