இலங்கையில் உற்பத்தியாகவிருக்கும் கொரோனா தடுப்பு மருந்து!


தற்போதைய நிலையில் கொரோனா தடுப்பு மருந்துகளை பல்வேறு நாடுகளில் இருந்து இலங்கை பெற்றுக்கொண்டு வருகிறது. அந்த தடுப்பு மருந்து இலங்கையிலேயே உற்பத்தி செய்வதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளதாக தற்போது சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். 
விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். 
இலங்கை அரச மருந்தகக் கூட்டுத்தாபனமும் சிநோவெக் பயோடெக் மற்றும் கெலுன் லைஃப் சயன்ஸ் தனியார் கம்பெனியும் இணைந்து இந்த தடுப்பு மருந்தை உற்பத்தி செய்வது தொடர்பில் யோசனை முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் உற்பத்தியாகவிருக்கும் கொரோனா தடுப்பு மருந்து! இலங்கையில் உற்பத்தியாகவிருக்கும் கொரோனா தடுப்பு மருந்து! Reviewed by irumbuthirai on May 21, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.