ரயில்வே திணைக்களத்தின் எச்சரிக்கை



ரயில்வே திணைக்களத்தின் எச்சரிக்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது தற்போது வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் 

என்ஜின் சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள், ரயில் நிலையப் பொறுப்பாளர்கள் உட்பட அனைவரும் உடனடியாக கடமைக்கு சமூகமளிக்காவிடின் தாமாகவே சேவையிலிருந்து விலகியவர்களாக கருதப்படுவர் என அறிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தல் நெருங்கும் இவ்வேளையில் ரயில்வே ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடராக இடம்பெறுகிறது. 
இவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் பொருட்டு நியமிக்கப்பட்ட உப குழுவின் சிபார்சையும் ஏற்றுக்கொள்ளாமல் வேலைநிறுத்தத்தில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ரயில்வே திணைக்களத்தின் எச்சரிக்கை ரயில்வே திணைக்களத்தின் எச்சரிக்கை Reviewed by irumbuthirai on October 02, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.