கல்வியமைச்சின் கீழ் இரு பெளத்த பல்கலைக்கழகங்கள்..

August 23, 2020


இலங்கை பௌத்த பாலி பல்கலைக்கழகத்தையும் புத்த ஷிராவக பிக்கு பல்கலைக்கழகத்தையும் மகாசங்கத்தினரின் வேண்டுகோளின்பேரில் கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். 
கடந்த வெள்ளி (21) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற ஜனாதிபதி பௌத்த ஆலோசனைக் குழுவின் ஐந்தாவது கூட்டத்தொடரின்போது ஜனாதிபதியினால் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. 
இந்த இரண்டு பல்கலைக்கழகங்களையும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் குறித்தும் ஜனாதிபதி கவனம் செலுத்தினார். இப்பல்கலைக்கழகங்களின் தனித்துவத்தை பாதுகாக்கும் வகையில் கண்காணிப்பு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சரின் கீழ் முறையாக மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். 
அறநெறிப் பாடசாலைகள், பிக்குகளின் கல்வி, பிரிவெனாக்கள் மற்றும் பெளத்த பல்கலைக்கழகங்களின் முன்னேற்றத்திற்காக இராஜாங்க அமைச்சு ஒன்றை நேரடிக் கண்காணிப்புக்காக நியமித்திருப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். 
அரசாங்க தொழில்வாய்ப்புகளை வழங்கும்போது அறநெறிப் பாடசாலைகளின் இறுதி ஆண்டு மற்றும் தர்மாச்சாரிய சான்றிதழ்களுக்கு புள்ளிகள் வழங்கும் முறைமையொன்றின் அவசியத்தை சங்கைக்குரிய திவியகஹ யஸஸி தேரர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

கல்வியமைச்சின் கீழ் இரு பெளத்த பல்கலைக்கழகங்கள்.. கல்வியமைச்சின் கீழ் இரு பெளத்த பல்கலைக்கழகங்கள்.. Reviewed by irumbuthirai on August 23, 2020 Rating: 5

பாடசாலைகளில் சுகாதார வழிமுறைகள் கடுமையாக பின்பற்றப்படும்

August 23, 2020


மீண்டும் பாடசாலைகள்  ஆரம்பிக்கப்படும் போது கடைபிடிக்க வேண்டிய விடயங்கள் தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள வழிமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட வேண்டும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். 
நேற்று முற்பகல் ஜி.எல்.பீரிஸ்   மல்வத்து மஹா விஹாரையின் மஹாநாயக்கரை சந்தித்து நல்லாசி பெற்றார். அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் பாடசாலை பரீட்சைகள் இடம்பெறும் போதும் இந்த நடைமுறைகள் மிகக் கடுமையாக பின்பற்றப்பட வேண்டும் எனவும் மேலும் தெரிவித்தார்.

அ.த.தி.
பாடசாலைகளில் சுகாதார வழிமுறைகள் கடுமையாக பின்பற்றப்படும் பாடசாலைகளில் சுகாதார வழிமுறைகள் கடுமையாக பின்பற்றப்படும் Reviewed by irumbuthirai on August 23, 2020 Rating: 5

21-08-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்)

August 23, 2020

21-08-2020 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
இதில், 

அரச பதவி வெற்றிடங்கள் உட்பட இன்னும் பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. 
கீழே உள்ள உரிய லிங்கை கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாகப் பார்வையிடுக. 
தமிழில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 

ஆங்கிலத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
சிங்களத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

21-08-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) 21-08-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) Reviewed by irumbuthirai on August 23, 2020 Rating: 5

பட்டதாரி நியமனம்: நிராகரிக்கப்பட்டவர்களுக்கு வெளியான அறிவித்தல்:

August 22, 2020


பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை சமர்ப்பித்து நிராகரிக்கப்பட்ட தகுதியானவர்களை தொழிலில் ஈடுபடுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 
தொழிலற்ற பட்டதாரிகள் / டிப்ளோமாதாரிகளை தொழிலில் ஈடுபடுத்துவதற்கான வேலைத்திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்கள் மேன்முறையீட்டுக்காக விண்ணப்பிப்பதற்கு வசதிகள் செய்யப்பட்டிருப்பதாக அரச சேவை, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார். 
 இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு: 

தொழில் அற்ற பட்டதாரிகள் / டிப்ளோமாதாரிகளை தொழிலில் ஈடுபடுத்துவதற்கான வேலைத்திட்டம் - 2020 

