Courses: Chinese Language (University of Colombo) / கொழும்பு பல்கலைக்கழகத்தில் சீன மொழி தொடர்பான கற்கைகள்

July 26, 2021

Chinese language courses @ university of Colombo. 
சீன மொழி தொடர்பான பல்வேறுபட்ட கற்கை நெறிகளுக்கு கொழும்பு பல்கலைக் கழகத்தினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன:

Applications are invited for following courses:
 
Chinese language for beginners. 

 

Intermediate Chinese language - 1 

 

Intermediate Chinese language - 11 

 

Advanced Chinese language. 

 

Spoken Chinese language for beginners.

 

Intermediate Chinese spoken. 

Registration fee: 1000/- 
Closing date: 10-08-2021. 
Application & further details: 

See the details below.


Courses: Chinese Language (University of Colombo) / கொழும்பு பல்கலைக்கழகத்தில் சீன மொழி தொடர்பான கற்கைகள் Courses: Chinese Language (University of Colombo) / கொழும்பு பல்கலைக்கழகத்தில் சீன மொழி தொடர்பான கற்கைகள் Reviewed by irumbuthirai on July 26, 2021 Rating: 5

ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் சகல அரச ஊழியர்களும் சேவைக்கு...?

July 26, 2021

ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் சகல அரச ஊழியர்களையும் சேவைக்கு அழைப்பது தொடர்பில் சுகாதார அமைச்சின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி தெரிவித்துள்ளார். 
தற்போதைய நிலையில் குறைந்தளவான பணியாளர்களே சேவைக்கு அழைக்கப்படுவதால் 
நிறுவன நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர்கள் பலர் அறிவித்துள்ளனர். எனவே இது தொடர்பில் சுகாதார அமைச்சுடன் கலந்துரையாடல் செய்து அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் சகல அரச ஊழியர்களும் சேவைக்கு...? ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் சகல அரச ஊழியர்களும் சேவைக்கு...? Reviewed by irumbuthirai on July 26, 2021 Rating: 5

கல்வி அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக ஜோசப் ஸ்டாலின் மனுத் தாக்கல்:

July 26, 2021

கல்வி அமைச்சர் மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு எதிராக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மனு தாக்கல் செய்துள்ளார். 
உயர் நீதிமன்றம் 2011 இல் பிறப்பித்த உத்தரவுக்கு அமைய தேசிய பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு 35 மாணவர்களே சேர்த்துக்கொள்ளப்பட முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 
ஆனால் உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை மீறி அரச பாடசாலைகளில் தரம் 01க்கு 
40 மாணவர்களை சேர்த்துக் கொள்ளலாம் என்று கல்வி அமைச்சின் அதிகாரிகள் எடுத்த தீர்மானத்தை வலுவிழக்க செய்யுமாறு கோரியே மேன்முறையீட்டு நீதிமன்றில் நீதிப்பேராணை மனு ஒன்று ஜோசப் ஸ்டாலினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 
இந்த மனுவின் பிரதிவாதிகளாக கல்வி அமைச்சர், கல்வி அமைச்சின் செயலாளர், தேசிய பாடசாலை பணிப்பாளர்கள் என்பவர்கள் பெயரிடப்பட்டுள்ளனர். 
உயர் நீதிமன்றத்தின் உத்தரவு மற்றும் கல்வி சேவை சட்ட திட்டங்கள் என்பவற்றை மீறி கல்வி அமைச்சின் அதிகாரிகள் இந்த விடயத்தில் செயற்பட்டுள்ளதாக அந்த மனுவில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக ஜோசப் ஸ்டாலின் மனுத் தாக்கல்: கல்வி அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக ஜோசப் ஸ்டாலின் மனுத் தாக்கல்: Reviewed by irumbuthirai on July 26, 2021 Rating: 5

மாணவர்களுக்கு சலுகை விலையில் முகக் கவசம்:

