அடையாள அட்டையைப் பயன்படுத்தி வெளியே செல்லும் முறை இதோ...


இன்று (13) முதல் தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்திற்கு அமைய, வீடுகளில் இருந்து வௌியில் செல்லும் முறைமை மீண்டும் அமுலாகிறது. 
பயணக் கட்டுப்பாடில்லாத நேரங்களிலேயே வீட்டிலிருந்து வெளியே செல்ல இந்த முறை பயன்படுத்தப்படும். 
அதுமட்டுமன்றி வெளியே செல்லும்போது தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டு அல்லது சாரதி அனுமதிப்பத்திரத்தை அனைவரும் வைத்திருப்பது கட்டாயமாகும். 
வீட்டிலிருந்து வெளியே செல்ல தேசிய அடையாள அட்டையை பயன்படுத்தும் முறை இதோ ... 
அடையாள அட்டையின் கடைசி இலக்கம் 0,2,4,6,8 போன்ற இரட்டை எண்களில் ஏதாவது ஒரு எண்ணாக இருந்தால் அவர்கள் இரட்டை இலக்க தினங்களில் வெளியே செல்லலாம். 
அடையாள அட்டையின் கடைசி இலக்கம் 1,3,5,7,9 ஆகிய ஒற்றை எண்களில் ஏதாவது ஒரு எண்ணாக இருந்தால் அவர்கள் ஒற்றை இலக்க தினங்களில் வெளியே செல்லலாம். 
உதாரணமாக இன்று 13ஆம் தேதி ஒற்றை இலக்க தினமாகும். எனவே கடைசி இலக்கம் ஒற்றை இலக்கமாக கொண்டவர்கள் வெளியே செல்லலாம் அதுவும் பயணக் கட்டுப்பாடு இல்லாத நேரங்களில். 
எவ்வாறாயினும், தொழில் நிமித்தம் வீடுகளிலிருந்து வௌியேறுவோர், தனியார் மற்றும் அரசாங்க ஊழியர்கள் இந்த நடைமுறையைப் பின்பற்றத் தேவையில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அடையாள அட்டையைப் பயன்படுத்தி வெளியே செல்லும் முறை இதோ... அடையாள அட்டையைப் பயன்படுத்தி வெளியே செல்லும் முறை இதோ... Reviewed by irumbuthirai on May 13, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.