மேற்படி வேலைத்திட்டத்தின் கீழ் பயிற்சியாளர்கள் பயிற்சிக்காக அழைக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ள, இருப்பினும் அனைத்து தகுதிகளையும் பூர்த்தி செய்து, நிராகரிக்கப்பட்டமைக்கான காரணம் ஊழியர் சேமலாப நிதியில் அங்கத்துவம் இருந்தமை (EPF) மற்றும் தொழிலில் (Job) ஈடுபட்டிருந்தமை என்ற ரீதியில் குறிப்பிடப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கு மேன்முறையீட்டை சமர்ப்பிப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதற்கும் தகுதிகளைப் பெறுவார்களாயின் பயிற்சிக்கு அழைப்பதற்கு எதிர்பாரப்பதாக அரச சேவை, மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி அவர்கள் தெரிவித்துள்ளார். 
இதற்கு அமைவாக இவ்வாறான விண்ணப்பதார்களுக்கு அரச சேவை, மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.pubad.gov.lk இல் வெளியிடப்பட்ட அறிவித்தலுக்கு அமைவாக விண்ணப்பிக்குமாறும், 2020.09.15 ஆம் திகதிக்கு முன்னர் தமது மேன்முறையீட்டை பிரதேச செயலகத்திற்கு சமர்ப்பிக்குமாறும் அரச சேவை, மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார். 
நாலக கலுவெவ, 
அரசாங்க தகவல் திணைக்கள 
பணிப்பாளர் நாயகம்.

(அ.த.தி.)

பட்டதாரி நியமனம்: நிராகரிக்கப்பட்டவர்களுக்கு வெளியான அறிவித்தல்: பட்டதாரி நியமனம்: நிராகரிக்கப்பட்டவர்களுக்கு வெளியான அறிவித்தல்: Reviewed by irumbuthirai on August 22, 2020 Rating: 5

Gurugedara Educational Channel Video and Supportive material Download

August 22, 2020

Gurugedara Educational Channel Video and Supportive material Download (Tamil & Sinhala medium)
Click the link below for find videos and supportive materials:


Gurugedara


Gurugedara Educational Channel Video and Supportive material Download Gurugedara Educational Channel Video and Supportive material Download Reviewed by irumbuthirai on August 22, 2020 Rating: 5

க.பொ.த. (சா.த) பரீட்சை 2020: நீடிக்கப்பட்ட விண்ணப்ப திகதி:

August 22, 2020


2020இல் நடைபெறவிருக்கும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்ப முடிவு திகதி இம்மாதம் 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்தார். 
ஏற்கனவே விண்ணப்ப முடிவுத் திகதி இம்மாதம் 21 என அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

க.பொ.த. (சா.த) பரீட்சை 2020: நீடிக்கப்பட்ட விண்ணப்ப திகதி: க.பொ.த. (சா.த) பரீட்சை 2020: நீடிக்கப்பட்ட விண்ணப்ப திகதி: Reviewed by irumbuthirai on August 22, 2020 Rating: 5

மாற்றப்படும் பாடத்திட்டங்கள்: விரைவில் அமைச்சரவைப் பத்திரம்:

August 22, 2020

நடைமுறை உலகிற்கு பொருந்தும் வகையில் பாடசாலைப் பாடத்திட்டங்களை புதுப்பிப்பது தொடர்பில் அமைச்சரவைப் பத்திரமொன்று விரைவில் தயாரிக்கப்படுமென கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
 நேற்று முன்தினம் (20) கல்வி அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மாணவர்களின் பகுப்பாய்வு அறிவையும், விமர்சன ரீதியாக சிந்திக்கும் ஆற்றலையும் விருத்தி செய்வது முக்கியமாகும்,
தற்போதுள்ள கல்வி கட்டமைப்பில் இதற்கான சந்தர்ப்பம் குறைவாகவே உள்ளது. இருப்பினும் மாணவர்களின் ஆர்வத்தை மேம்படுத்தும் வகையில் கல்வி கட்டமைப்பை மாற்றியமைக்க வேண்டிய தேவை காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தொழில்வாய்ப்புக்களுக்கு ஏற்ற வகையில் பாட விதானங்கள் அமைய வேண்டிய விதம் பற்றிய கருத்துக்களை முன்வைக்குமாறு அமைச்சர், அதிபர்களைக் கேட்டுக் கொண்டதுடன். பாடவிதான விருத்தி தொடர்பில் நாடளாவிய ரீதியில் ஒரு விரிவான கருத்தாடலை ஏற்படுத்துவதாகவும் கல்வி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதன்போது உயர்தர வகுப்புக்களில் பல்வேறு பாடங்களுக்கு பாடப்புத்தகம் இல்லாத காரணத்தினால் ஏற்பட்டுள்ள சிக்கல் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

