புதிய கட்சிகளை பதிதல்... மாகாண சபைத் தேர்தலுக்கு நான்காயிரம் மில்லியன்... இன்றைய கூட்ட தீர்மானங்கள்:


தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் இன்று அதன் தலைமையகத்தில் நடைபெற்றது. 
அதில், புதிய அரசியல் கட்சிகளை ஜனவரி முதல் பதிவு செய்யும் நடவடிக்கையை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டதாக அதன் தலைவர் நிமல் நிமல் புஞ்சி ஹேவா தெரிவித்தார். 
இதேவேளை மாகாணசபைத் தேர்தல் ஒன்று நடைபெற்றால் அதற்காக 
4 ஆயிரம் மில்லியன் ரூபாய்கள் நிதி ஒதுக்கப்படும் எனவும் தெரிவித்தார். 
மேலும் எதிர்வரும் ஜனவரி 11ஆம் திகதி அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் ஆணைக்குழுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெறும். அதே தினம் மாலை வேளையில் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் உடனான சந்திப்பும் இடம்பெறும் என அவர் மேலும் தெரிவித்தார்.
புதிய கட்சிகளை பதிதல்... மாகாண சபைத் தேர்தலுக்கு நான்காயிரம் மில்லியன்... இன்றைய கூட்ட தீர்மானங்கள்: புதிய கட்சிகளை பதிதல்... மாகாண சபைத் தேர்தலுக்கு நான்காயிரம் மில்லியன்... இன்றைய கூட்ட தீர்மானங்கள்: Reviewed by irumbuthirai on December 31, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.