பெற்றோர்களுக்குரிய முக்கிய அறிவிப்பு!


தற்போதைய நிலைமை காரணமாக, பிள்ளைகள் பாடசாலைகளுக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருப்பதால் அடிக்கடி சாப்பிட முனைகிறார்கள். எனவே அவர்களுக்கு இனிப்பு மற்றும் எண்ணெய் நிறைந்த உணவுகளை குறைவாக கொடுக்க வேண்டும் என சுகாதார அமைச்சின் மருத்துவ ஆய்வு நிறுவனத்தின் ஊட்டச்சத்து நிபுணர் வைத்தியர் ரேணுகா ஜயதிஸ்ஸ தெரிவித்தார். 
இந்நாட்களில் குழந்தைகளுக்கு வெளிப்புற நடவடிக்கைகள் இல்லை என்பதாலும் மாச்சத்துள்ள உணவுகளை குறைவாக கொடுப்பது சிறந்தது. இல்லாவிட்டால் அவர்களின் உடல் பருமன் அதிகரிக்கும். 
இதேவேளை, குழந்தைகளை ஒரே இடத்தில் இருக்கவிடாமல் பல்வேறு செயற்பாடுகளுக்கு வழி நடத்துவது மிகவும் சிறந்தது. அத்துடன் பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகமாக கொடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பெற்றோர்களுக்குரிய முக்கிய அறிவிப்பு! பெற்றோர்களுக்குரிய முக்கிய அறிவிப்பு! Reviewed by irumbuthirai on May 11, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.