அரசின் அறிவிப்பு நெருக்கடி நிலைக்கான அறிகுறியா?

May 15, 2021

இலங்கையில் கொரோனா பரவல் தொடர்பாகவும் கொரோனா மரணங்கள் தொடர்பாகவும் சமூக வலைத்தளங்கள் மற்றும் ஏனைய ஊடகங்களில் பலவிதமான கருத்துக்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. 
சில வைத்தியசாலைகளில் இடப்பற்றாக்குறை எனவும் அதேபோன்று மரணங்கள் தொடர்பாக உண்மையான தகவல் வெளியாவதில்லை எனவும் பல குற்றச்சாட்டுகள் வலம் வருகின்றன. 
இந்த நிலையில் கொரோனா தொற்று உறுதியான நபர் ஒருவருக்கு எவ்வித நோய் அறிகுறியும் இல்லாத 
சந்தர்ப்பத்தில் அவரை வீட்டிலேயே வைத்து கண்காணிக்கவுள்ளதாகவும் இந்த நடைமுறையை எதிர்வரும் திங்கட் கிழமை முதல் அமுல்படுத்தவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். 
இதேவேளை குறித்த நபருக்கு நோய் அறிகுறிகள் காணப்படுமாயின் அவர் வைத்தியசாலைக்கு மாற்றப்படுவார் எனவும் தெரிவித்துள்ளார். 
இந்த அறிவிப்பானது கொரோனா தொடர்பில் இலங்கை நெருக்கடியான ஒரு நிலையை எதிர்கொண்டுள்ளதா? வெளியாகும் உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் உண்மையா? என்ற சந்தேகங்களை உறுதிப்படுத்துவதற்கான அறிகுறியா எனவும் தோன்றுகிறது.
அரசின் அறிவிப்பு நெருக்கடி நிலைக்கான அறிகுறியா? அரசின் அறிவிப்பு நெருக்கடி நிலைக்கான அறிகுறியா? Reviewed by irumbuthirai on May 15, 2021 Rating: 5

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மீண்டும் நிவாரணப் பொதிகள்!

May 15, 2021

நாட்டில் ஒரு கிழமைக்கு மேல் முடக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கும் முடக்கப்படாத பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கும் 5000 ரூபா பெறுமதியான நிவாரணப் பொருட்கள் அடங்கிய பொதிகளை விநியோகிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
20 வகையான அத்தியாவசிய பொருட்களை உள்ளடக்கி இந்தப் பொதி சதொச ஊடாக
வழங்கப்படும். கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்களூடாக இந்த நிவாரணப் பொதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு அறிக்கை வௌியிட்டுள்ளது.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மீண்டும் நிவாரணப் பொதிகள்! குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மீண்டும் நிவாரணப் பொதிகள்! Reviewed by irumbuthirai on May 15, 2021 Rating: 5

இன்று முதல் தபால் நிலையங்களின் சேவை நேரத்தில் மாற்றம்!

May 13, 2021

இன்று (13) முதல் நாட்டிலுள்ள சகல தபால் மற்றும் உப தபால் அலுவலகங்களும் மு.ப. 09.00 - பி.ப. 03.00 மணி வரை மாத்திரமே திறக்கப்பட்டிருக்கும் என தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். 
மேலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் தபால் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதோடு சில பிரதேசங்களில் 02 நாட்களுக்கு ஒரு தடவை தபாலை விநியோகிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இன்று முதல் தபால் நிலையங்களின் சேவை நேரத்தில் மாற்றம்! இன்று முதல் தபால் நிலையங்களின் சேவை நேரத்தில் மாற்றம்! Reviewed by irumbuthirai on May 13, 2021 Rating: 5

திருமண நிகழ்வுகளுக்கு தடை! ஆனால் பதியலாம்!

May 13, 2021

கொரோனா பரவலின் தீவிரத்தை கருத்தில் கொண்டு இம்மாதம் (மே) 31ஆம் திகதி வரை அமுல்படுத்தப்பட்டுள்ள விதிமுறைகளிலே திருமண நிகழ்வுகளை நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 
ஆனால் திருமண பதிவுகளை செய்யலாம். அதில் பதிவாளர் உட்பட 15 பேர் மட்டும் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
திருமண நிகழ்வுகளுக்கு தடை! ஆனால் பதியலாம்! திருமண நிகழ்வுகளுக்கு தடை! ஆனால் பதியலாம்! Reviewed by irumbuthirai on May 13, 2021 Rating: 5

அடையாள அட்டையைப் பயன்படுத்தி வெளியே செல்லும் முறை இதோ...

