பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கும் திகதியில் மாற்றம்!


அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் என்பவற்றுக்கு விடுமுறை வழங்கும் திகதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 

அந்த வகையில் நாளையுடன் விடுமுறை வழங்கப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்தாலும் நாளைய தினம் பாடசாலை நடைபெறாது என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 

எரிபொருள் நெருக்கடி மற்றும் போக்குவரத்து பிரச்சினைகள் என்பவற்றை கருத்திற் கொண்டு நாளைய தினம் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய அரச ஊழியர்கள் கடமைக்கு செல்ல வேண்டாம் என பிரதமர் அறிவித்திருக்கும் நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் பாடசாலைகள் மீண்டும் ஜூன் 6ஆம் திகதி ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கும் திகதியில் மாற்றம்! பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கும் திகதியில் மாற்றம்! Reviewed by Irumbu Thirai News on May 19, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.