July 26, 2021

மாணவர்களுக்கு சலுகை விலையில் முகக்கவசம் வழங்கப்படும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். 
அடுத்த மாதம் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதும் இந்த திட்டம் அமல்படுத்தப்படும். இதற்காக முகக் கவசம் தயாரிப்பாளர்களுடன் கலந்துரையாடல்களை நடத்தி வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
மாணவர்களுக்கு சலுகை விலையில் முகக் கவசம்: மாணவர்களுக்கு சலுகை விலையில் முகக் கவசம்: Reviewed by irumbuthirai on July 26, 2021 Rating: 5

இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்தியவர் கொரோனாவுக்கு பலி!

July 26, 2021

முறையாக இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டவர் கொரோனாவுக்கு பலியான சம்பவம் காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. 
73 வயதான குறித்த நபருக்கு சினோபாம் (Sinopharm) கொவிட் தடுப்பூசிகளே செலுத்தப்பட்டுள்ளது. 
முதலாவது தடுப்பூசி மே 29 இலும் இரண்டாவது தடுப்பூசி ஜூன் 28 இலும் செலுத்தப்பட்டுள்ளது. 
குறித்த நபருக்கு சளி அதிகரித்தமையினால் கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.
இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்தியவர் கொரோனாவுக்கு பலி! இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்தியவர் கொரோனாவுக்கு பலி! Reviewed by irumbuthirai on July 26, 2021 Rating: 5

சா. தர பரீட்சைக்குரிய புதிய திகதி அறிவிப்பு!

July 26, 2021

இவ்வருடம் (2021) நடைபெற வேண்டிய சாதாரண தர பரீட்சைகுரிய புதிய திகதி கல்வியமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ளது. 
அந்த வகையில் இப்பரீட்சையானது எதிர்வரும் 2022 பெப்ரவரி 21 ஆம் திகதி முதல் மார்ச் 3 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். 
இதேவேளை இவ்வருடத்திற்குரிய புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் உயர்தர பரீட்சை என்பன இந்த வருடம் நவம்பர் மாதம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சா. தர பரீட்சைக்குரிய புதிய திகதி அறிவிப்பு! சா. தர பரீட்சைக்குரிய புதிய திகதி அறிவிப்பு! Reviewed by irumbuthirai on July 26, 2021 Rating: 5

தரம்:04 கணிதம் (இலகு முறையில்)

July 25, 2021

தரம்: 4 ற்குரிய கணிதம் என்ற பாடம் இங்கு இலகு முறையில் தரப்பட்டுள்ளது. 
இதில், 
மாணவர்களே சுயமாக கற்கும் வகையில் இலகுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 

சுயமாக பயிற்சிகளை செய்யவும் அதை சரி பார்க்கவும் முடியும். 

இலகுவான வடிவமைப்பு..  

முழுமையாக பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
தரம்:04 கணிதம் (இலகு முறையில்) தரம்:04 கணிதம் (இலகு முறையில்) Reviewed by irumbuthirai on July 25, 2021 Rating: 5

தரம்: 04 தமிழ்மொழி (இலகு முறையில்)

July 25, 2021

தரம்: 04 ற்குரிய தமிழ் மொழி என்ற பாடம் இலகு முறையில் இங்கு தரப்படுகிறது. இதில், 

எழுத்தின் வகைகள், குறியீட்டு வகைகள், உறுப்பமைய எழுதுதல், அடுக்குச் சொற்கள் உட்பட பல விடயங்கள் தரப்பட்டுள்ளன. 

மாணவர்கள் சுயமாக கற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

பயிற்சிகளை தாமே செய்யவும் அதை சரி பார்க்கவும் முடியும். 

இலகுவான விளக்கங்கள்.. 

முழுமையாக பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
தரம்: 04 தமிழ்மொழி (இலகு முறையில்) தரம்: 04  தமிழ்மொழி (இலகு முறையில்) Reviewed by irumbuthirai on July 25, 2021 Rating: 5

Certificate Course in Urbanization, Climate Change, Displacement & Re location (University of Colombo)

July 25, 2021

Certificate Course in Urbanization, Climate Change, Displacement & Re location (University of Colombo) 
Closing date: 15-08-2021. 
See the details below.


