பொருட்களை கொள்வனவு செய்து சேகரிக்க தேவையில்லை - ராணுவ தளபதி


நாட்டை முடக்க இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்றும் இருப்பினும் எதிர்வரும் நாட்களில் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 
எனவே மக்கள் தேவையில்லாமல் அச்சப்பட்டு நீண்ட வரிசைகளில் நின்று பொருட்களை கொள்வனவு செய்து சேகரிக்க தேவையில்லை எனவும் அவர் தெரிவித்தார். 
இதேவேளை வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக தேவையேற்படின் மாவட்ட அல்லது மாகாணங்களுக்கு இடையில் போக்குவரத்து கட்டுப்பாடு விதிப்பதாக அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் இன்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.
பொருட்களை கொள்வனவு செய்து சேகரிக்க தேவையில்லை - ராணுவ தளபதி பொருட்களை கொள்வனவு செய்து சேகரிக்க தேவையில்லை - ராணுவ தளபதி Reviewed by irumbuthirai on May 10, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.