அரச ஊழியர்களின் சம்பளத்தை அரசாங்கம் கேட்கவில்லை


அரச ஊழியர்களின் மே மாத சம்பளத்தை அல்லது அரைவாசியை அல்லது ஒரு பகுதியை அல்லது ஒரு வார சம்பளத்தை அல்லது ஒரு நாள் சம்பளத்தை அன்பளிப்பு செய்ய சொல்லி ஜனாதிபதியின் செயலாளர் P.B. ஜயசுந்தர தெரிவித்த விடயம் அவரின் தனிப்பட்ட வேண்டுகோளாகும். இது அரசின் அறிவித்தல் அல்ல என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இன்று ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார். அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், 
கொரோனா காரணமாக நாடு எதிர்கொண்டுள்ள நிலைக்காக அவர் விடுத்த தனிப்பட்ட வேண்டுகோளே இதுவாகும். இது அரசின் அறிவித்தலோ வேண்டுகோளோ அல்ல. தனிப்பட்ட வேண்டுகோள் என குறித்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டும் இருக்கிறார். விரும்பியவர்கள் மட்டும் இதற்கு பங்களிப்பு செய்யலாம். அவரின் இந்த வேண்டுகோளுக்கு சமூக வலைத்தளங்களில் அவருக்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

அரச ஊழியர்களின் சம்பளத்தை அரசாங்கம் கேட்கவில்லை அரச ஊழியர்களின் சம்பளத்தை அரசாங்கம் கேட்கவில்லை Reviewed by irumbuthirai on May 08, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.