தரம் 12 மாணவர்களுக்கு வழங்கும் புலமைப்பரிசிலுக்கான விண்ணப்பம்

January 01, 2021

தரம் 12 மாணவர்களுக்கு வழங்கும் சுபக எனப்படும் புலமைப்பரிசிலுக்கான விண்ணப்பம் கல்வி அமைச்சினால் கோரப்பட்டுள்ளது. 
இது மாதாந்தம் 2500 ரூபா வீதம் 20 மாதங்களுக்கு வழங்கப்படும். 2020இல் தரம் 12 இல் கற்கும் மாணவர்கள் இதற்காக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை 12.01.2021 க்கு முன்னர் பாடசாலை அதிபருக்கு சமர்ப்பிக்க வேண்டும். 
இது தொடர்பான முழு விபரங்கள் அடங்கிய சுற்றறிக்கையை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
விண்ணப்ப படிவத்தை பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
மேலதிக இணைப்புகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.

தரம் 12 மாணவர்களுக்கு வழங்கும் புலமைப்பரிசிலுக்கான விண்ணப்பம் தரம் 12 மாணவர்களுக்கு வழங்கும் புலமைப்பரிசிலுக்கான விண்ணப்பம் Reviewed by irumbuthirai on January 01, 2021 Rating: 5

ஜனவரி 15-ல் ஆசிரிய நியமனம்?

January 01, 2021

ஜனவரி 15ஆம் தேதி டிப்ளமாதாரிகளுக்கு ஆசிரிய நியமனம் வழங்கப்பட இருப்பதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளதாக ஆங்கில பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 
தேசிய கல்வியியற் கல்லூரிகளில் டிப்ளோமா முடித்த 3,772 பேர்களுக்கே இவ்வாறு நியமனம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
திறமைச் சித்தி உடையவர்களுக்கு தேசிய பாடசாலைகளுக்கும் ஏனையவர்களுக்கு அந்த மாவட்டத்திலேயே 
நியமனம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 ஆனால் ஜனவரி 15 நியமனம் வழங்கப்படும் என்ற விடயத்தில் தமக்கு நம்பிக்கை இல்லை என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் மகிந்த ஜெயசிங்க தெரிவித்துள்ளார். ஏனெனில் இது தொடர்பாக உத்தியோகபூர்வ அறிவிப்பு எதனையும் கல்வி அமைச்சு வெளியிடவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனவரி 15-ல் ஆசிரிய நியமனம்? ஜனவரி 15-ல் ஆசிரிய நியமனம்? Reviewed by irumbuthirai on January 01, 2021 Rating: 5

பாடசாலைகளுக்கு இணைய வசதிகளுடன் Online கல்வி: கல்வியமைச்சு நடவடிக்கை:

January 01, 2021

ஹுவாவி (Huawei) நிறுவனத்துடன் இணைந்து நாட்டிலுள்ள பாடசாலைகளுக்கு இணையத்தள வசதிகளை உருவாக்கி வெளிவாரி கல்வி வசதிகளை முன்னேற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவிருப்பதாக கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். 
இதற்காக 30,000 உபகரணங்களை இலவசமாக பெற்றுக் 
கொடுப்பதற்கு மேற்படி நிறுவனம் இணக்கப்பாட்டை தெரிவித்துள்ளது. 
இந்த செயற்றிட்டம் தொடர்பான பேச்சுவார்த்தையொன்று அமைச்சரின் தலைமையில் கல்வியமைச்சில் நடைபெற்றுள்ளது. அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா, தகவல் தொழில்நுட்ப கல்விப் பிரிவின் பணிப்பாளர் உதாரா திக்கும்புர, ஹுவாவி ஸ்ரீலங்கா நிறுவனத்தின் உப தலைவர் இந்திக டி சொய்சா, ஹுவாவி பிரதம நிறைவேற்று அதிகாரி (CEO) ரிகார்டோ ஷியாவோ உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டுள்ளனர். 
கற்றல் நடவடிக்கைகளை மிகவும் பிரயோசனமுள்ள வகையில் நடைமுறைப்படுத்த இணையதள வசதிகளை பாடசாலைகளுக்கு பெற்றுக்கொடுக்க கிடைத்துள்ள இந்த சந்தர்ப்பமானது காலத்துக்கு பொருத்தமானதும் மிகவும் பெறுமதியானதுமாகும் என கல்வியமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளுக்கு இணைய வசதிகளுடன் Online கல்வி: கல்வியமைச்சு நடவடிக்கை: பாடசாலைகளுக்கு இணைய வசதிகளுடன் Online கல்வி: கல்வியமைச்சு நடவடிக்கை: Reviewed by irumbuthirai on January 01, 2021 Rating: 5