மாற்றப்படும் பாடத்திட்டங்கள்: விரைவில் அமைச்சரவைப் பத்திரம்: மாற்றப்படும் பாடத்திட்டங்கள்: விரைவில் அமைச்சரவைப் பத்திரம்: Reviewed by irumbuthirai on August 22, 2020 Rating: 5

புதிதாக ஆசிரியர் நியமனம் பெறவிருப்போர் விபரம்

August 20, 2020

13 வருட உத்தரவாதமளிக்கப்பட்ட கல்வி வேலைத்திட்டம் - 2020
 
மேற்படி திட்டத்தின் கீழ் ஆசிரியர் நியமனத்திற்காக சிங்களம் மற்றும் தமிழ் மொழி மூலத்திற்காக தெரிவுசெய்யப்பட்ட பட்டதாரிகளின் பெயர் விபரங்களை இங்கு தருகிறோம்.

2020-08-31 மு.ப. 10.00 இவர்கள் கல்வியமைச்சிற்கு சென்று அங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள வெற்றிடமுள்ள பாடசாலைகளில் தமக்கு விருப்பமான பாடசாலையை குறிப்பிட்டு விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். 
நியமனத்திற்காக தெரிவுசெய்யப்பட்டோரை அறிய கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


புதிதாக ஆசிரியர் நியமனம் பெறவிருப்போர் விபரம் புதிதாக ஆசிரியர் நியமனம் பெறவிருப்போர் விபரம் Reviewed by irumbuthirai on August 20, 2020 Rating: 5

புதிய பாராளுமன்றத்தில்...

August 20, 2020


ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று நடைபெற்றது. 
இந்தப் பாராளுமன்றத்தில் பல்வேறு பதவி வகிப்பவர்களை இங்கு தருகிறோம். 
சபாநாயகர் - மஹிந்த யாப்பா அபேவர்தன. 
குழுக்களின் பிரதித் தவிசாளர் - அங்கஜன் 
இராமநாதன். 
எதிர்க்கட்சித் தலைவர் - சஜித் பிரேமதாச. 
பிரதி சபாநாயகர் - ரஞ்சித் சியம்பலாபிட்டிய. 
எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் - லக்ஸ்மன் கிரியல்ல.

புதிய பாராளுமன்றத்தில்... புதிய பாராளுமன்றத்தில்... Reviewed by irumbuthirai on August 20, 2020 Rating: 5

பாராளுமன்றத்திற்கு படகில் வந்த உறுப்பினர்..

August 20, 2020

இன்றைய தினம் 9 ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு  ஆரம்பமானது. புதிய பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டே நகரசபையின் முன்னாள் நகர முதல்வரான மதுர விதானகே சபை அமர்வில் கலந்துகொள்வதற்காக படகில் வருகை தந்திருந்தமை விசேட அம்சமாகும். 
ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு அமைவாக தியவன்ன ஓயா அபிவிருத்தி செய்யப்பட்டமையினால் இன்றைய தினம் பாராளுமன்றத்துக்கு படகில் வரமுடிந்ததாக அவர் தெரிவித்தார். 
கொழும்பு நகர வீதிகளில் வாகன நெரிசலை குறைப்பதற்காக நீர் ஓடைகள் மூலம் போக்குவரத்து செய்வதில் பொது மக்களை ஊக்குவிப்பதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே தெரிவித்தார்.
பாராளுமன்றத்திற்கு படகில் வந்த உறுப்பினர்.. பாராளுமன்றத்திற்கு படகில் வந்த உறுப்பினர்.. Reviewed by irumbuthirai on August 20, 2020 Rating: 5

இலங்கை வரலாற்றில் பல்வேறு விஷேட அம்சங்களைக் கொண்ட 9 ஆவது பாராளுமன்றம்...

