Online கல்வி முறையில் தேவையற்ற அழுத்தங்களை ஏற்படுத்த வேண்டாம் - கல்வி அமைச்சு


கொரோனா பரவல் காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன நிலையில் தற்போது இடம்பெறும் இணையவழி (Online) கல்வி நடவடிக்கைகளினால் மாணவர்களும் ஆசிரியர்களும் பல்வேறு மன அழுத்தங்களுக்கு உள்ளாகும் நிகழ்வுகள் இடம்பெறுவதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது. 
மாணவர்களுக்கு ஓய்வில்லாமல் எந்நேரமும் வகுப்புகளை நடாத்துதல், பாட ரீதியாக அளவுக்கதிகமான வேலைப் பளுவை சுமத்துததல், ஆசிரியைகள் சாரி அல்லது ஒசரி போன்ற 
உடைகளை அணிந்து பாடங்களை நடத்துமாறும் அறிவுறுத்தப்படல் போன்ற பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். 
எனவே, இது போன்ற சம்பவங்கள் இடம் பெறாமல் தடுக்க அதிபர்கள், பிரதி அதிபர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் தேவையற்ற மன அழுத்தங்களுக்கு உள்ளாகாதவாறு இணைய வழி கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
Online கல்வி முறையில் தேவையற்ற அழுத்தங்களை ஏற்படுத்த வேண்டாம் - கல்வி அமைச்சு Online கல்வி முறையில் தேவையற்ற அழுத்தங்களை ஏற்படுத்த வேண்டாம் - கல்வி அமைச்சு Reviewed by irumbuthirai on May 22, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.