2020 சா.தர பரீட்சை மற்றும் 3ம் தவணை விடுமுறைக்கான திகதிகள்: வெளியானது புதிய அறிவிப்பு:



ஜனவரி மாதம் 18 ஆம் திகதி தொடக்கம் 28 ஆம் திகதி வரை கல்வி பொதுத் தராதர பத்திர சாதாரண தர பரீட்சையை நடாத்த தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். 
2020 ஆம் கல்வி ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர பத்திர சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகஸ்ட் 31 ஆகும். 
இம்முறை பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளமான www.doenets.lk ஊடாகவும் மாணவர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். 
இதேவேளை, பாடசாலைகளின் மூன்றாம் தவணை விடுமுறையை டிசம்பர் 24 ஆம் திகதி வழங்கி மீண்டும் ஜனவரி 4 ஆரம்பிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2020 சா.தர பரீட்சை மற்றும் 3ம் தவணை விடுமுறைக்கான திகதிகள்: வெளியானது புதிய அறிவிப்பு: 2020 சா.தர பரீட்சை மற்றும் 3ம் தவணை விடுமுறைக்கான திகதிகள்: வெளியானது புதிய அறிவிப்பு: Reviewed by irumbuthirai on August 28, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.