அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அதிரடி: Port City க்கு ஆதரவாக வாக்களித்த இருவர் நீக்கம்!


அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (All Ceylon Makkal Congress - ACMC) கட்சியைச் சேர்ந்த இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியிலிருந்து தற்காலிகமாக இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 
புத்தளம் மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர் அலி ஷப்ரி ரஹீம் மற்றும் அநுராதபுரம் மாவட்டத்தின் இஷாக் ரஹ்மான் ஆகியோரே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளனர். 
இது தொடர்பில் அக்கட்சியின் பதில் தலைவர் சட்டத்தரணி எம்.என். ஷஹீட் தெரிவிக்கையில், 
அண்மையில் இடம்பெற்ற கட்சி உயர்மட்டக்குழு கூட்டத்தின் போது கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானம் எடுக்கப்பட்டது. ஆனால் அதையும் மீறி இருவரும் ஆதரவாக வாக்களித்ததனால் தாம் இந்த தீர்மானத்தை எடுத்ததாக அவர் தெரிவித்தார். 
தனது தீர்மானம் கட்சியின் அரசியல் பீடத்திற்கு அறிவிக்கப்பட்டு, அவர்கள் தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அதிரடி: Port City க்கு ஆதரவாக வாக்களித்த இருவர் நீக்கம்! அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அதிரடி: Port City க்கு ஆதரவாக வாக்களித்த இருவர் நீக்கம்! Reviewed by irumbuthirai on May 22, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.