இதுவரை பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு மற்றுமொரு சந்தர்ப்பம்: வெளியான அறிவிப்பு:


2020 உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய பல்கலைக்கழகங்களுக்கு இதுவரை விண்ணப்பிக்க தவறிய மாணவர்களுக்கு மற்றுமொரு சந்தர்ப்பத்தை வழங்க தயாராக இருப்பதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 
அமுல்படுத்தப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக ஏற்பட்ட சிரமங்களை கருத்தில் கொண்டு மீண்டும் இந்த சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது. 
அந்தவகையில் எதிர்வரும் திங்கட்கிழமை (26) முதல் 
ஜூலை 30 வரை Online மூலமாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது. 
ஏற்கனவே வழங்கப்பட்ட கால அவகாசம் கடந்த மாதம் 18 ஆம் திகதியுடன் முடிவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதுவரை பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு மற்றுமொரு சந்தர்ப்பம்: வெளியான அறிவிப்பு: இதுவரை பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு மற்றுமொரு சந்தர்ப்பம்: வெளியான அறிவிப்பு: Reviewed by irumbuthirai on July 24, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.