பைடனின் வெற்றி உலக அரசியலில் ஏற்படுத்தப் போகும் மாற்றம் என்ன?

November 08, 2020

#அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்
அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் கடந்த 3ஆம் திகதி நடைபெற்றது. இரண்டு பிரதான கட்சிகள் சார்பாகவும் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் (பராக் ஒபாமாவின் கால) ஆகியோர் போட்டியிட்டனர். 
பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் பைடன் வெற்றியீட்டுவார் என தெரிவித்த போதிலும் கடந்த 2016 தேர்தலிலும் ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெறுவார் என தெரிவிக்கப்பட்ட கருத்துக் கணிப்புகள் பொய்யானதில் இம்முறையும் என்ன நடக்குமோ என்ற ஆவல் தொக்கி நின்றது. 

#அமெரிக்க தேர்தல் முறை
அமெரிக்க தேர்தல் முறை எமக்கு பரிச்சயமான முறையல்ல. சற்று வித்தியாசமானது. அமெரிக்கா என்பது 50 குடியரசுகள் (States) களின் இணைவு. அந்த ஒவ்வொரு ஸ்டேட்ஸ்லிருந்தும் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படும் Electorial College களே ஜனாதிபதியை தெரிவு செய்வார்கள். 
நடைபெற்ற தேர்தல் அவ்வாறான Electorial College காண உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தலாகும். ஒவ்வொரு ஸ்டேட்ஸ் இல் இருந்தும் Electorial College க்கு தெரிவு செய்யப்படும் உறுப்பினர் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டுள்ளது. அந்த அந்த ஸ்டேட்ஸ் இல் வெற்றி பெறும் கட்சி அந்த ஸ்டேட்ஸ் இன் எல்லா Electorial College ஐயும் வெற்றி கொள்ளும். மொத்தமாக 538 Electorial College கள் உள்ளன. அவற்றில் 270 ஐ வெற்றி பெறும் வேட்பாளர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார். 
அமெரிக்காவில் இரு பெரும் கட்சிகள் உள்ளன. Republican கட்சி, Democratic கட்சி என்ற இரண்டுமே அவையாகும். தேர்தல் நடைபெற முன்னர் உட்கட்சி தேர்தல் மூலம் கட்சியின் வேட்பாளர் தீர்மானிக்கப்படுவார். ஒருவருக்கு 4 வருடங்கள் கொண்ட இரு தவணைகள் பதவி வகிக்கலாம். முதல் தவணை ஜனாதிபதியாக இருப்பவர் மீண்டும் போட்டியிட விரும்பின் அவரது கட்சி சார்பில் உட்கட்சி போட்டியின்றி போட்டியிடலாம். 
அவ்வகையில் Democratic கட்சி சார்பில் ஜோ பைடன் உட்கட்சி தேர்தலில் வென்றார். அவர் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் உதவி ஜனாதிபதியாக இருந்ததுடன் 2016 ஆம் ஆண்டில் உட்கட்சி தேர்தலில் ஹிலாரியிடம் தோற்றிருந்தார். Republican சார்பாக பதவியில் உள்ள ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் போட்டியிட்டார். 