இன்று முதல் மாற்றப்படும் அவுஸ்திரேலிய தேசிய கீதம். காரணம் இதுதான்..

January 01, 2021

இன்று முதல் (ஜன. 01) ஆவுஸ்திரேலியர்கள் தங்கள் தேசிய கீதத்தை சில மாற்றங்களோடு பாடுவார்கள் என்று அந்நாட்டுப் பிரதமர் ஸ்காட் மாரிசன் அறிவித்துள்ளார். 
அந்நாட்டுப் பூர்வகுடி மக்களின் நீண்ட வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
"நாம் இளமையானவர்கள்" என்ற இடம் "நாம் ஒன்றே" என்று பொருள் தரும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. 
அதாவது 'நாம் இளமையும், சுதந்திரமும் ஆனவர்கள் என்பதால்' என பொருள் தரும் "ஃபார் வீ ஆர் யங் அன் ஃப்ரீ' என்ற வரி நீக்கப்பட்டு, 
'ஃபார் வீ ஆர் ஒன் அன் ஃப்ரீ' என்ற வரி சேர்க்கப்பட்டுள்ளது. 
300க்கும் மேற்பட்ட தேசிய மூதாதையரிடம் இருந்தும், மொழிக் குழுக்களிடமிருந்தும் பெறப்பட்டதே நம் தேசத்தின் கதை என்பதை, புவியில் மிக வெற்றிகரமாக இயங்கும் பன்முக பண்பாடுகள் கொண்ட நாடு நாம் என்பதை இது அங்கீகரிக்கிறது. கொரோனா வைரஸ் உலகத் தொற்றின்போது ஆஸ்திரேலியா ஏற்படுத்திக்கொண்ட ஒற்றுமையைக் கொண்டாடும் வகையில் இந்த மாற்றம் உள்ளது. இந்த மாற்றம் எந்தப் பொருளையும் நீக்கவில்லை. ஆனால், நிறைய பொருள் சேர்த்திருக்கிறது என்று குறிப்பிட்டார் மாரிசன். 
இந்த மாற்றத்திற்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இன்று முதல் மாற்றப்படும் அவுஸ்திரேலிய தேசிய கீதம். காரணம் இதுதான்.. இன்று முதல் மாற்றப்படும் அவுஸ்திரேலிய தேசிய கீதம். காரணம் இதுதான்.. Reviewed by irumbuthirai on January 01, 2021 Rating: 5

விளையாட்டு பாடசாலைகளுக்கு விளையாட்டுத் திறமை கொண்ட மாணவர்களை அனுமதித்தல் - 2021

January 01, 2021

விளையாட்டு திறமை கொண்ட மாணவர்களை, கல்வியமைச்சின் கீழ் நாடளாவிய ரீதியில் காணப்படும் 30 விளையாட்டு பாடசாலைகளுக்கு 2021 ம் ஆண்டிற்காக அனுமதிக்க விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. 
 விண்ணப்ப முடிவு திகதி: 22-01-2021. 
இது தொடர்பான முழு விபரங்களை கீழே காணலாம்.



விளையாட்டு பாடசாலைகளுக்கு விளையாட்டுத் திறமை கொண்ட மாணவர்களை அனுமதித்தல் - 2021 விளையாட்டு பாடசாலைகளுக்கு விளையாட்டுத் திறமை கொண்ட மாணவர்களை அனுமதித்தல் - 2021 Reviewed by irumbuthirai on January 01, 2021 Rating: 5

Vacancies: University of Colombo

January 01, 2021

Vacancies in the University of Colombo. 
Closing :date 07-01-2021. 
See the details below.


