En Savuku karanam... ஹிஷாலினியின் அறையில் வெளியான புதிய சாட்சி!


ஹிஷாலினியின் அறையில் உள்ள சுவற்றில் எழுதப்பட்டிருந்த En Savuku Karanam... என்ற வாசகம் தொடர்பில் தற்போது பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். 

இது தமிழை ஆங்கிலத்தில் எழுதும் முறையில் (தங்லிஷ்) எழுதப்பட்டிருந்தது. 

இது தொடர்பில் அரச இரசாயன பகுப்பாய்வாளர்கள் குறித்த அறைக்கு சென்று பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர். 

மேலும் இது தொடர்பில் விசாரணை செய்யும் பொலிஸ் குழு ஹிஷாலினியின் வீட்டிற்கு சென்று இது அவரால் எழுதப்பட்டதா 
என்பதை கண்டறிய ஹிசாலினி எழுதிய கொப்பிகளையும் எடுத்துள்ளனர். 

மேலும் குறித்த விடயம் தொடர்பில் ஹிஷாலினியின் சகோதரர் கருத்து தெரிவிக்கையில், தனது சகோதரி தரம் 7 வரை மாத்திரமே படித்ததாகவும். தனக்கு தெரிந்த வகையில் சுயமாகவே சகோதரிக்கு ஆங்கிலத்தில் எழுத முடியாது என்றும் ஆனால் பார்த்து எழுதலாம் என்றும் தெரிவித்தார்.
En Savuku karanam... ஹிஷாலினியின் அறையில் வெளியான புதிய சாட்சி! En Savuku karanam... ஹிஷாலினியின் அறையில் வெளியான புதிய சாட்சி! Reviewed by irumbuthirai on August 03, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.