 #தேர்தலுக்கு முந்திய கள நிலவரம்
2016 ஆம் ஆண்டு தேர்தலில் டொனால்ட் டிரம்ப் குடியேற்றக்காரர்களுக்கு எதிரான கடும் நிலைப்பாட்டை பேசினார். அமெரிக்க பெருமை குறித்து பேசினார். மெக்சிகோவில் இருந்து களவாக அமெரிக்காவுக்குள் புகுபவர்களை பற்றி பேசினார். அதனால் மக்கள் ஆதரவு கிடைத்தது. பதவிக்கு வந்த அவர் மெக்சிகோ எல்லையில் மிகப் பெரும் மதில் ஒன்றை எழுப்பினார். அத்துடன் மத்திய கிழக்கில் இராணுவ செயற்பாடுகளை சற்று குறைத்து அதற்குப் பதிலாக சீனாவை சீண்ட ஆரம்பித்தார். 
 அதே நேரம் கொரோனா அமெரிக்காவில் மோசமான விளைவுகளை உண்டாக்கியுள்ளது. அதன் பரவலை கட்டுப்படுத்த அமெரிக்காவால் இயலவில்லை. குறிப்பாக அதன் ஆரம்பத்தில் சீனா காய்ச்சல் என்று எள்ளி நகையாடியமை, எனக்கும் கொரோனா என்று நக்கல் அடித்தமை, மாஸ்க் போடமாட்டேன், சனிடைசர் குடியுங்கள் போன்ற பேச்சுக்கள் ஜனாதிபதி டிரம்ப் இன் அபிமானத்தை இழக்கச் செய்தன. 
மறுபுறம் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்ட கறுப்பின ஜோர்ஜ் ப்ளயிட் தொடர்பில் டிரம்ப் நடந்து கொண்ட விதம் ஒட்டு மொத்த கறுப்பினதவர்களை மட்டுமல்லாமல், இனவாதமற்ற நடுநிலை சிந்தனையாளர்களையும் டிரம்ப் இன் பக்கம் இருந்து ஒதுங்கியது. இவை எல்லாவற்றையும் பைடன் அறுவடை செய்தார். 
 #தேர்தல்
அமெரிக்க தேர்தல் சட்டத்தின் படி ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கும் ஒருமுறை வரும் நவம்பர் மாதம் முதலாம் திங்கட்கிழமைக்கு அடுத்து வரும் செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி தேர்தல் நடைபெறும். தெரிவு செய்யப்படும் ஜனாதிபதி ஜனவரி 20 ஆம் திகதி சத்தியப்பிரமாணம் செய்வார். 
அவ்வகையில் இம்முறை நவம்பர் 3 ஆம் திகதி நடைபெற்றது. பொதுவாக தேர்தல் நடைபெற்ற தினத்திற்கு அடுத்த தினம் முடிவுகள் வெளியாகும். ஆனால் பல்வேறு சூழ்நிலைகள் காரணமாக இம்முறை பூரண முடிவுகள் இன்னும் வெளியாகமல் தாமதமாக வருகின்றன. இம்முறை தாமதத்திற்கு முக்கிய காரணம் அதிகரித்த தபால் வாக்குகளாகும். 
அமெரிக்காவில் எந்தவொரு வாக்காளருக்கும் தபால் மூலம் வாக்களிக்கும் உரிமை உண்டு. இம்முறை கொரோனா பரவல் காரணமாக பல வாக்காளர்கள் வாக்குச் சாவடிகளுக்கு செல்லாமல் தபால் மூலம் வாக்களித்துள்ளனர். இது கடந்த தேர்தலை விட 16 மடங்கு அதிகம் என்று சொல்லப்படுகிறது. இதனால் வாக்கெண்ணும் பணிகள் தாமதமாகி வருகிறது. எவ்வாறான போதிலும் ஆரம்ப கட்ட முடிவுகளின் அடிப்படையில் ஜோ பைடன் முன்னிலை பெற ஆரம்பித்தாலும் பின்னர் ட்ரம்ப்க்கு சாதகமான ஸ்டேட்ஸ்களின் முடிவுகள் வர ஆரம்பித்ததும் இருவருக்கும் இடையில் கடும் போட்டி நிலவி யார் வேண்டுமானாலும் தெரிவாகலாம் என்ற நிலை காணப்பட்டது. 
எனினும் டிரம்ப் முன்னணியில் இருந்த சில ஸ்டேட்ஸ்களின் பைடன் முன்னிலை பெற்று வெற்றியை உறுதி செய்ய ஜோ பைடனின் வெள்ளை மாளிகை பிரவேசம் உறுதியாகியுள்ளது. 

