பல்கலைக்கழகங்களை மீள ஆரம்பித்தல்: UGC யின் அறிவிப்பு!

 

பல்கலைக்கழகங்களை மீள ஆரம்பித்தல் தொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். 
 
அதாவது 20 - 30 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கான தடுப்பூசி வழங்கும் பணிகளை அரசாங்கம் அடுத்த மாத இறுதிக்குள் நிறைவு செய்யுமாயின் எதிர்வரும் 
 
நவம்பர் மாதம் தொடக்கம் பல்கலைக்கழகங்களை மீள ஆரம்பிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார். 
 
மேலும், பல வருடங்களுக்கு பிறகு இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 10,000 ஆல் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 42,000 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். எதிர்காலத்திலும் இதுபோன்ற அதிகரிப்பினை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
பல்கலைக்கழகங்களை மீள ஆரம்பித்தல்: UGC யின் அறிவிப்பு! பல்கலைக்கழகங்களை மீள ஆரம்பித்தல்: UGC யின் அறிவிப்பு! Reviewed by Irumbu Thirai News on September 29, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.