Vacancies: University of Colombo Vacancies: University of Colombo Reviewed by irumbuthirai on January 01, 2021 Rating: 5

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர் சில மணி நேரங்களில் மரணம்..

January 01, 2021

உலகில் பல்வேறு நாடுகள் கொரோனா தடுப்பூசியைப் போட ஆரம்பித்துள்ளனர். 
அந்தவகையில் சுவிட்சர்லாந்தின் முதியோர் இல்லத்தில் உள்ள ஒருவருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு சில மணி நேரங்களில் மரணமடைந்துள்ளார். 
ஊசி போட்ட பிறகு அடிவயிற்றிலும் சிறுநீர்க்குழாய் பகுதியிலும் வலி இருப்பதாக அவர் கூறியிருக்கிறார். 
ஆனால் இதற்கும் தடுப்பூசிக்கும் தொடர்பில்லை என அந்நாட்டின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 91 வயதான அவர் ஏற்கனவே வேறு நோய்களுக்கு சிகிச்சை பெறுபவர். எனவே இது இயற்கை மரணம் என மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர் சில மணி நேரங்களில் மரணம்.. கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர் சில மணி நேரங்களில் மரணம்.. Reviewed by irumbuthirai on January 01, 2021 Rating: 5

2021இல் அரச ஊழியர்களை கடமைக்கு அழைப்பது தொடர்பான அறிவித்தல்

January 01, 2021

2021இல் அரச ஊழியர்களை கடமைக்கு அழைக்கும்போது நிறுவன தலைவர்களின் தேவைக்கேற்ப குறிப்பிட்ட ஊழியர்கள் மாத்திரம் அழைக்கப்படுவது 
போதுமானது என பொது நிர்வாக மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே ஜே ரத்னசிறி தெரிவித்துள்ளார். 
 குறிப்பாக கொரோனா கட்டுப்பாடு வழமைக்கு திரும்பிவிட்டது என சுகாதார அமைச்சு அறிவித்தால், சகல ஊழியர்களும் கடமைக்கு திரும்புவது தொடர்பான சுற்றுநிறுபம் அனுப்பி வைக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
2021இல் அரச ஊழியர்களை கடமைக்கு அழைப்பது தொடர்பான அறிவித்தல் 2021இல் அரச ஊழியர்களை கடமைக்கு அழைப்பது தொடர்பான அறிவித்தல் Reviewed by irumbuthirai on January 01, 2021 Rating: 5

கொரோனா உடல்களை அடக்கம் செய்தல்: இறுதித் தீர்மானத்திற்கு கூடிய இரண்டு குழுக்கள்: நடந்தது என்ன?

January 01, 2021

கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதி அளிப்பதா? என்பது தொடர்பில் இறுதி தீர்மானத்தை மேற்கொள்ள நேற்று கூடிய இரண்டு குழுக்களும் எவ்வித தீர்மானமும் இன்றி வெளியேறினர். 
 இதில் ஒரு குழு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சியினாலும் மற்றைய குழு இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளேயினாலும் நியமிக்கப்பட்டதாகும். 
 இதேவேளை உடல்களை எரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 
நேற்றைய தினம் பொரளை மயானத்துக்கு முன்னால் சிலோன் தவ்ஹீத் ஜமாத் உட்பட ஏனைய அமைப்புக்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. 
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க அபே ஜனபல கட்சி கொழும்பு மாவட்ட தலைவர் டான் பிரசாத் உள்ளிட்ட குழுவினர் குறித்த இடத்திற்கு வந்தமை குறிப்பிடத்தக்கது. 
எனினும் போலீசார் தலையிட்டு நிலைமையை சமாளித்தனர்.
கொரோனா உடல்களை அடக்கம் செய்தல்: இறுதித் தீர்மானத்திற்கு கூடிய இரண்டு குழுக்கள்: நடந்தது என்ன? கொரோனா உடல்களை அடக்கம் செய்தல்: இறுதித் தீர்மானத்திற்கு கூடிய இரண்டு குழுக்கள்: நடந்தது என்ன? Reviewed by irumbuthirai on January 01, 2021 Rating: 5

