விடைத்தாள் மதிப்பீட்டுக்கான கொடுப்பனவுகள்: முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள்!

 

2020 ஆம் வருடத்திற்குரிய சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டாலும் அதற்காக விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளை மேற்கொண்டவர்களுக்கான கொடுப்பனவுகள் இதுவரையில் கிடைக்கப் பெறவில்லை என இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. 
 
குறித்த சங்கத்தின் செயலாளர் மகிந்த ஜயசிங்க இது தொடர்பில் தெரிவிக்கையில், 
 
கொரோனா பரவலுக்கு மத்தியிலும் விடைத்தாள் திருத்தும் பணிகளை மேற்கொண்டிருந்தனர். அவர்களுக்குரிய சுகாதார வசதிகளும் ஒழுங்கான முறையில் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருக்கவில்லை. இந்தநிலையிலேயே அவர்களுக்கான கொடுப்பனவு இன்னும் வழங்கப்படவில்லை என அவர் குற்றம் சாட்டினார்.
விடைத்தாள் மதிப்பீட்டுக்கான கொடுப்பனவுகள்: முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள்! விடைத்தாள் மதிப்பீட்டுக்கான கொடுப்பனவுகள்: முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள்! Reviewed by Irumbu Thirai News on September 30, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.