ஒலிம்பிக் தொடர்பில் மூன்றரை இலட்சம் கையொப்பங்களுடன் விடுக்கப்பட்ட கோரிக்கை


ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த வருடம் (2020) நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா பரவல் காரணமாக இந்த வருடம் வரை ஒத்திவைக்கப்பட்டது. அந்தவகையில் ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாவதற்கு இன்னும் 10 வாரங்களே உள்ள நிலையில் ஜப்பானியர்கள் முக்கிய கோரிக்கை விடுத்துள்ளனர். 
அதாவது ஒலிம்பிக்கை இரத்து செய்யுமாறு கோரி சுமார் 350,000 கையொப்பங்களுடனான விண்ணப்பத்தை டோக்கியோ ஆளுநருக்கும் ஒலிம்பிக் மற்றும் பரா ஒலிம்பிக் குழு அதிகாரிகளுக்கும் சமர்ப்பித்துள்ளனர். 
ஜப்பானுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளையும், விளையாட்டு வீரர்களையும் ஏக மனதுடன் ஏற்றுக்கொள்ளக்கூடிய சூழலில் மாத்திரமே இந்த போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 
கொரோனா பரவல் காரணமாக டோக்கியோ உட்பட முக்கிய நகரங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஒலிம்பிக் தொடர்பில் மூன்றரை இலட்சம் கையொப்பங்களுடன் விடுக்கப்பட்ட கோரிக்கை ஒலிம்பிக் தொடர்பில் மூன்றரை இலட்சம் கையொப்பங்களுடன் விடுக்கப்பட்ட கோரிக்கை  Reviewed by irumbuthirai on May 16, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.