க.பொ.த (உ. த) சித்தியடைந்த மாணவர்களுக்கான வட்டியற்ற கடன்



க.பொ.த உயர் தரத்தில் சித்தியடைந்த மாணவர்கள் அரச சார்பில்லாத உயர்கல்வி நிலையங்களில் கற்கை நெறிகளை தொடர்வதற்கு உயர் கல்வி அமைச்சினால் வட்டியற்ற கடன் வழங்கப்படுகிறது. அந்த வகையில் 2016, 2017 மற்றும் 2018 ஆம் வருடங்களில் உ.தரத்தில் சித்தியடைந்த மாணவர்கள் இதற்கான விண்ணப்பங்களை பாடசாலை அதிபர் மூலமாக உறுதிப்படுத்துவதற்கான காலம் ஜூன் 16 வரை நீடிக்கப்பட்டுள்ளது. 
 உயர்கல்வி அமைச்சின் செயலாளரால் கல்வி அமைச்சின் செயலாளருக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளையடுத்து கல்வியமைச்சு இந்த விண்ணப்பத்தை உறுதிப்படுத்துவதற்கான கால எல்லையை நீடிப்பதற்கான நடவடிக்கை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

க.பொ.த (உ. த) சித்தியடைந்த மாணவர்களுக்கான வட்டியற்ற கடன் க.பொ.த (உ. த) சித்தியடைந்த மாணவர்களுக்கான வட்டியற்ற கடன் Reviewed by irumbuthirai on June 15, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.