May 13, 2021

இன்று (13) முதல் தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்திற்கு அமைய, வீடுகளில் இருந்து வௌியில் செல்லும் முறைமை மீண்டும் அமுலாகிறது. 
பயணக் கட்டுப்பாடில்லாத நேரங்களிலேயே வீட்டிலிருந்து வெளியே செல்ல இந்த முறை பயன்படுத்தப்படும். 
அதுமட்டுமன்றி வெளியே செல்லும்போது தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டு அல்லது சாரதி அனுமதிப்பத்திரத்தை அனைவரும் வைத்திருப்பது கட்டாயமாகும். 
வீட்டிலிருந்து வெளியே செல்ல தேசிய அடையாள அட்டையை பயன்படுத்தும் முறை இதோ ... 
அடையாள அட்டையின் கடைசி இலக்கம் 0,2,4,6,8 போன்ற இரட்டை எண்களில் ஏதாவது ஒரு எண்ணாக இருந்தால் அவர்கள் இரட்டை இலக்க தினங்களில் வெளியே செல்லலாம். 
அடையாள அட்டையின் கடைசி இலக்கம் 1,3,5,7,9 ஆகிய ஒற்றை எண்களில் ஏதாவது ஒரு எண்ணாக இருந்தால் அவர்கள் ஒற்றை இலக்க தினங்களில் வெளியே செல்லலாம். 
உதாரணமாக இன்று 13ஆம் தேதி ஒற்றை இலக்க தினமாகும். எனவே கடைசி இலக்கம் ஒற்றை இலக்கமாக கொண்டவர்கள் வெளியே செல்லலாம் அதுவும் பயணக் கட்டுப்பாடு இல்லாத நேரங்களில். 
எவ்வாறாயினும், தொழில் நிமித்தம் வீடுகளிலிருந்து வௌியேறுவோர், தனியார் மற்றும் அரசாங்க ஊழியர்கள் இந்த நடைமுறையைப் பின்பற்றத் தேவையில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அடையாள அட்டையைப் பயன்படுத்தி வெளியே செல்லும் முறை இதோ... அடையாள அட்டையைப் பயன்படுத்தி வெளியே செல்லும் முறை இதோ... Reviewed by irumbuthirai on May 13, 2021 Rating: 5

மாகாணங்களுக்கு இடையில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டோர்...

May 12, 2021

எதிர்வரும் 31ஆம் தேதி வரை மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் பின்வரும் அத்தியாவசிய சேவைகள் நிமித்தம் மாத்திரம் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. 
1) சுகாதார சேவை 
2) பொலிஸ் மற்றும் முப்படை 
3) அத்தியாவசிய உத்தியோகபூர்வ பயணங்களுக்கான அரச அதிகாரிகள் 
4) அத்தியாவசிய சேவை விநியோகஸ்தர்கள் 
5) அத்தியாவசிய சேவை வழங்குனர்கள் ( பயன்பாட்டு சேவைகள்) 
6) குடும்பத்துக்கு நெருக்கமானவரின் இறுதிச் சடங்கிற்காக ( உறுதிப்படுத்தல் கட்டாயமாகும்) 
7) வௌிநாடு செல்லுதல்/ வௌிநாட்டில் இருந்து வருகை அல்லது ஏற்றுமதி / இறக்குமதி செயற்பாடுகளுக்கு தேவையான சேவைகள் ( உறுதிப்படுத்தல் கட்டாயமாகும்)
மாகாணங்களுக்கு இடையில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டோர்... மாகாணங்களுக்கு இடையில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டோர்... Reviewed by irumbuthirai on May 12, 2021 Rating: 5

பெற்றோர்களுக்குரிய முக்கிய அறிவிப்பு!

May 11, 2021

தற்போதைய நிலைமை காரணமாக, பிள்ளைகள் பாடசாலைகளுக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருப்பதால் அடிக்கடி சாப்பிட முனைகிறார்கள். எனவே அவர்களுக்கு இனிப்பு மற்றும் எண்ணெய் நிறைந்த உணவுகளை குறைவாக கொடுக்க வேண்டும் என சுகாதார அமைச்சின் மருத்துவ ஆய்வு நிறுவனத்தின் ஊட்டச்சத்து நிபுணர் வைத்தியர் ரேணுகா ஜயதிஸ்ஸ தெரிவித்தார். 
இந்நாட்களில் குழந்தைகளுக்கு வெளிப்புற நடவடிக்கைகள் இல்லை என்பதாலும் மாச்சத்துள்ள உணவுகளை குறைவாக கொடுப்பது சிறந்தது. இல்லாவிட்டால் அவர்களின் உடல் பருமன் அதிகரிக்கும். 
இதேவேளை, குழந்தைகளை ஒரே இடத்தில் இருக்கவிடாமல் பல்வேறு செயற்பாடுகளுக்கு வழி நடத்துவது மிகவும் சிறந்தது. அத்துடன் பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகமாக கொடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பெற்றோர்களுக்குரிய முக்கிய அறிவிப்பு! பெற்றோர்களுக்குரிய முக்கிய அறிவிப்பு! Reviewed by irumbuthirai on May 11, 2021 Rating: 5

2021 ஆம் ஆண்டிலும் அதன் பின்னரும் நடைபெறும் பரீட்சைகளுக்கான இலக்கியநய பாடங்களுக்குரிய வினாத்தாள்களின் கட்டமைப்பும் முன்னோடி மாதிரி வினாக்களும்