 #அமெரிக்க அரசியல் மாற்றம் உலகில் என்ன மாற்றத்தை கொண்டு வரப் போகிறது
அமெரிக்கா என்பது லட்சக்கணக்கான செவ்விந்தியர்களின் இரத்தத்தின் மீது கட்டப்பட்ட தேசமாகும். அமெரிக்க புரட்சியின் பின்னர் வேகமாக வளர்ந்து அமெரிக்கா முதலாம் உலக யுத்தம் நிறைவடையும் போது அப்போதைய சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யத்திற்கு சமனான வல்லரசாக மாறியிருந்தது. இரண்டாம் உலக யுத்தம் நிறைவடைய சோவியத் ரஷ்யாவுடன் சமனான வல்லரசாக இருந்து 1990 இல் சோவியத் சிதைவடைய உலகின் தனிப் பெரும் வல்லரசாக, போலீஸ்காரனாக மாறிப்போனது. 
தான் நினைத்தவாறு உலகில் எல்லாம் நடக்க வேண்டும் என்ற போர்வையில் உலக நாடுகளில் உள் விவகாரங்களில் இருந்து எல்லாவற்றிலும் மூக்கை நுழைக்கும் நாடாக இருந்தும் வருகிறது. 
 டிரம்ப் இன் வருகையோடு இந்நிலையில் சற்று மாற்றம் ஏற்பட்டது. பெரும்பாலும் தம் பெருமை காட்டவோ, புது ஆயுதம் பரிசீலிக்கவோ என்று சொல்லிக் கொண்டு சிறு நாடுகள் மீது அடாவடி காட்டவில்லை. வடகோரியாவுடன் பேச்சுவார்த்தை நடாத்தினார். இரானுடன் முரண்பாடு யுத்தம் ஏற்படும் நிலைக்கும் சென்றது. கடைசி காலத்தில் தன் ஹீரோயிசத்தை மக்களிடம் காட்ட கொஞ்சம் சீனாவுடன் முரண்டு பண்ணினார். 
எனினும் இவரது காலத்தில் மிக முக்கியமாக சில ராஜதந்திர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்து சமுத்திரத்தில் சீன ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் அமெரிக்கா ஆரம்பிக்கப்பட்டமை முக்கிய நிகழ்வாகும். குறிப்பாக இந்து பசுபிக் பிராந்தியத்தின் வலிமை மிக்க பொருளாதார, இராணுவ ஆதிக்க சக்திகளாக கருதப்படும் ஜப்பான், இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளை சீனாவின் ஆதிக்கத்திற்கு எதிராக ஒரே அச்சிற்கு கொண்டு வருவதில் அமெரிக்கா ஓரளவு வெற்றி கண்டுள்ளது. நேட்டோ பாணியிலான இராணுவ ஒத்துழைப்பு கூட்டமைப்பாக உருவாக்கும் நோக்கில் ஒன்று கூடும் நோக்கம் காணப்பட்ட போதிலும் அந்தளவு வெற்றி பெறவில்லை. ஆனால் இந்த நான்கு நாடுகளில் கூட்டு கடற்படை பயிற்சி ஒன்றை இந்து சமுத்திரத்தில் ஏற்பாடு செய்து நடத்துவதில் டிரம்ப் வெற்றி கண்டார். 
 1964 ல் சீனாவுடன் கண்ட தோல்வியை இன்னும் ஜீரணிக்க முடியாமல் தவிக்கும் இந்தியா அண்மையில் லாடக் பகுதியில் மீண்டும் ஒருமுறை கரியை பூசிக்கொண்டது. தனியாக இராஜதந்திர போரில் சீனாவை ஓரங்கட்ட முடியாது எனக் கண்ட இந்தியா அமெரிக்காவை நெருங்கி வந்துள்ளது. டிரம்ப் தேர்தலை மிக நெருங்கி இருந்த வேளையில், கருத்துக் கணிப்புக்களும் பைடனுக்கு சாதகமாக இருந்த வேலை இந்தியா அவசர அவசரமாக கையெழுத்திட்ட ஒப்பந்தம் இந்தியாவின் தேவைக்கா அமெரிக்காவின் தேவைக்கா என்ற கேள்வி இன்னும் உலக அரசியல் அரங்கில் நிற்கிறது. 
பொதுவாக அமெரிக்க போன்ற நாடுகள் தலைவர்கள் மாறும் போது வெளிநாட்டுக் கொள்கை மாற்றிக் கொள்ளும் நாடு அல்ல. நாட்டின் கொள்கை வகுப்பாளர்களின் வழிதான் ஆட்சி முன்னெடுக்கப்படும். சில அவதானிகள் சொல்வது போல அடுத்த தவனையும் டிரம்ப்தான் என்று அமெரிக்க கொள்கை வகுப்பாளர்கள் தீர்மானம் மேற்கொண்டதன் காரணமாகவே இந்த ஒப்பந்தத்தை செய்ய அனுமதித்தனர் என்று ஒரு தோற்றத்தை அமெரிக்க மக்கள் மத்தியில் உருவாக்க டிரம்ப் செய்த வேலையாக கூட இருக்கலாம். அல்லது பைடன் வெற்றி பெற்றால் சீனா ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் செயற்பாட்டில் வேறு உத்திகளை அமெரிக்கா கடைபிடிக்கலாம் என்று இந்தியா நினைத்ததாக கூட இருக்கலாம். 
பைடன் உள்நாட்டில் உள்ள இன, மத பாகுபாடுகளுக்கு எதிராக வலுவான குரல் கொடுத்த ஒருவராக இனம் காணப்பட்டவர். அதனை நடைமுறையில் கொண்டு வர அவரால் முடிந்தால் உண்மையில் உலக சமாதனத்திற்கும் காத்திரமான பங்களிப்பை வழங்க அவரால் முடியுமாகும். 

#பைடனின் வெற்றி இலங்கையில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும்
பொதுவாக எப்போதும் Democratic கட்சி ஆட்சியில் இருக்கும் போது சர்வதேச மனித உரிமைகள் ஆணையம், உலக வர்த்தக அமைப்பு, உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்ற சர்வதேச அமைப்புக்கள் ஊடாக ஏனைய நாடுகள் மீது அழுத்தங்களை பிரயோகித்து தனது ஆதிக்கத்தை செலுத்த முனைவது வழமை. பராக் ஒபாமா காலத்தில் இலங்கை மீதும் அத்தகைய அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டமையை வாசகர்கள் அறிந்திருப்பீர்கள். 
ஆனால் டிரம்ப் அவற்றை தூக்கி கடாசி விட்டு தன் வேலைகளை பார்த்தார். அத்தோடு, இலங்கை சீனாவின் பால் செல்வதை தடுக்க நேரடி மிரட்டல் எல்லாம் விடுத்தார். ஆனால் புதிதாக அமையும் பைடனின் ஆட்சி எவ்வாறானதாக அமையப் போகிறது என்பது குறித்து சொல்வதற்கு இன்னும் காலம் இருக்கிறது. எனினும் ஜோ பைடனின் உப ஜனாதிபதி கமலா ஹாரிஸ். இந்திய வம்சாவளி. தமிழ் நாட்டு வம்சாவளி. அத்தோடு கமலா ஹாரிஸ் இன் அலுவலக பணியாள் முதல்வர் இலங்கை வம்சாவளி தமிழ் பெண். 
எனவே, இவர்கள் இலங்கை இனப்பிரச்சினை, தமிழர் பிரச்சினை அல்லது இனப்படுகொலை என்று கிளம்ப சாத்தியம் உள்ளது. எனினும், அமெரிக்கா போன்ற ஒரு நாட்டில் ஒரு அரசியல்வாதியின் தேவைக்காக ஒரு நாட்டின் மீது இராஜதந்திர அழுத்தங்கள் பிரயோகிக்கப்படும் என்று எதிர்பார்க்க முடியாத போதிலும் சீனாவுடனான உறவை கட்டுப்படுத்த அதை ஒரு கருவியாக்கலாம். 
ஏற்கனவே, இலங்கை மனித உரிமைகள் பேரவையில் சம அனுசரணை வழங்கிய பிரேரணையில் இருந்து விலகியமை, பொறுப்புக்கூறல் தொடர்பில் ஆர்வம் காட்டாமை போன்ற காரணங்களால் அவர்களுக்கு தேவையான பிடியை உருவாக்கி வைத்துள்ளது. 

