இன்று நிரந்தர நியமனம் பெற்ற ஆசிரியர்கள்..


ஆசிரிய உதவியாளர்களுக்கான நிரந்தர நியமனங்கள் வழங்கும் நடவடிக்கையின் முதற்கட்டமாக ஆசிரிய உதவியாளர்கள் சிலருக்கான நியமனக்கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (23) கண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் தலைமையில் நடைபெற்றது. 
419 ஆசிரியர்களுக்கு 
நிரந்தர நியமனங்கள் வழங்கப்படுகின்றன. கொரோன வைரஸ் தாக்கத்தின் காரணாமாக ஒன்றுகூடல்களை தவிர்க்கும் அரசாங்கத்தின் கட்டளைக்குகேற்ப்ப முதற்கட்டமாக இவ்வாறு சிலருக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன. 
ஏனையோருக்கான கடிதங்கள் தபால் மூலம் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. 
 இந்த நிகழ்வில் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருதப்பாண்டி ராமேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.
இன்று நிரந்தர நியமனம் பெற்ற ஆசிரியர்கள்.. இன்று நிரந்தர நியமனம் பெற்ற ஆசிரியர்கள்.. Reviewed by irumbuthirai on October 23, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.