கொரோனாவுக்கு அங்கீகரிக்கப்பட்ட முதலாவது மருந்து

June 13, 2020


கொரோனா சிகிச்சைக்கான அங்கீகரிக்கப்பட்ட முதல் மருந்தை ரஷ்யா அறிமுகம் செய்துள்ளது. அவிபாவிர் (favipiravir) என்ற இந்த மருந்து அந்நாட்டின பல மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்தலாம் என ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது. ரஷ்ய அரசின் 50 சதவிகித முதலீடு உள்ள கெம்ரர் என்ற நிறுவனம் இந்த புதிய மருந்தை உற்பத்தி செய்துள்ளது. 
இந்த மருந்துக்கு ரஷ்ய சுகாதார அமைச்சகம் அங்கீகாரம் வழங்கி உள்ளது. மாதம் தோறும் 60இ000 பேருக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருந்து உற்பத்தி செய்யப்படுவதாகவும்இ 10 நாடுகள் இந்த மருந்தை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் ரஷ்ய மருந்து கட்டுப்பாட்டுத் சபை தெரிவித்துள்ளது.

அ.த.தி.
கொரோனாவுக்கு அங்கீகரிக்கப்பட்ட முதலாவது மருந்து கொரோனாவுக்கு அங்கீகரிக்கப்பட்ட முதலாவது மருந்து Reviewed by irumbuthirai on June 13, 2020 Rating: 5

பள்ளிவாசல்களை மீள திறப்பது எவ்வாறு? இலங்கை வக்பு சபையின் விளக்கம்

June 11, 2020


பள்ளிவாசல்களை மீள திறப்பது எவ்வாறு என்பது தொடர்பாக அறிவுறுத்தல்களை இலங்கை வக்பு சபை வெளியிட்டுள்ளது. 
அந்தவகையில் திறப்பதற்கு முன்னர் பொது சுகாதார அதிகாரியின் (PHI) எழுத்துமூல அனுமதியைப் பெற வேண்டும். 
சுகாதார அதிகாரிகள் கூட்டுத் தொழுகைக்கு/ கூட்டு நடவடிக்கைகளுக்கு இன்னும் அனுமதி வழங்காமையினால் ஜமாஅத் தொழுகை, ஜும்ஆத் தொழுகை மற்றும் நிகாஹ் மஜ்லிஸ் நடத்த முடியாது. 
இது தொடர்பாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையை முழுமையாக கீழே காணலாம்.


பள்ளிவாசல்களை மீள திறப்பது எவ்வாறு? இலங்கை வக்பு சபையின் விளக்கம் பள்ளிவாசல்களை மீள திறப்பது எவ்வாறு? இலங்கை வக்பு சபையின் விளக்கம் Reviewed by irumbuthirai on June 11, 2020 Rating: 5

OIC உட்பட 30 பொலிஸார் தனிமைப்படுத்தப்பட்டனர்...

June 11, 2020


கொள்ளுப்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட 30 போலீசார் தனிமைப்படுத்தப்பட்டனர். அமெரிக்க தூதரகத்துக்கு முன்னால் முன்னிலை சோசலிசக் கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது கடமையில் இருந்தவர்கள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டனர். 
இவர்கள் அத்திடிய என்ற இடத்தில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

நிவ்ஸ்வய
OIC உட்பட 30 பொலிஸார் தனிமைப்படுத்தப்பட்டனர்... OIC உட்பட 30 பொலிஸார் தனிமைப்படுத்தப்பட்டனர்... Reviewed by irumbuthirai on June 11, 2020 Rating: 5

தரம் 11 விஞ்ஞானம் (புதிய பாடத்திட்டம்): முறையாக ஒழுங்கமைக்கப்பட்ட இலகு முறைகளுடன்..

