மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு


மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு அதகரிக்கப்படும் என வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். மூன்று சதவீதமாகவுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு வீதம் அடுத்த வருடத்தில் இருந்து 

6 சதவீதமாக அதிகரிக்கப்படும் என்று ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். எம் மத்தியில் வாழும் மாற்றுத்திறனாளிகளின் பிரச்சினைகளும் வாய்ப்புக்களும்' என்ற தலைப்பில் யாழ் பொது நூலகத்தில் இம்மாதம் 5ஆம் திகதி மாலை நடைபெற்ற ஐந்தாவது வடக்கு வட்டமேசை கலந்துரையாடலில் மாற்றுத்திறனாளிகள் சந்திக்கும் சவால்கள், அவர்களது தேவைகள் தொடர்பாக கருத்துக்கள் பரிமாறப்பட்டன இதன்போது ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 
இந்த வடக்கு வட்டமேசை கலந்துரையாடலில் சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் மாற்றுத்திறனாளிகள் சந்திக்கும் சவால்கள் தொடர்பில் ஆளுநருக்கு எடுத்துரைத்தார். இதன்போது அவர்களுக்கான சில தீர்வுகள் கலந்துரையாடலின் போதே ஆளுநரால் வழங்கப்பட்டது. 

தற்பொழுது 3 சதவீதமாகவுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு அடுத்த வருடம் அதாவது எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் 6 சதவீதமாக அதிகரிக்கப்படும் என்றும் ஆளுநர்; நம்பிக்கை தெரிவித்தார். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான போக்குவரத்து வசதிகளும் அவர்களது தேவைகள் தொடர்பிலான அறிவுறுத்தல்களை திணைக்கள தலைவர்களுக்கு வழங்கவுள்ளதாகவும் ஆளுநர் இதன்போது மேலும் தெரிவித்தார்.
(அ.த.தி)
மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு Reviewed by irumbuthirai on September 07, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.