#பைடனின் பணி என்னவாக இருக்கும்
கொரோனா காரணமாக உலகில் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் அமெரிக்கா முதலில் உள்ளது. ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு நோய் தொற்றியுள்ளது. அதிகமான நோயாளர் இறப்பு அங்கேயே நிகழ்ந்துள்ளது. அமெரிக்க பொருளாதாரத்திலும் பாரிய தேக்கம் ஏற்பட்டுள்ளது. அதனை சீர் செய்வதே பைடனின் முதல் கடமையாக இருக்கப் போகிறது. 
அத்துடன் உள்நாட்டில் இனப்பாகுபாடு தொடர்பிலும் அவதானம் செலுத்த வேண்டிய தேவையுள்ளது. அவ்வாறே சீனாவுடனான உறவை சீர் செய்ய வேண்டியது இரு நாடுகளுக்கு மட்டுமன்றி முழு உலக சமாதனத்திற்கும் காரணமாக அமையும். சீனாவின் ஆதிக்கம் கட்டுப்படுத்தப்பட வேண்டியது எனினும், அது உலக நாடுகளில் சுதந்திரம், இறையாண்மையை பாதுகாக்கும் நோக்கில் இருக்க வேண்டுமே தவிர, அவற்றை அமெரிக்காவிடம் அடகு வைக்கும் நிலையில் இருக்க கூடாது. அமெரிக்க சீன முரண்பாடு யுத்தம் ஒன்றாக விருத்தியடையுமாக இருப்பின் உலகம் சாம்பல் மேடாக மாறுவதை தவிர்க்க இயலாமல் போகும். தேர்தலின் இறுதி முடிவுகள் இதுவரை வெளியிடப்படவில்லை. வெளியிடப்பட்ட சில ஸ்டேட்ஸ்களில் வாக்குகளை மீள எண்ணக் கோரி ஜனாதிபதி டிரம்ப் நீதிமன்றத்தை நாடியுள்ளார். அதற்கு என்ன தீர்ப்பு வரப் போகிறது. மீள எண்ணப்படுமா? இல்லையா? அவ்வாறு மீள எண்ணப்பட்டால் முடிவுகள் மாறுமா? என்ற பல கேள்விகளுக்கு எதிர்வரும் ஓரிரு நாட்களில் விடை கிடைக்கும். அதுவரை ஜோ பைடனுக்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்து வைப்போம்.
- fபயாஸ் MA fபரீட்.
பைடனின் வெற்றி உலக அரசியலில் ஏற்படுத்தப் போகும் மாற்றம் என்ன? பைடனின் வெற்றி உலக அரசியலில் ஏற்படுத்தப் போகும் மாற்றம் என்ன? Reviewed by irumbuthirai on November 08, 2020 Rating: 5

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் மற்றும் தொடர்மாடிகள் தொடர்பான விபரம்..

November 08, 2020

நாளை (9) காலை 5:00 மணியுடன் மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் நீக்கப்படுவதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். 
இதேவேளை தனிமைப்படுத்தல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்ட பிரதேசங்களை இங்கு தருகிறோம். 
கொழும்பு மாவட்டம்: மோதர, மட்டக்குளி ,புளூமெண்டல், மாளிகாவத்த, பொரள்ள, தெமடகொட, கொட்டாஞ்சேனை, வெல்லம்பிட்டிய, கிரான்பாஸ், ஆட்டுப்பட்டி தெரு, வாழைத்தோட்டம் மற்றும் கரையோர பொலிஸ் பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. 
இதேவேளை மட்டக்குளியின் மெத்சந்த செவன, மிஹிஜயசெவன, முகத்துவாரத்தின் ரண்மின செவன, தெமட்டகொடையின் சிறிசந்த உயன, மாளிகாவத்தையின் தேசிய வீடமைப்புத் திட்டம் போன்ற தொடர்மாடிகளில் இருந்து எவரும் வெளிச் செல்லவோ, அல்லது உட்பிரவேசிப்பதற்கோ அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. 

கம்பஹா மாவட்டம்: வத்தளை, பேலியகொடை, கடவத்தை, ராகம, நீர்கொழும்பு, பமுனுகம, ஜா-எல, சபுகஸ்கந்தை ஆகிய பொலிஸ் அதிகார பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. 

களுத்துறை மாவட்டம்: ஹொரண மற்றும் இங்கிரிய பொலிஸ் பிரிவுகளும் வேகட கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. 

குருநாகல் மாவட்டம்: குருணாகலை மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேசம், குளியாப்பிட்டிய பகுதிகளும் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும். 

கேகாலை மாவட்டம்: மாவனெல்ல, ருவான்வெல்ல பகுதிகளும் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களாகவே பேணப்படும் எனவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். 

இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் ஊடாக போக்குவரத்து மேற்கொள்ள முடியும் எனவும் தனிமைப்படுத்தப்படுத்தல் பகுதிகளில் இருந்து எவரையும் வாகனத்தில் ஏற்றவோ இறக்கவோ முடியாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் மற்றும் தொடர்மாடிகள் தொடர்பான விபரம்.. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் மற்றும் தொடர்மாடிகள் தொடர்பான விபரம்.. Reviewed by irumbuthirai on November 08, 2020 Rating: 5

நாளை ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டாலும் தனிமைப்படுத்தல் நீக்கப்படாத பிரதேசங்கள்

November 08, 2020

நாளை (9) காலை 5:00 மணியுடன் மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் நீக்கப்படுவதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். 
இதேவேளை தனிமைப்படுத்தல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்ட பிரதேசங்களை இங்கு தருகிறோம். 
கொழும்பு மாவட்டம்: மோதர, மட்டக்குளி ,புளூமெண்டல், மாளிகாவத்த, பொரள்ள, தெமடகொட, கொட்டாஞ்சேனை, வெல்லம்பிட்டிய, கிரான்பாஸ், ஆட்டுப்பட்டி தெரு, வாழைத்தோட்டம் மற்றும் கரையோர பொலிஸ் பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. 

கம்பஹா மாவட்டம்: பேலியகொட, வத்தளை, கடவத்த, ராகம, நீர்கொழும்பு, பமுனுகம, ஜாஎல மற்றும் சப்புகஸ்கந்த பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. 

களுத்துறை மாவட்டம்: ஹொரண மற்றும் இங்கிரிய பொலிஸ் பிரிவுகளும் வேகட கிராம் சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. 

குருநாகல் மாவட்டம்: குருணாகலை மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேசம், குளியாப்பிட்டிய பகுதிகளும் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும். 

கேகாலை மாவட்டம்: மாவனெல்ல, ருவான்வெல்ல பகுதிகளும் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களாகவே பேணப்படும் எனவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
நாளை ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டாலும் தனிமைப்படுத்தல் நீக்கப்படாத பிரதேசங்கள் நாளை ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டாலும் தனிமைப்படுத்தல் நீக்கப்படாத பிரதேசங்கள் Reviewed by irumbuthirai on November 08, 2020 Rating: 5

நீர் கட்டணங்களுக்கு சலுகை காலம்..

November 07, 2020

நீர் கட்டணங்களை செலுத்த முடியாத தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள அல்லது தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள நீர் பாவனையாளர்கள் கட்டணத்தை செலுத்த முடிந்த தினத்தில் செலுத்துவதற்காக சலுகை வழங்கப்படும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். 
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நீர் கட்டணங்களுக்கு சலுகை காலம்.. நீர் கட்டணங்களுக்கு சலுகை காலம்.. Reviewed by irumbuthirai on November 07, 2020 Rating: 5

மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடா?

November 07, 2020

8 தொடக்கம் 10 மாத காலப்பகுதிக்கு தேவையான போதுமானளவு மருந்து வகைகள் நாட்டில் இருப்பதாகவும் சிலர் குற்றம் சாட்டும் வகையில் நாட்டில் மருந்து வகைகளுக்கு எந்தவித தட்டுப்பாடும் இல்லை என அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். 
இலங்கையில் மருந்து வகைகளை தயாரிப்பதற்கான அடிப்படை நடவடிக்கைகள் பல மேற்கொண்டிருப்பதாகவும் தெரிவித்த அவர் எதிர் காலத்தில் மருந்து வகைகளை இறக்குமதி செய்வதை குறைத்து கொள்ளக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடா? மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடா? Reviewed by irumbuthirai on November 07, 2020 Rating: 5

இலங்கையின் முதலாவது திரவ எரிவாயு மின்னுற்பத்தி நிலையம்...

November 07, 2020

இம்மாத இறுதியில் அதாவது ஜனாதிபதி கோட்டாய ராஜபக்ஷ பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தியாகும் தருணத்தில் இலங்கையின் முதலாவது திரவ எரிவாயு மின்னுற்பத்தி நிலையத்தின் கட்டுமாணப் பணிகள் ஆரம்பமாகவுள்ளதாக மின்வலு எரிசக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். 
இந்த நிலையம் 300 மெகா வோட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடியதாக இருக்கும். இது கெரவலப்பிட்டியிலுள்ள லக்தனவி மின்னுற்பத்தி நிலையத்தில் அமையவுள்ளது.
இலங்கையின் முதலாவது திரவ எரிவாயு மின்னுற்பத்தி நிலையம்... இலங்கையின் முதலாவது திரவ எரிவாயு மின்னுற்பத்தி நிலையம்... Reviewed by irumbuthirai on November 07, 2020 Rating: 5

அடுத்த வருட ஆரம்பத்தில் கொரோனா 3வது அலை...