June 11, 2020

தரம் 11 புதிய பாடத்திட்டத்தின்படி விஞ்ஞானம் என்ற பாடத்தை இங்கு தருகிறோம். 
இதில், 

ஒவ்வொரு அலகும் இலகுவாக விளங்கும் வகையில் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 
ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி இணைக்கப்பட்டுள்ளது. 
பாடப் புத்தகம் அலகு ரீதியாக இணைக்கப்பட்டுள்ளது.
Online வினாக்கள் இணைக்கப்பட்டுள்ளன. 
மாணவர் சுயமாக கற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
பயிற்சி வினாக்கள் உள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

தரம் 11 விஞ்ஞானம் (புதிய பாடத்திட்டம்): முறையாக ஒழுங்கமைக்கப்பட்ட இலகு முறைகளுடன்.. தரம் 11 விஞ்ஞானம் (புதிய பாடத்திட்டம்): முறையாக ஒழுங்கமைக்கப்பட்ட இலகு முறைகளுடன்.. Reviewed by irumbuthirai on June 11, 2020 Rating: 5

தரம்: 11 ஊடகவியல் (புதிய பாடத்திட்டம்): இலகு முறையில்...

June 11, 2020

க.பொ.த. (சா/தர) புதிய பாடத்திட்டத்தின்படி ஊடகவியல் (Media Studies) என்ற பாடத்தை இங்கு தருகிறோம். 
இதில், 

கற்றலில் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் ஒவ்வொரு பகுதியும் முறையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 
பாடப் புத்தகம் இணைக்கப்பட்டுள்ளது. 
செயற்பாடுகள் இணைக்கப்பட்டுள்ளன. 
கடந்த கால வினாப்பத்திரங்கள் இணைக்கப்பட்டுள்ளது. 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

தரம்: 11 ஊடகவியல் (புதிய பாடத்திட்டம்): இலகு முறையில்... தரம்: 11 ஊடகவியல் (புதிய பாடத்திட்டம்): இலகு முறையில்... Reviewed by irumbuthirai on June 11, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for Home Economics (மனைப் பொருளியல்) - 2019 (Old Syllabus in 2 Languages)

June 11, 2020

Department of Examination 
G.C.E.(A/L) - 2019 (Old Syllabus) Marking Schemes. 
Subject: Home Economics (மனைப் பொருளியல்) 
Languages: Tamil & Sinhala. 

Click the link below for Tamil medium scheme


Tamil medium
Click the link below for Tamil medium scheme


Sinhala medium
G.C.E.(A/L) Marking Scheme for Home Economics (மனைப் பொருளியல்) - 2019 (Old Syllabus in 2 Languages) G.C.E.(A/L) Marking Scheme for Home Economics (மனைப் பொருளியல்) - 2019 (Old Syllabus in 2 Languages) Reviewed by irumbuthirai on June 11, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for History of Sri lanka (இலங்கை வரலாறு) - 2019 (Old Syllabus in 2 Languages)

June 11, 2020

Department of Examination 
G.C.E.(A/L) - 2019 (Old Syllabus) Marking Schemes.  
Subject: History of Sri lanka (இலங்கை வரலாறு) 
Languages: Tamil English & Sinhala. 

Click the link below for Tamil medium scheme


Tamil medium
Click the link below for Sinhala medium scheme


Sinhala medium
G.C.E.(A/L) Marking Scheme for History of Sri lanka (இலங்கை வரலாறு) - 2019 (Old Syllabus in 2 Languages) G.C.E.(A/L) Marking Scheme for History of Sri lanka (இலங்கை வரலாறு) - 2019 (Old Syllabus in 2 Languages) Reviewed by irumbuthirai on June 11, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for History of Europe (ஐரோப்பிய வரலாறு) - 2019 (Old Syllabus in 2 Languages)

June 11, 2020

Department of Examination 
G.C.E.(A/L) - 2019 (Old Syllabus) Marking Schemes.  
Subject: Europe (ஐரோப்பிய வரலாறு) 
 Languages: Tamil & Sinhala. 