May 11, 2021

பரீட்சைத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட க.பொ.த. (சா.தர) பரீட்சையின் 2021 ஆம் ஆண்டிலும் அதன் பின்னரும் நடைபெறும் பரீட்சைகளுக்கான இலக்கியநய பாடங்களுக்குரிய வினாத்தாள்களின் கட்டமைப்பும் முன்னோடி மாதிரி வினாக்களும் இங்கு தருகிறோம். 
தமிழ் இலக்கிய நயம், 
அரபு இலக்கிய நயம், 
ஆங்கில இலக்கிய நயம், 
சிங்கள இலக்கிய நயம் 
என்பன இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. 
முழுமையாகப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
2021 ஆம் ஆண்டிலும் அதன் பின்னரும் நடைபெறும் பரீட்சைகளுக்கான இலக்கியநய பாடங்களுக்குரிய வினாத்தாள்களின் கட்டமைப்பும் முன்னோடி மாதிரி வினாக்களும் 2021 ஆம் ஆண்டிலும் அதன் பின்னரும் நடைபெறும் பரீட்சைகளுக்கான இலக்கியநய பாடங்களுக்குரிய  வினாத்தாள்களின் கட்டமைப்பும் முன்னோடி மாதிரி வினாக்களும் Reviewed by irumbuthirai on May 11, 2021 Rating: 5

07-05-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்)

May 11, 2021

07-05-2021 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
Official gazette released on 07-05-2021 (In three languages) 
இதில், 
பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. கீழே உள்ள உரிய லிங்கை கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாகப் பார்வையிடுக. 
தமிழில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for Tami Gazette. 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for English Gazette. 
சிங்களத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for Sinhala Gazette.




07-05-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) 07-05-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) Reviewed by irumbuthirai on May 11, 2021 Rating: 5

30-04-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்)

May 11, 2021

30-04-2021 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
Official gazette released on 30-04-2021 (In three languages) 
இதில், 
பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. கீழே உள்ள உரிய லிங்கை கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாகப் பார்வையிடுக. 
தமிழில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for Tami Gazette. 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for English Gazette. 
சிங்களத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for Sinhala Gazette.



30-04-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) 30-04-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) Reviewed by irumbuthirai on May 11, 2021 Rating: 5

ஆகக்குறைந்த ஊழியர்கள் அதிலும் கர்ப்பிணிகள் வேண்டாம். வெளியானது புதிய சுற்றறிக்கை! (சுற்றறிக்கை இணைப்பு)

May 10, 2021

சகல அரச நிறுவனங்களிலும் குறைந்தபட்ச ஊழியர்களுடன் அத்தியாவசிய சேவைகளை மாத்திரம் மேற்கொள்வது தொடர்பான 2/2021 (11) என்ற இலக்கம் கொண்ட சுற்றறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. 
  • இவ்வாறு ஆகக்குறைந்த ஊழியர்களை சேவைக்கு அழைக்கும் அதிகாரம் உரிய அமைச்சின் செயலாளர்களுக்கு/ திணைக்கள தலைவர்களுக்கு/ நிறுவனத் தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 
  • இது சுழற்சி முறையில் இடம்பெற வேண்டும். 
  • கர்ப்பிணிப் பெண்களை சேவைக்கு அழைக்காதிருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
இது தொடர்பான முழுமையான விபரங்கள் அடங்கிய சுற்று நிருபத்தை கீழே காணலாம்.




ஆகக்குறைந்த ஊழியர்கள் அதிலும் கர்ப்பிணிகள் வேண்டாம். வெளியானது புதிய சுற்றறிக்கை! (சுற்றறிக்கை இணைப்பு) ஆகக்குறைந்த ஊழியர்கள் அதிலும் கர்ப்பிணிகள் வேண்டாம். வெளியானது புதிய சுற்றறிக்கை! (சுற்றறிக்கை இணைப்பு) Reviewed by irumbuthirai on May 10, 2021 Rating: 5

பொருட்களை கொள்வனவு செய்து சேகரிக்க தேவையில்லை - ராணுவ தளபதி

May 10, 2021

நாட்டை முடக்க இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்றும் இருப்பினும் எதிர்வரும் நாட்களில் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 
எனவே மக்கள் தேவையில்லாமல் அச்சப்பட்டு நீண்ட வரிசைகளில் நின்று பொருட்களை கொள்வனவு செய்து சேகரிக்க தேவையில்லை எனவும் அவர் தெரிவித்தார். 
இதேவேளை வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக தேவையேற்படின் மாவட்ட அல்லது மாகாணங்களுக்கு இடையில் போக்குவரத்து கட்டுப்பாடு விதிப்பதாக அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் இன்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.
பொருட்களை கொள்வனவு செய்து சேகரிக்க தேவையில்லை - ராணுவ தளபதி பொருட்களை கொள்வனவு செய்து சேகரிக்க தேவையில்லை - ராணுவ தளபதி Reviewed by irumbuthirai on May 10, 2021 Rating: 5

Officer Vacancies: Sri Lanka Air Force

May 10, 2021

Officer Vacancies: Sri Lanka Air Force 
Closing date: 15-05-2021. 
See the details below.
Source: Sunday Observer.

Officer Vacancies: Sri Lanka Air Force Officer Vacancies: Sri Lanka Air Force Reviewed by irumbuthirai on May 10, 2021 Rating: 5
Powered by Blogger.