November 07, 2020

கொரோனா 3வது அலை அடுத்த வருட ஆரம்பத்தில் உருவாகும் என்று ஆய்வுகள் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அத்தோடு 02 வருட காலம் இந்த வைரசுடன் வாழும் நிலையை உலக மக்கள் எதிர்கொண்டிருப்பதாகவும் சுகாதார அமைச்சின் ஊடக பேச்சாளர் வைத்தியர் ஜயருவன் பண்டார தெரிவித்துள்ளார். 
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, 
இந்த மூன்றாவது வைரசு அலை முதலாம் மற்றும் இரண்டாம் அலைகளிலும் பார்க்க மிக பயங்கரமானது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மூன்றாவது கொரோனா அலை உருவாகும் சூழலில் 55 துறைசார் பிரிவுகள் பின்பற்ற வேண்டிய புதிய வழிகாட்டல்கள் அடங்கிய கோவையை சுகாதார அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது. ஆடைத்தொழிற்துறை, போக்குவரத்து, வாடகை போக்குவரத்து சேவை, வருமானமீட்டும் சேவைகள், அரச அலுவலகங்கள், தனியார் சேவைகள், பல்பொருள் அங்காடிகள், கடைகள், நிதி நிறுவனங்கள், வங்கிகள், ஆடை விற்பனை நிலையங்கள், விவசாயம், பொருளாதார மத்திய நிலையங்கள், பேக்கரி, வீதியோர விற்பனை கூடங்கள், நடமாடும் விற்பனையாளர்கள் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்தவர்களுக்காக இந்த விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 
1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பின்பற்றும் விதத்தில் பல்பொருள் அங்காடிகள் மற்றும் கடைத் தொகுதிகளில் ஏற்பாடுகளை செய்வதற்கு சுகாதார அமைச்சு அனுமதியளித்துள்ளது. 
இதேவேளை கட்டட நிர்மாண பணிகள் இடம்பெறும் இடங்கள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், உயர் கல்வி நிறுவனங்கள், தனியார் வகுப்புகள், உள்ளக நிகழ்வுகள், திறந்தவெளி நிகழ்வுகள், ஒன்றுகூடல்களுக்கு தொடர்ந்தும் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், திரையரங்குகள், சிறுவர் பூங்காக்கள், மிருகக்காட்சி சாலைகள், விழாக்கள், இசை நிகழ்ச்சிகள், கரையோர விருந்துகள், நீர் தடாகங்கள், சூதாட்ட நிலையங்கள், இரவு நேர களியாட்ட விடுதிகள், மசாஜ் நிலையங்கள் தொடர்ந்தும் மூடப்பட்டிருக்க வேண்டும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது என்றார்.
(அ.த.தி)
அடுத்த வருட ஆரம்பத்தில் கொரோனா 3வது அலை... அடுத்த வருட ஆரம்பத்தில் கொரோனா 3வது அலை... Reviewed by irumbuthirai on November 07, 2020 Rating: 5

போக்குவரத்து விதி மீறல் (Spot Fine): தண்டப்பணம் செலுத்தும் காலம் நீடிப்பு:

November 07, 2020

Covid-19 நிலைமைக்கு மத்தியில் மோட்டார் வாகன போக்குவரத்து விதி மீறல் தண்டப்பணத்தை (Sopt Fine) செலுத்த முடியாத பொது மக்களுக்காக நிவாரணக் காலஅவகாசம் அறிவிக்கப்பட்டுள்ளது. 
இதுதொடர்பாக தபால் மா அதிபர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு: 
 இது வரையில் நிலவும் கொரோனா வைரஸ் தொற்று பரவலின் காரணமாக சுகாதார பரிந்துரையின் அடிப்படையில் மூடப்பட்டுள்ள பிரதேசம் மற்றும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள பிரதேசங்களை போன்று பல்வேறு நடைமுறை நிலைமைக்கு மத்தியில் தபால் அலுவலகங்கள் திறக்கப்படாத பிரதேசங்களில் பொலிஸ் போக்குவரத்து வாகன பிரிவினால் வழங்கப்பட்டுள்ள போக்குவரத்து விதி மீறல் (Spot Fine) தண்டப்பணத்தை பலரால் செலுத்துவதற்கு முடியாதுள்ளது. 
சிரமங்களுக்கு உள்ளாகியுள்ள பொது மக்களுக்கு நிவாரணத்தை வழங்குவதற்காக பொலிஸ்மா அதிபர் மற்றும் எம்மால் மேற்கொள்ளப்பட்ட பரிந்துரைக்கு அமைவாக மோட்டார் வாகன போக்குவரத்து விதி மீறல் (Sop Fine)) தண்டப்பணத்தை செலுத்துவதற்கு நிவாரண காலத்தை வழங்குவதற்காக நிதி அமைச்சின் செயலாளரின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. 
 இதற்கமைவாக கொவிட் - 19 இரண்டாவது அலையின் காரணமாக அலுவலக பணிகளை நிறுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை திகதி தொடக்கம் நாடு முழுவதிலும் தற்போதுள்ள பயணத்தடை நீக்கும் வரையிலான திகதி வரையிலுமான தினங்களை தவிர்த்து, தவறு இழைத்த தினம் தொடக்கம் நாட்கள் கணக்கிடபட்டு தண்டப்பணத்தை செலுத்துவதற்கு மேலதிக கால அவகாசம் வழங்கப்படும் என்று தபால்மா அதிபர். ரஞ்ஜித் ஆரியரத்ன இந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.
(அ.த.தி)
போக்குவரத்து விதி மீறல் (Spot Fine): தண்டப்பணம் செலுத்தும் காலம் நீடிப்பு: போக்குவரத்து விதி மீறல் (Spot Fine): தண்டப்பணம் செலுத்தும் காலம் நீடிப்பு: Reviewed by irumbuthirai on November 07, 2020 Rating: 5

திவுலபிடிய கொரோனா எதிரொலி: 05-11-2020 நடந்தவை...

