அரச ஊழியர்களை கடமைக்கு அழைக்கும் முறையில் மீண்டும் மாற்றம்:


அரச ஊழியர்களை கடமைக்கு அழைக்கும் முறையில் மீண்டும் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. 

அந்த வகையில் கர்ப்பிணிகளை சேவைக்கு அழைப்பது உடன் அமுலாகும் வகையில் நிறுத்தப்படுவதாகவும் அவர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய முடியும் எனவும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இன்று(5) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். 

மேலும் நிறுவன பிரதானிகளின் தீர்மானத்திற்கு அமைய வாரத்திற்கு ஒரு குழு என்ற அடிப்படையில் 
இரண்டு குழுக்களாகப் பிரித்து சேவைக்கு அழைக்க முடியும். மேலும் இந்த புதிய மாற்றங்களோடு புதிய சுற்றுநிருபம் விரைவில் பொதுநிர்வாக அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அரச ஊழியர்களை கடமைக்கு அழைக்கும் முறையில் மீண்டும் மாற்றம்: அரச ஊழியர்களை கடமைக்கு அழைக்கும் முறையில் மீண்டும் மாற்றம்:  Reviewed by irumbuthirai on August 05, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.