பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் தொடர்பான அறிவித்தல்!


பல்கலைக்கழக அனுமதிக்காக இம்முறை 110,000 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாகவும் இம்முறை பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் 
அடுத்த மாத இறுதிக்குள் வெளியிட உள்ளதாகவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சந்தன உடவத்த தெரிவித்துள்ளார். 

பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பிப்பதற்கான கால எல்லை ஏற்கனவே நிறைவடைந்துள்ளது. அதே போன்று தற்போது பரவும் கொரோனா நிலைமையிலும் குறைந்த ஊழியர்களை கொண்டு வெட்டுப்புள்ளிகளை வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை மானியங்கள் ஆணைக்குழு மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் தொடர்பான அறிவித்தல்! பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் தொடர்பான அறிவித்தல்! Reviewed by irumbuthirai on August 20, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.