அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாடு பற்றி அமைச்சரவை கூட்டத்தில் நடந்தது என்ன? அமைச்சர் டலஸ் வெளியிட்ட தகவல்:


அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பாக நேற்றைய தினம் (23) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் சுமார் ஒரு மணித்தியாலம் இது தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். 

நேற்றைய அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று நடைபெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

இந்தப் பிரச்சினை தொடர்பாக அமைச்சரவை உப குழு என்ற வகையில் நாம் எமது அறிக்கைகளை நேற்று சமர்ப்பித்தோம். இது தொடர்பாக சுமார் ஒரு மணித்தியாலம் அளவில் கலந்துரையாடப்பட்டது. எவ்வாறாயினும் நேற்றைய கூட்டத்திற்கு ஜனாதிபதி சமூகம் தரவில்லை. நிதி அமைச்சரிடம் உரிய அறிக்கைகளை 
கடந்த வெள்ளிக்கிழமை சமர்ப்பித்தோம். எனவே இந்த நிலைமைகளைக் கருத்தில் கொண்டு இது தொடர்பான மேலதிக கலந்துரையாடலை எதிர்வரும் அமைச்சரவைக் கூட்டத்தில் மேற்கொண்டு அதன் அடிப்படையில் முடிவு அறிவிக்கப்படும். அந்த வகையில் இது தொடர்பான முடிவு அடுத்த வாரமளவில் தான் அறிவிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாடு பற்றி அமைச்சரவை கூட்டத்தில் நடந்தது என்ன? அமைச்சர் டலஸ் வெளியிட்ட தகவல்: அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாடு பற்றி அமைச்சரவை கூட்டத்தில் நடந்தது என்ன? அமைச்சர் டலஸ் வெளியிட்ட தகவல்: Reviewed by irumbuthirai on August 24, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.