அதிகரித்துவரும் மாணவர் இடைவிலகல்



தற்போதைய நிலையில் அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவு காரணமாக பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள மாணவர்கள் பலர் பாடசாலை கல்வியிலிருந்து இடைவிலகி உள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், மத்திய மாகாணத்தில் மாத்திரம் கடந்த வருடத்தில் 1989 மாணவர்கள் பாடசாலை கல்வியிலிருந்து இடைவிலகியுள்ளனர். இதில் நுவரெலியா மாவட்டத்தில் 570 மாணவர்களும் கொத்மலையில் 319, கம்பளையில் 250, ஹட்டனில் 541 மாணவர்களும் பாடசாலை கல்வியிலிருந்து இடை விலகி உள்ளனர். தற்போதைய பொருளாதார நிலை காரணமாக பாடசாலை கல்வியிலிருந்து மாணவர்கள் இடைவிலகுவது அதிகரித்த வண்ணம் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
அதிகரித்துவரும் மாணவர் இடைவிலகல் அதிகரித்துவரும் மாணவர் இடைவிலகல் Reviewed by Irumbu Thirai News on January 21, 2024 Rating: 5

No comments:

Powered by Blogger.