November 07, 2020

திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 32ம் நாள் அதாவது வியாழக்கிழமை (05) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • வெலிக்கடை சிறையில் 4 பெண் கைதிகள், 2 ஆண்கைதிகள், ஒரு சிறை அதிகாரி ஆகிய 7 பேருக்கு கொரோனா தொற்று. 
  • தனிமைப்படுத்தப்பட்டிருந்த புளத்கொஹுபிட்டிய பொலிஸ் பிரிவு மற்றும் கேகாலை மாவட்டத்தின் கலிகமுவ பிரதேச சபை பகுதிகளில் தனிமைப்படுத்தல் நீக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிப்பு. 
  • கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பொலிஸாரின் எண்ணிக்கை 297 ஆக உயர்வு. 
  • கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் மற்றும் கோவிட் -19 சிகிச்சை நிலையத்தில் பாதுகாப்புக் கடமைக்கு அனுப்பப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர், மதுபோதையில் இருந்தமை மற்றும் கடமையைச் செய்யத் தவறிய குற்றச்சாட்டில் சேவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 
  • மேலும் 11 துறைமுக ஊழியர்களுக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

  • கல்பிட்டி ஆதார வைத்தியசாலையின் ஊழியர் ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 
  • புத்தளம் நிந்தனியைச் சேர்ந்த 55 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து இன்று வீட்டுக்கு வரும்பொழுது திடீரென விழுந்து உயிரிழப்பு. 
  • தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்ட பின்னர் சுய தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை கடுமையான முறையில் கண்காணிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறுவுறுத்தியுள்ளார். 
  • நாட்டில் முதலாவது கொரோனா தொற்றின் போது 9 மாதங்களில் 13 மரணங்கள் மாத்திரமே பதிவானதாகவும் இருப்பினும் கடந்த இரண்டு வாரங்களில் மாத்திரம் 11 மரணங்கள் பதிவாகி உள்ளதாகவும் உயிரிழந்தவர்களுள் சிலர் உயிரிழந்த பின்னரே கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்தமை இனங்காணப்பட்டதாகவும் வைரஸ் இப்போது வீடுகளுக்கு வந்துள்ளதாகவும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 
  • மாவனல்லையில் மேலும் 9 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதில் கடந்த தினம் மாவனல்லையில் இடம்பெற்ற திருமண வைபவம் ஒன்றின் மணமக்களும் அடங்குவதாகவும் தெரிவிப்பு. 
  • தனியார் வைத்தியசாலை ஒன்றில் PCR செய்தவருக்கு POSITIVE. ஆனால் அவர் பிழையான தகவல்களை வழங்கியமையால் அவரைத் தேடிப் பிடிப்பது கடினமாக உள்ளதாக ராணுவ தளபதி தெரிவிப்பு. 
  • பெரண்டிக்ஸ் கொத்தணி தொடர்பில் இதுவரை எவ்வித விசாரணைகளும் மேற்கொள்ளப்படாததால் அது தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட பொலிஸ் குழு தொடர்வில் உடன் அறிவிக்குமாறு சட்டமா அதிபர் பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்துள்ளார். 
  • கொழும்பு மத்திய தபால் பரிமாற்றகத்தின் ஊழியர் ஒருவருக்கு கொவிட் 19 தொற்று உறுதியானதால் அது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. 
  • மேல் மாகாணத்தில் அமுலாக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை எதிர்வரும் திங்கட்கிழமையுடன் நீக்குவதற்கு எதிர்பார்த்திருப்பதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவிப்பு. 
  • 25 நபர்களுக்கு மேல் மஸ்ஜித்களில் ஒன்றுசேரக் கூடாது என்று முஸ்லிம் சமய கலாசார திணைக்களம் அறிவிப்பு. இதன் காரணமாக ஜும்ஆவுக்கு பதிலாக லுஹர் தொழுகையை நிறைவேற்றுமாறு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அறிக்கை வெளியிட்டது. 
  • கொரோனாவினால் இன்றைய தினம் மாத்திரம் 05 பேர் மரணம். அதனடிப்படையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. 3 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் உயிரிழப்பு. விபரம் இதோ: (1) கொழும்பு-2. 46 வயது ஆண். (திபுரு ஆதார வைத்தியசாலையில் உயிரிழப்பு) (2) கொழும்பு-12. 58 வயதுடைய பெண். (வீட்டில் உயிரிழப்பு) (3) கொழும்பு-14 73 வயதுடைய பெண். (வீட்டில் உயிரிழப்பு) (4) கொழும்பு-15. 74 வயதுடைய ஆண். (வீட்டில் உயிரிழப்பு) (5) வெல்லம்பிட்டிய. 68 வயதுடைய பெண். (கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழப்பு) 
  • இன்றைய தினம் 383 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.
  • Irumbuthirainews
i
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 05-11-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 05-11-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on November 07, 2020 Rating: 5

திவுலபிடிய கொரோனா எதிரொலி: 04-11-2020 நடந்தவை...

