இறப்பவர்களில் அதிகமானோர் 55 வயதுக்கு மேற்பட்டோர்: அரசாங்கத்தின் முக்கிய வேண்டுகோள்:


இலங்கையில் கொரோனா 3ஆம் அலை பரவல் உச்சமடைந்துள்ள நிலையில், கொரோனா தொற்றால் மரணிப்பவர்களில் அதிகமானோர் 55 வயதுக்கு மேற்பட்டவர்களாக காணப்படுகின்றமை காரணமாக கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 
அதாவது சுவாசிப்பதில் சிக்கல் உட்பட, கொரோனா அறிகுறிகள் காணப்படும், 55 வயதுக்கு மேற்பட்டவர்கள் உடனடியாக மருத்துவர் ஒருவரினது ஆலோசனையை பெறுமாறு அல்லது அருகிலுள்ள வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக செல்லுமாறு அவர் அறிவித்தல் விடுத்துள்ளார். 
நோயின் ஆரம்பத்திலேயே இவ்வாறானவர்களை அடையாளம் கண்டு, மருத்துவ கண்காணிப்பின் கீழ் அவர்களை பேணுவதற்காக குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இறப்பவர்களில் அதிகமானோர் 55 வயதுக்கு மேற்பட்டோர்: அரசாங்கத்தின் முக்கிய வேண்டுகோள்: இறப்பவர்களில் அதிகமானோர் 55 வயதுக்கு மேற்பட்டோர்: அரசாங்கத்தின் முக்கிய வேண்டுகோள்: Reviewed by irumbuthirai on May 20, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.