பள்ளிவாசல்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பான சுற்றுநிறுபம்:



ஒக்டோபர் முதலாம் திகதி முதல் 15ம் திகதி வரை பள்ளிவாயல்களில் நடந்து கொள்ள வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக இலங்கை வக்ப் சபை பின்வரும் தீர்மானங்களை மேற்கொண்டுள்ளது. 
 
1) ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 25 பேர் மாத்திரமே தனித்து தொழுவதற்காக அனுமதிக்கப்படுவர். 
 
2) சகல பள்ளி வாயில்களிலும் ஜமாத் தொழுகை, ஜும்ஆ தொழுகை, ஜனாஸா தொழுகை, அல்குர்ஆன் மற்றும் நிக்காஹ் மஜ்லிஸ் போன்ற சகல கூட்டு செயற்பாடுகளுக்கும் அனுமதி இல்லை. 
 
3) சுகாதார தரப்பினரின் சகல வழிகாட்டுதல்களையும் வக்ப் சபையின் முன்னைய வழிகாட்டுதல்களையும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். 
 
4) முகக் கவசம் அணிதல், இடைவெளி பேணல், தொழுகை விரிப்பை கொண்டு செல்லல், வீட்டில் வுழு செய்துவிட்டு செல்வது கட்டாயமாகும். 
 
5) பள்ளிவாசல்களில் வுழு செய்யும் பகுதி, மலசலகூடம் என்பன மூடப்பட்டிருத்தல் வேண்டும். 
 
6) தனிமைப்படுத்தபட்டதாக அல்லது போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்கள் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் மூடப்பட்டிருத்தல் வேண்டும். 
 
இது தொடர்பாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட சுற்றுநிருபத்தை கீழே காணலாம்.

 
பள்ளிவாசல்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பான சுற்றுநிறுபம்: பள்ளிவாசல்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பான சுற்றுநிறுபம்: Reviewed by Irumbu Thirai News on September 30, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.