இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையின் முதல் பெண் பணிப்பாளர் நியமனம்..


இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையின் முதல் பெண் பணிப்பாளராக முஸ்லிம் சேவையின் சிரேஷ்ட அமைப்பாளரும் ஒலிபரப்பாளருமான திருமதி M.J. பாத்திமா ரினோஸியா நியமிக்கப்பட்டுள்ளார். 
இதேவேளை ஐந்து பேர்கொண்ட ஆலோசகர் குழுவை 
பிரதமரின் பரிந்துரையின் கீழ் ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அண்மையில் நியமித்திருந்தார். 
முஸ்லிம் சேவையின் முன்னாள் பணிப்பாளர் அஹமத் முனவ்வர், ஜனாதிபதி கவுன்சில் ராசிக் சரூக், கொள்ளுப்பிட்டி ஜும்மா மஸ்ஜித் உபதலைவர் முஸ்லிம் சலாஹுதீன், கண்டி மாவட்ட ஜம்மியத்துல் உலமா பிரதித்தலைவர் அஷ்ஷேஹ் பஸ்லுர் ரஹ்மான், கண்டி லைன் ஜும்மா மஸ்ஜித் நிர்வாக சபையை சேர்ந்த அப்சல் மரிக்கார் ஆகியோரே இவ்வாறு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையின் முதல் பெண் பணிப்பாளர் நியமனம்.. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையின் முதல் பெண் பணிப்பாளர் நியமனம்.. Reviewed by irumbuthirai on December 26, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.