பாடசாலையில் கருத்தரங்கு நடத்திய உளவள ஆலோசகர் உட்பட நால்வர் துப்பாக்கி தோட்டாக்களுடன் கைது!


பாடசாலையில் உளவியல் தொடர்பான கருத்தரங்கு நடத்திய உளவள ஆலோசகர் ஒருவரும் இன்னும் மூன்று பேரும் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் கைது செய்யப்பட்ட சம்பவம் பதுளை, ஹாலி எல பிரதேச பாடசாலை ஒன்றில் நிகழ்ந்துள்ளது. 
 
ஏனைய 03 பேரும் குறித்த உளவள ஆலோசகரின் மெய்ப்பாதுகாவலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
கருப்பு நிற ஆடை அணிந்திருந்த இவர்கள் 

துப்பாக்கி ஒன்றை வைத்திருந்ததாக நேற்றைய தினம் (2) போலீஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்தனர். 
 
பின்னர் போலீசார் மேற்கொண்ட விசாரணையின் போது, குறித்த நிகழ்விற்கு வலயக்கல்வி காரியாலயத்தினதோ மாகாண கல்வி காரியாலயத்தினதோ அனுமதி பெறப்பட்டிருக்கவில்லை. மேலும் குறித்த உளவள ஆலோசகர் 

இந்தத் துறை தொடர்பில் உரிய தகைமை இல்லாதவர். இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு எந்த ஒரு நிறுவனத்திலும் பதிவு செய்யப்படாதவர் என தெரியவந்துள்ளது. குறித்த நபர்களிடமிருந்து துப்பாக்கியும் 129 தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலையில் கருத்தரங்கு நடத்திய உளவள ஆலோசகர் உட்பட நால்வர் துப்பாக்கி தோட்டாக்களுடன் கைது! பாடசாலையில் கருத்தரங்கு நடத்திய உளவள ஆலோசகர் உட்பட நால்வர் துப்பாக்கி தோட்டாக்களுடன் கைது! Reviewed by Irumbu Thirai News on December 02, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.