November 07, 2020

திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 31ம் நாள் அதாவது புதன்கிழமை (04) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • சவூதி அரேபியாவில் 150 இடங்களில் தங்கியுள்ள இலங்கையர்களை எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்குள் நாட்டுக்கு அழைத்து வருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். 
  • கொரோனாவின் இரண்டாம் அலையை கட்டுப்படுத்துவதற்கு, இரண்டு மாதத்திற்கும் அதிக காலம் எடுக்கும் என சுகாதர அமைச்சின் பொது சுகாதார சேவை பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவிப்பு. 
  • நாடு முழுவதிலும் உள்ள அரச வைத்தியசாலைகளில் சிகிச்சைகளை பெறும் கிளினிக் நோயாளர்களின் மருந்துகளை வீடுகளுக்கு விநியோகிக்கும் பணி இன்று முதல் ஆரம்பமானது.
  • பொரளை பொலிஸின் இதுவரை 41 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பொரளை பொலிஸிற்கு பொது மக்கள் செல்வது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது. 
  • கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட பத்தரமுல்ல பகுதியில் உள்ள கல்வி அமைச்சகம் நாளை (5) முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவிப்பு. 
  • முதலீட்டு ஊக்குவிப்பு வலயம் மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி வலயம் என்பனவற்றில் அனுமதி வழங்கப்பட்ட கைத்தொழிற்சாலைகளுக்கு ஊரடங்கு அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்வது அவசியமில்லை என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிப்பு. 
  • மேல் மாகாணத்தில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள, வாகன வருமான அனுமதி பத்திரத்தை விநியோகிக்கும் செயற்பாடுகள் மறுஅறிவித்தல் வரை தொடர்ந்தும் இடைநிறுத்தப்படுவதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. எவ்வாறாயினும் www.motortraffic.wp.gov.lk என்ற இணையதளத்திற்கு பிரவேசித்து, அதன் ஊடாக வாகன வருமான அனுமதி பத்திரத்தை பெற்றுக் கொள்ள முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன ஊழியர்கள் 5 பேருக்கு கொரோணா உறுதி செய்யப்பட்டுள்ளது. 
  • இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அரிசிக்கான அதிகபட்ச சில்லரை விலை தொடர்பில் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய வௌ்ளை / சிவப்பு சம்பா (வேகவைத்தது) - 94 ரூபா, பச்சை சம்பா (சிவப்பு / வௌ்ளை) - 94 ரூபா, நாட்டரிசி - 92 ரூபா, பச்சை அரிசி (வெள்ளை / சிவப்பு) - 89 ரூபா என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

  • இதுவரை கொழும்பு மாநகரசபை ஊழியர்கள் 83 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 
  • கொழும்பு 13 பிரதேசத்தை சேர்ந்த 79 வயதுடைய பெண்ணொருவர் நேற்று (03) தனது வீட்டில் உயிரிழந்த நிலையில் பிரேத பரிசோதனையின் போது அவருக்கு இன்று (04) கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இலங்கையில் 24 ஆவது கொவிட் 19 மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார். இதேவேளை, கொழும்பு 13 ஐச் பிரதேசத்தை சேர்ந்த 78 வயதுடைய நபர் ஒருவர் வீட்டில் தவறி விழுந்ததில் தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த 2 ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று (03) உயிரிழந்துள்ளார். குறித்த நபரின் மரணம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் குறித்த நபரின் மரணம் covid-19 தொற்று காரணமாக ஏற்படாத காரணத்தினால் அதனை கொவிட் 19 மரணமாக கருத முடியாது என சுகாதார சேவை பணிப்பாளர் அறிவிப்பு.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 04-11-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 04-11-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on November 07, 2020 Rating: 5

மேல் மாகாணத்தில் வாகன அனுமதிப் பத்திரம் Online முறையில்...

November 06, 2020

மேல் மாகாணத்திற்குள் வாகன அனுமதிப் பத்திரத்தை விநியோகிக்கும் பணி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
ஆனால் இதை Online முறையில் பெறலாம். விபரத்தை கீழே காணலாம்.
மேல் மாகாணத்தில் வாகன அனுமதிப் பத்திரம் Online முறையில்... மேல் மாகாணத்தில் வாகன அனுமதிப் பத்திரம் Online முறையில்... Reviewed by irumbuthirai on November 06, 2020 Rating: 5

Vacancies: Sabaragamuwa University of Sri Lanka

November 06, 2020

Vacancies in the Sabaragamuwa University of Sri Lanka. 
Closing date: 20-11-2020. 
See the details below.


Vacancies: Sabaragamuwa University of Sri Lanka Vacancies: Sabaragamuwa University of Sri Lanka Reviewed by irumbuthirai on November 06, 2020 Rating: 5

Vacancy: Urban Development Authority

November 06, 2020

Vacancy in the Urban Development Authority 
Closing date: 10 days from 01-11-2020. 
See the details below.
Source: Sunday Observer 01-11-2020.


oop
Vacancy: Urban Development Authority Vacancy: Urban Development Authority Reviewed by irumbuthirai on November 06, 2020 Rating: 5
Powered by Blogger.