இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கு அறிமுகமாகிறது புதிய முறை!


கொரோனா பரவலுக்கு மத்தியிலும் சுற்றுலாத்துறை தொடர்பாக அரசாங்கம் கூடிய கவனம் செலுத்தி வருவதை அவதானிக்க முடிகிறது. 
அந்தவகையில் இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கு Bio Bubble (உயிர்க்குமிழி) என்ற முறை மூலம் வர முடியும் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிக்க விஜேசிங்க இதனை தெரிவித்துள்ளார். 
இது தொடர்பில் சுகாதார சேவை பணிப்பாளருக்கும் பொலிஸ்மா அதிபருக்கும் அறிவித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். 
எவ்வாறாயினும் இவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள் சுகாதார வழிகாட்டுதல்களை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கு அறிமுகமாகிறது புதிய முறை! இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கு அறிமுகமாகிறது புதிய முறை! Reviewed by irumbuthirai on May 16, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.