Certificate Course in Urbanization, Climate Change, Displacement & Re location (University of Colombo) Certificate Course in Urbanization, Climate Change, Displacement & Re location (University of Colombo) Reviewed by irumbuthirai on July 25, 2021 Rating: 5

உலக நீரில் மூழ்குதல் தடுப்பு தினம்: இலங்கையில் நீரில் மூழ்கி மரணிப்போர் எத்தனை பேர் தெரியுமா?

July 25, 2021

இன்று (ஜூலை 25) உலக நீரில் மூழ்குதல் தடுப்பு தினமாகும். ஐ. நா. பொதுச் சபையின் 75வது கூட்டத் தொடரில் உலக நீரில் மூழ்குதல் தடுப்பு தொடர்பான முதலவாது தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் அடிப்படையில், ஜூலை 25 உலக நீரில் மூழ்குதல் தடுப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது. 
வருடமொன்றுக்கு உலகில் நீரில் மூழ்குவதால் 220,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பதுடன், அதில் 1/3 மரணங்கள் தென்னாசியாவிலேயே இடம்பெறுவதாகவும் ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இதேவேளை இலங்கையில் ஒவ்வொரு வருடமும் நீரில் மூழ்கி சுமார் 800 பேர் உயிரிழப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
உலக நீரில் மூழ்குதல் தடுப்பு தினம்: இலங்கையில் நீரில் மூழ்கி மரணிப்போர் எத்தனை பேர் தெரியுமா? உலக நீரில் மூழ்குதல் தடுப்பு தினம்: இலங்கையில் நீரில் மூழ்கி மரணிப்போர் எத்தனை பேர் தெரியுமா? Reviewed by irumbuthirai on July 25, 2021 Rating: 5

வாகன இலக்கத் தகடுகளை விநியோகிக்க புதிய முறை

July 25, 2021

வாகன இலக்கத் தகடுகளை தபால் மூலம் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். 
கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 
தபால் திணைக்களத்தின் வருமானத்தை அதிகரிக்கும் செயற்திட்டத்தின் முதல்கட்டமாக இந்த விடயம் செயற்படுத்தப்படவிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
வாகன இலக்கத் தகடுகளை விநியோகிக்க புதிய முறை வாகன இலக்கத் தகடுகளை விநியோகிக்க புதிய முறை Reviewed by irumbuthirai on July 25, 2021 Rating: 5

19-07-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்

July 25, 2021

19-07-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம். 
இதில், 
பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. இதன் முழு வடிவத்தைப் பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.


முன்னைய அமைச்சரவை கூட்டங்களுக்கு செல்ல...
19-07-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் 19-07-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on July 25, 2021 Rating: 5

கொத்தலாவல பல்கலைக்கழக சட்டமூலம்: உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட 41 தொழிற்சங்கங்கள்:

July 25, 2021

கொத்தலாவல பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு எதிராக அதிபர் ஆசிரியர் சங்கங்கள் மற்றும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் போன்றன பல்வேறு எதிர்ப்பு போராட்டங்களை நடத்தி வருகின்றன. 
இந்நிலையில் இந்த கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு எதிராக நேற்று 41 தொழிற்சங்கங்கள் உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளன. 
கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அதிபர் ஆசிரியர் சங்கங்கள், அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், முன்னிலை சோசலிசக் கட்சி உட்பட 41 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கைச்சாத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொத்தலாவல பல்கலைக்கழக சட்டமூலம்: உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட 41 தொழிற்சங்கங்கள்: கொத்தலாவல பல்கலைக்கழக சட்டமூலம்: உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட 41 தொழிற்சங்கங்கள்: Reviewed by irumbuthirai on July 25, 2021 Rating: 5
Powered by Blogger.