பட்டம் பெற்ற ஆண்டிற்கே நியமனம்


Image result for government jobs

ஒக்டோபர் மாதத்தில் எமது வேலைவாய்ப்புகளில் மந்த நிலை ஏற்பட்டது.. பின்னர் எம்மால் அரசாங்கத்தைப் பெற்றுக்கொண்ட பின்னர் 16 000 பேருக்கு நியமன கடிதங்களை வழங்குவதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டது. அவர்கள் பட்டம் பெற்று வெளியேறிய வருடங்களை அடிப்படையாக கொண்டே நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் நியமனம் வழங்கும் விடயத்தில் எந்தவிதமான பாரட்சமும் காட்டவில்லை, 2018 மே 25ஆம் திகதி அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைய பல கட்டங்களாக பட்டதாரிகளுக்கு பயிற்சியளித்து முதற்கட்டமாக 2018 ஆகஸ்ட் மாதத்தில் 5000 பேரை பயிற்சியில் இணைக்க நடவடிக்கையெடுக்கப்பட்டது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
வெளிவாரிப் பட்டதாரிகளில் பெரும்பாலானவர்கள் ஏற்கனவே தொழிலொன்றில் இருந்துகொண்டே பட்டத்தைப் பெறுவதுடன் அதன் பின்னர் வேலைவாய்ப்புக்களை எதிர்பார்க்கின்றனர். வேலைவாய்ப்புக் கிடைக்கும்போது அது குறித்து திருப்தியடைவதில்லை. பட்டம் பெற்ற ஆண்டை அடிப்படையாகக் கொண்டே நாம் வேலைவாய்ப்புக்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.  


பட்டம் பெற்ற ஆண்டிற்கே நியமனம் பட்டம் பெற்ற ஆண்டிற்கே நியமனம் Reviewed by irumbuthirai on August 08, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.