புதிய வகை கொரோனா.... நாளை முதல் அமுலாகும் தடை...


கடந்த சில நாட்களாக இங்கிலாந்தில் புதிய வகையான கொரானா வைரஸ் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இது முன்னரை காட்டிலும் வீரியம் அதிகம் என்பதுடன் விரைவாகவும் பரவி வருகிறது. 
இந்த அபாய நிலையை கருத்திற்கொண்டு ஏற்கனவே சுமார் 
60 நாடுகள் பிரித்தானியாவில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதித்துள்ளன. 
அந்த வகையில் இலங்கையும் நாளை (23) முதல் மறு அறிவித்தல் வரை பிரித்தானியாவில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதித்துள்ளது. 
Covid-19 தடுப்பு தொடர்பில் இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்திலேயே இந்த தீர்மானத்தை ஜனாதிபதி எடுத்தார்.
புதிய வகை கொரோனா.... நாளை முதல் அமுலாகும் தடை... புதிய வகை கொரோனா....  நாளை முதல் அமுலாகும் தடை... Reviewed by irumbuthirai on December 22, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.