அரசின் அறிவிப்பு நெருக்கடி நிலைக்கான அறிகுறியா?


இலங்கையில் கொரோனா பரவல் தொடர்பாகவும் கொரோனா மரணங்கள் தொடர்பாகவும் சமூக வலைத்தளங்கள் மற்றும் ஏனைய ஊடகங்களில் பலவிதமான கருத்துக்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. 
சில வைத்தியசாலைகளில் இடப்பற்றாக்குறை எனவும் அதேபோன்று மரணங்கள் தொடர்பாக உண்மையான தகவல் வெளியாவதில்லை எனவும் பல குற்றச்சாட்டுகள் வலம் வருகின்றன. 
இந்த நிலையில் கொரோனா தொற்று உறுதியான நபர் ஒருவருக்கு எவ்வித நோய் அறிகுறியும் இல்லாத 
சந்தர்ப்பத்தில் அவரை வீட்டிலேயே வைத்து கண்காணிக்கவுள்ளதாகவும் இந்த நடைமுறையை எதிர்வரும் திங்கட் கிழமை முதல் அமுல்படுத்தவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். 
இதேவேளை குறித்த நபருக்கு நோய் அறிகுறிகள் காணப்படுமாயின் அவர் வைத்தியசாலைக்கு மாற்றப்படுவார் எனவும் தெரிவித்துள்ளார். 
இந்த அறிவிப்பானது கொரோனா தொடர்பில் இலங்கை நெருக்கடியான ஒரு நிலையை எதிர்கொண்டுள்ளதா? வெளியாகும் உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் உண்மையா? என்ற சந்தேகங்களை உறுதிப்படுத்துவதற்கான அறிகுறியா எனவும் தோன்றுகிறது.
அரசின் அறிவிப்பு நெருக்கடி நிலைக்கான அறிகுறியா? அரசின் அறிவிப்பு நெருக்கடி நிலைக்கான அறிகுறியா? Reviewed by irumbuthirai on May 15, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.