August 20, 2020


இன்று (20) ஆரம்பமாகும் 9வது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு விசேட பல அம்சங்களைக் கொண்டுள்ளது. 
இம்முறை பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள புதிய உறுப்பினர்களின் எண்ணிக்கை 81 ஆகும். 
25 - 40 வயதுக்கு உட்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இம்முறை பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 
இதேவேளை பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுள் 81-90 இற்கும் இடைப்பட்ட வயது பிரிவை பிரதிநிதித்துவப்படுத்தி 3 பாராளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். திரு. வாசுதேவ நாணயக்கார, திரு. ஆர். சம்பந்தன், திரு. சீ. பி. விக்னேஸ்வரன் ஆகியோரே இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆவார்கள். 
இம்முறை பொதுத்தேர்தல் பெறுபேறுக்கு அமைவாக ஐக்கிய தேசிய கட்சி மற்றும் மக்கள் சக்தி ஆகியவற்றுக்கு கிடைக்கப்பெற்ற தேசிய பட்டியல் உறுப்பினர் பதவிக்காக இதுவரையில் பெயரிடப்படவில்லை. 
இதனால் பாராளுமன்றத்தின் அமர்வில் கலந்து கொள்ளும் 225 உறுப்பினர்களுள் 223 பேர் மாத்திரமே இடம்பெறுகின்றனர்.  
73 வருட கால அரசியல் வரலாற்றைக் கொண்ட ஐக்கிய தேசிய கட்சி சார்பில் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் இன்று இடம்பெறும் முதலாவது பாராளுமன்ற அமர்வில் இடம்பெறவில்லை. பாராளுமன்ற வரலாற்றில் இவ்வாறு இடம்பெறுவது இதுவே முதலாவது சந்தர்ப்பமாகும். 
நீதிமன்றத்தினால் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரேமலால் ஜெயசேகர மற்றும் விளக்கமறியலில் உள்ள சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களும் இன்று இடம்பெறவுள்ள பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்ளவுள்ளமை விசேட அம்சமாகும்.
இலங்கை வரலாற்றில் பல்வேறு விஷேட அம்சங்களைக் கொண்ட 9 ஆவது பாராளுமன்றம்... இலங்கை வரலாற்றில் பல்வேறு விஷேட அம்சங்களைக் கொண்ட 9 ஆவது பாராளுமன்றம்... Reviewed by irumbuthirai on August 20, 2020 Rating: 5

சகல பாடசாலைகளிலும் கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பித்தல்: கல்வியமைச்சின் தீர்மானம்:

August 20, 2020


கொரோனா தொற்று பரவலின் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த அனைத்து அரசாங்க மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை வழமை போன்று மீள ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. 
இதனடிப்படையில் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 200 இற்கு மேற்பட்டதாக இருந்த போதிலும் சுகாதார அமைச்சின் மூலம் வழங்கப்பட்டுள்ள சுகாதார ஆலோசனைகளை கடைப்பிடித்து மாணவர் எண்ணிக்கை வேறுபாடு மற்றும் தனிநபர் சமூக இடைவெளியை பின்பற்றி பாடசாலைகளை நடத்தமுடியுமாயின் மட்டும் போதுமான வகுப்பறை வசதி மற்றும் ஆசிரியர்கள் இருப்பார்களாயின் மாணவர்களுக்கு கல்வியை வழங்கும் நோக்குடன் இவ்வாறான பாடசாலைகளில் அனைத்து தரங்களுக்கான பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கு மாகாண செயலாளர்கள் மாகாண கல்வி செயலாளர்கள், மாகாண கல்வி பணிப்பாளர்கள், வலய கல்வி பணிப்பாளர்கள், அதிபர்களுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சு நேற்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அ.த.தி.
சகல பாடசாலைகளிலும் கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பித்தல்: கல்வியமைச்சின் தீர்மானம்: சகல பாடசாலைகளிலும் கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பித்தல்: கல்வியமைச்சின் தீர்மானம்: Reviewed by irumbuthirai on August 20, 2020 Rating: 5

மேலும் 10,000 பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு

August 19, 2020

தொழிலற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் அறிமுகம் செய்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மேலும் பத்தாயிரம் பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குவதற்கு இன்று (19) அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது. 
பொதுத் தேர்தலினால் இடைநிறுத்தப்பட்டிருந்த பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கும் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தல் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது. அதன் கீழ் பட்டதாரிகள் 50,000 பேருக்கு நியமனம் வழங்கப்பட்டது. 
இன்றைய தீர்மானத்தின்படி மேலும் பத்தாயிரம் பேர் அதனுடன் இணைக்கப்படவுள்ளனர். வேலையற்ற பட்டதாரிகள் சிலர் இன்று ஜனாதிபதி அலுவலகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். அமைச்சரவை கூட்டம் நிறைவுபெற்று சென்றுகொண்டிருந்த ஜனாதிபதி அவர்கள், அவர்களின் அருகில் தனது வாகனத்தை நிறுத்தி, அனைத்து பட்டதாரிகளுக்கும் தொழில் வழங்குவதாக குறிப்பிட்டார். 
இப்போது வீடுகளுக்குச் செல்லுங்கள் மேலும் பத்தாயிரம் பேருக்கு தொழில் வழங்குவதற்கு இன்று அனுமதி அளிக்கப்பட்டது” என்று ஜனாதிபதி அவர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களிடம் தெரிவித்தார்.


அ.த.தி.
மேலும் 10,000 பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு மேலும் 10,000 பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு Reviewed by irumbuthirai on August 19, 2020 Rating: 5
Powered by Blogger.