Click the link below for Tamil medium scheme


Tamil medium
Click the link below for Sinhala medium scheme


Sinhala medium
G.C.E.(A/L) Marking Scheme for History of Europe (ஐரோப்பிய வரலாறு) - 2019 (Old Syllabus in 2 Languages) G.C.E.(A/L) Marking Scheme for History of Europe (ஐரோப்பிய வரலாறு) - 2019 (Old Syllabus in 2 Languages) Reviewed by irumbuthirai on June 11, 2020 Rating: 5

புற்றுநோய் வைத்தியசாலைக்கு செல்பவர்களுக்காக விசேட பஸ் சேவை

June 11, 2020

மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையான அபேக்ஷா வைத்தியசாலையின் கிளினிக்குகளுக்காக வருகை தரும் பயணிகளின் நலன் கருதி நாட்டின் சகல மாகாணங்களில் இருந்தும் பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த பஸ் சேவை திங்கட்கிழமை தொடக்கம் நடத்தப்பட்டு வருவதாக இலங்கை போக்குவரத்து சபை அமைச்சர் மஹிந்த அமரவீரவிற்கு அறிவித்துள்ளது. கொவிட்-19 நெருக்கடி நிலை காரணமாக பொது போக்குவரத்து சேவைகள் முடங்கியதால் அபேக்ஷா வைத்தியசாலையை நாடிய நோயாளிகள் பெரும் சிரமப்பட்டார்கள். நோயாளர்களுக்கு தேவையான மருந்து வகைகளை பாதுகாப்பாக எடுத்துச் செல்வதற்கு குறித்த பஸ் வண்டிகளில் குளிரூட்டி வசதிகளும் பொருத்தப்பட்டுள்ளன. தற்போது மாத்தளை, நுவரெலியா, அனுராதபுரம்இ ஹங்குரன்-கெத்த, கண்டி, நிக்கவரட்டிய, கொடகவல, கல்கமுவ, முல்லைத்தீவு ஆகிய இடங்களிலிருந்து நாளாந்தம் சேவைகள் நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


புற்றுநோய் வைத்தியசாலைக்கு செல்பவர்களுக்காக விசேட பஸ் சேவை புற்றுநோய் வைத்தியசாலைக்கு செல்பவர்களுக்காக விசேட பஸ் சேவை Reviewed by irumbuthirai on June 11, 2020 Rating: 5

பாடசாலை சீருடைக்கான வவுச்சருக்குப் பதிலாக துணி?

June 11, 2020


பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சீருடைக்கான வவுச்சருக்குப் பதிலாக துணியை வழங்குவதற்கான ஆலோசனையை கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும அமைச்சரவைக்கு முன்வைத்தபோது அதற்கான அனுமதி கிடைத்துள்ளதாக தெரியவருகிறது. 
இதற்காக 210 கோடி ரூபா செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீருடைத் துணிகள் உள்நாட்டில் பதிவு செய்யப்பட்ட ஆடை உற்பத்தியாளர்களிடமிருந்து மாத்திரம் கொள்வனவு செய்யப்படும். 
இலங்கையில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு இலவச சீருடை துணி 1993 முதல் வழங்கப்பட்டு வருகின்றது. 2015 முதல் சீருடை துணிக்குப் பதிலாக வவுச்சர் வழங்கப்பட்டது. தற்பொழுது மீண்டும் துணிகள் வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


சிடிசன்.Lk
பாடசாலை சீருடைக்கான வவுச்சருக்குப் பதிலாக துணி? பாடசாலை சீருடைக்கான வவுச்சருக்குப் பதிலாக துணி? Reviewed by irumbuthirai on June 11, 2020 Rating: 5

வேட்பாளர்களும் இலக்கங்களும் (முழு விபரம் இணைப்பு)

June 10, 2020


2020 பாராளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், அவர்களுக்குரிய இலக்கங்கள் மற்றும் அவர்கள் போட்டியிடும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி அல்லது சுயேச்சைக் குழுவின் பெயர், அதற்குரிய சின்னம் என்பன இங்கு தரப்படுகின்றன. 
வேட்பாளர்களுக்கான இலக்கங்கள் சிங்கள அகராதி அகர வரிசைப்படியே வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த முழு விபரங்கள் அடங்கிய வர்த்தமானியை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.


Name & Numbers

வேட்பாளர்களும் இலக்கங்களும் (முழு விபரம் இணைப்பு) வேட்பாளர்களும் இலக்கங்களும் (முழு விபரம் இணைப்பு) Reviewed by irumbuthirai on June 10, 2020 Rating: 5

தனியார் வகுப்புகள் மற்றும் மத வழிபாட்டுத்தலங்கள் திறப்பு: நிபந்தனைகள் இதோ...

