மற்றுமொரு சிறைச்சாலையிலும் கூரை மேல் ஏறிய கைதிகள்...


தங்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவித்து உடனடியாக PCR பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும் இல்லாவிடின் வேறு இடத்திற்கு மாற்றுமாரும் கோரி பழைய போகம்பர சிறைச்சாலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த கைதிகள் சிலர் கூரை மேல் ஏறி நேற்று (12) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
 பின்னர் அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதும் ஆர்ப்பாட்டத்தை நேற்றைய தினமே கைவிட்டனர். 
அதேபோன்று களுத்துறை சிறைச்சாலையின் கைதிகள் சிலர் சிறைச்சாலை கூரையின் மீது ஏறி இன்று (13) மாலை முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 
அதாவது தங்களுக்கு உடனடியாக பிணை வழங்குமாறு கோரியே இவ்வாறு கைதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 
ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்படடவர்களே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மற்றுமொரு சிறைச்சாலையிலும் கூரை மேல் ஏறிய கைதிகள்... மற்றுமொரு சிறைச்சாலையிலும் கூரை மேல் ஏறிய கைதிகள்... Reviewed by irumbuthirai on November 13, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.