மகர சிறை கலவரம்: அறிக்கை தொடர்பாக அமைச்சின் நிலைப்பாடு:

January 01, 2021

மகர சிறைச்சாலை தொடர்பான அறிக்கையை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்க உள்ளதாகவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை செயற்படுத்த 
திட்டமொன்று தயாரிப்பதாகவும் நீதி அமைச்சின் செயலாளர் எம். எம். பி. கே. மாயாதுன்னே தெரிவித்துள்ளார். 
இது தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழு அதன் இறுதி அறிக்கையை நேற்று முன்தினம் நீதி அமைச்சர் அலி சப்ரியிடம் சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மகர சிறை கலவரம்: அறிக்கை தொடர்பாக அமைச்சின் நிலைப்பாடு: மகர சிறை கலவரம்: அறிக்கை தொடர்பாக அமைச்சின் நிலைப்பாடு: Reviewed by irumbuthirai on January 01, 2021 Rating: 5

ஜனாசா எரிப்புக்கு எதிராக கிறிஸ்தவ மதத் தலைவர்கள் உட்பட பலரும் நடத்திய ஆர்ப்பாட்டம்..

January 01, 2021

ஜனாசா எரிப்புக்கு எதிராக கூட்டிணைந்த அமைப்புகளின் ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்றைய தினம் (31) பொரளை மயானத்துக்கு முன்னால் இடம்பெற்றுள்ளது. 
 இதில் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மதத் தலைவர்கள் உட்பட ஏனைய மத தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
ஜனாசா எரிப்புக்கு எதிராக கிறிஸ்தவ மதத் தலைவர்கள் உட்பட பலரும் நடத்திய ஆர்ப்பாட்டம்.. ஜனாசா எரிப்புக்கு எதிராக கிறிஸ்தவ மதத் தலைவர்கள் உட்பட பலரும் நடத்திய ஆர்ப்பாட்டம்.. Reviewed by irumbuthirai on January 01, 2021 Rating: 5

அடக்கம் செய்வதற்கான உரிமை முஸ்லிம் மக்களுக்கு கிடைக்க வேண்டும் - முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால

January 01, 2021

கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான உரிமை முஸ்லிம் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 
த ஹிந்து பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 
மேலும் கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்ய முடியும் என உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை செய்துள்ள நிலையில் முன்னாள் சுகாதார அமைச்சர் என்ற வகையில் தாமும் அந்த நிலைப்பாட்டிற்கு இணங்குவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அடக்கம் செய்வதற்கான உரிமை முஸ்லிம் மக்களுக்கு கிடைக்க வேண்டும் - முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால அடக்கம் செய்வதற்கான உரிமை முஸ்லிம் மக்களுக்கு கிடைக்க வேண்டும் - முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால Reviewed by irumbuthirai on January 01, 2021 Rating: 5

70 வருட பூர்த்தி: 20 ரூபாய் நாணயம் வெளியிட்ட மத்திய வங்கி:

January 01, 2021
இலங்கை மத்திய வங்கியால் வெளியிடப்பட்ட 20 ரூபாய் நாணயம் நேற்றைய தினம் (31) ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது. 
மத்திய வங்கியின் 70வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்த நாணயம் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 
இந்த நாணயம் 7 பக்க வடிவத்துடன் அலுமினியம் மற்றும் வெண்கலத்தால் ஆக்கப்பட்டுள்ளது. 3,000 நாணயங்கள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ள நிலையில் இவை புழக்கத்திற்கு விடப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இந்த நாணயம் 
மத்திய வங்கி தலைமையகத்திலும் அதன் பிராந்திய கிளைகளிலும் ரூபா 1300 க்கு விற்பனை செய்யப்படும்.
70 வருட பூர்த்தி: 20 ரூபாய் நாணயம் வெளியிட்ட மத்திய வங்கி: 70 வருட பூர்த்தி: 20 ரூபாய் நாணயம் வெளியிட்ட மத்திய வங்கி: Reviewed by irumbuthirai on January 01, 2021 Rating: 5
Powered by Blogger.