June 10, 2020

தனியார் வகுப்புக்களை மீள ஆரம்பித்தல் மற்றும் மத வழிபாட்டுத்தலங்களில் தனிநபர்கள் ஒன்றுகூடல் தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க அவர்கள் விடுத்துள்ள அறிவிப்பு கீழ்வருமாறு அமையும்: 
01. மதவழிபாட்டுத் தலங்கள்: 
மத வழிபாடுகளுக்காக கீழ்கண்ட வரையறைக்குட்பட்டதாக தனிநபர்கள் ஒன்று கூடுவதற்காக 2020ஆம் ஆண்டு ஜுன் மாதம் 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் அனுமதி வழங்கப்படுகின்றது. 
சுகாதார பாதுகாப்பு தனிநபர்களின் இடைவெளியைப் பாதுகாத்து எத்தகைய மதவழிபாட்டுத் தலங்களிலும் (அந்த வழிபாட்டு தலத்திற்குட்பட்ட கட்டிடத் தொகுதி மற்றும் திறந்தவெளி உள்ளிட்டவை) ஒன்றுகூடக்கூடிய ஆகக்கூடிய எண்ணிக்கை 50 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது. • இருப்பினும் சமூக இடைவெளியை பாதுகாத்து 50 தனிநபர்கள் அல்லது ஒன்றுகூடக்கூடிய இடவசதி இல்லாத மதவழிபாட்டுத் தலங்களில் பொதுவாக அந்த நிலப்பகுதியில் கூடியிருக்கக்கூடிய எண்ணிக்கையில் அரைவாசிக்கு மாத்திரம் ஒரு சந்தர்ப்பத்தில் ஒன்றுகூட முடியும். 
02. தனியார் வகுப்புக்கள்: 
கீழ் குறிப்பிடப்பட்டுள்ள வரையறுக்குட்பட்டவகையில் தனியார் வகுப்புக்களை 2020 ஜுன் மாதம் 29ஆம் திகதி தொடக்கம் மீள ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்படுகின்றது. 
சம்பந்தப்பட்ட மேலதிக வகுப்புக்கள் நடத்தப்படும் இடத்தில் இட அளவிற்கு அமைவாக சமூக இடைவெளியை பாதுகாத்து ஒரு மேலதிக வகுப்புக்காக கலந்துகொள்ளக்கூடிய ஆகக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கை 100 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மாணவர்கள் 100 பேருக்கு (100) அல்லது சம்பந்தப்பட்ட வகுப்பறைக்குள்/ மண்டபத்திற்குள் கற்பித்தலுக்கு வசதியற்ற இடத்தில் பொதுவாக அந்த இடத்தில் மேலதிக வகுப்பில் கலந்துகொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கையில் அரைப்பங்கினர் மாத்திரம் பங்குகொள்வதற்கு அனுமதி வழங்கப்படும். 
இந்த அனைத்து அனுமதியும் வழங்கப்படுகின்றமை COVD 19 வைரசு தொற்று பரவுவதை தடுப்பதற்காக வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டிகளில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினராலும் முழுமையான வகையில் ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கு அமைவாகவேயாகும்.
(அ.த.தி)

தனியார் வகுப்புகள் மற்றும் மத வழிபாட்டுத்தலங்கள் திறப்பு: நிபந்தனைகள் இதோ... தனியார் வகுப்புகள் மற்றும் மத வழிபாட்டுத்தலங்கள் திறப்பு: நிபந்தனைகள் இதோ... Reviewed by irumbuthirai on June 10, 2020 Rating: 5

பாராளுமன்ற தேர்தலுக்கான திகதி அறிவிப்பு

June 10, 2020

ஜூன் 20ஆம் திகதி நடைபெறவிருந்த பாராளுமன்ற பொதுத்தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் 5ஆம் திகதி நடைபெறுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 
225 உறுப்பினர்களை கொண்ட இலங்கை பாராளுமன்றத்தில் 196 உறுப்பினர்கள் வாக்களிப்பு மூலம் தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாராளுமன்ற தேர்தலுக்கான திகதி அறிவிப்பு பாராளுமன்ற தேர்தலுக்கான திகதி அறிவிப்பு Reviewed by irumbuthirai on June 10, 2020 Rating: 5
Powered by Blogger.